தினமணி 09.09.2010
சுகாதாரப் பயிற்சி முகாம்
வந்தவாசி, செப்.8: வந்தவாசி நகராட்சி சுவர்ண ஜெயந்தி திட்டம் 2009-2010 மூலம் பயன்பெற்ற பயனாளிகளுக்கான சுகாதாரம், சுற்றுச்சூழல், தொழில் முனைதல் குறித்த பயிற்சி முகாம் வந்தவாசி மேற்கு பாடசாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகர்மன்றத் தலைவர் க.சீனுவாசன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் குறித்து வந்தவாசி நகராட்சி ஆணையர் என்.உசேன் பாரூக் மன்னர் பேசினார்.
தொழில் முனைதலும் தொழில் முனைவோரும், தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், சந்தை ஆய்வு, தொழில் நிர்வாகம், தொழில் திட்ட அறிக்கை பற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்ட உதவி மேலாளர் எஸ்.சுபாஷ்சந்திரன், சமூக பயிற்றுநர் டி.கண்ணகி ஆகியோர் பேசினர். சுற்றுப்புற சுத்தம், தன்சுத்தம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை குறித்து வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலக சமுதாய வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் பேசினார்.
நகர்மன்றத் துணைத்தலைவர் வாசுகி, நகராட்சி சமுதாய அமைப்பாளர், பள்ளித் தலைமை ஆசிரியர் க.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.