Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொசு உற்பத்தியை கண்டுபிடிக்கும் மாநகராட்சி ஊழியர்களை வீட்டில் அனுமதிக்க பொதுமக்கள் மறுப்பு

Print PDF
 தினகரன் 02.09.2010

கொசு உற்பத்தியை கண்டுபிடிக்கும் மாநகராட்சி ஊழியர்களை வீட்டில் அனுமதிக்க பொதுமக்கள் மறுப்பு

புதுடெல்லி, செப். 2: கொசு மருந்து ஊழியர்களை வீட்டினுள் அனுமதிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாள்கணக்கில் தேங்கி நிற்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள்தான் டெங்குவை பரப்பி வருகின்றன. அதனால், வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா? அதில் கொசுக்கள் உற்பத்தியாகிறதா? என்பதை கண்டுபிடிப்பதற்கென சுமார் 4 ஆயிரம் தற்காலிக ஊழியர்களை மாநகராட்சி நியமித்துள்ளது. அவர்கள் வீடுதோறும் சென்று, கொசுக்கள் உற்பத்தியாகின்றதா? என்று சோதனையிடுகிறார்கள். அதனடிப்படையில், கொசுக்களை உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு அபராதத்தை மாநகராட்சி விதித்து வருகிறது. சோதனையிடும் வீடுகளில் கொசு ஒழிப்பு மருந்தையும் ஊழியர்கள் அடித்து விட்டு வருவார்கள்.

இதனிடையே சில பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க பொதுமக்கள் மறுத்து விட்டனர். இதுபற்றி மேயர் பிருத்வி ராஜ் சகானியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மாநகராட்சி ஊழியர்கள் அவர்களது வேலையை பார்க்கிறார்கள். அவர்கள் வீடுகள் மட்டுமல்ல, காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில்கூட கொசுக்கள் உற்பத் தியாகிறதா? என்று சோதனையிடுகிறார்கள்.

இந்த ஆண்டு டெங்கு தீவிரமாக பரவுவதற்கு காமன்வெல்த் போட்டி பணிகளும் ஒரு முக்கிய காரணமாகும். டெங்கு பரவலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டாயம் கட்டுப்படுத்திவிடுவோம். எனவே, டெங்கு ஒழிப்புப் பணியில் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பணிநிரந்தரம் செய்யக்கோரி செப்டம்பர் 6ம்தேதியில் இருந்து வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ள கொசு மருந்து ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும். காமன்வெல்த் போட்டிகள் முடிந்தபிறகு அவர்களது பிரச்னைகள் களையப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.

 

ரூ1.5 கோடி செலவில் மும்பை கடலோரம் சுத்தப்படுத்தப்படுகிறது மாநகராட்சி அதிரடி திட்டம்

Print PDF

தினகரன் 02.09.2010

ரூ1.5 கோடி செலவில் மும்பை கடலோரம் சுத்தப்படுத்தப்படுகிறது மாநகராட்சி அதிரடி திட்டம்

மும்பை, செப். 2: ரூ.1.5 கோடி செலவில் மும்பை கடலோரத்தை சுத்தப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மகாலட்சுமி கோயில் அருகே உள்ள குலிஸ்தான் ஹவுசிங் சொசைட்டியை சேர்ந்தவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தனர். அதில் மும்பை கடலோரங்கள் அசுத்தமாக இருப்பதாகவும் சுத்தப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடலோரத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ரூ.1.5 கோடி செலவில் மும்பை கடலோரத்தை சுத்தப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஹாஜி அலி முதல் ஒர்லி கிராம் வரை 18 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதைபோல கொலாபா முதல் தார்டுதேவ் வரை 14 பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் தினமும், அலையின் வேகம் குறைவாக இருக்கும் அதிகாலை வேளையில் சுத்தம் செய்யும் பணி நடைபெற இருக்கிறது. 3 லாரிகள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.

தினமும் 8 மெட்ரிக் டன் கழிவுகள் இப்பகுதிகளில் இருந்து கிடைக்க கூடும் என மாநகராட்சி திடக்கழிவு நிர்வாக தலைமை பொறியாளர் பி.பி. பாட்டீல் கூறினார்.

தினமும் 8 மெட்ரிக் டன் கழிவுகள் இப்பகுதிகளில் இருந்து கிடைக்க கூடும் என மாநகராட்சி திடக்கழிவு நிர்வாக தலைமை பொறியாளர் பி.பி. பாட்டீல் கூறினார் நுங்கம்பாக்கம், மாம்பலம், நந்தனம் மழைநீர் கால்வாய்கள் ரூ68 கோடியில் சீரமைப்பு

சென்னை, செப்.2: நுங்கம்பாக்கம் கால்வாய், மாம்பலம் மற்றும் நந்தனம் கால்வாய் கொடுங்கையூர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் ரூ68 கோடியில் நடக்கிறது. இந்த பணி 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாநகராட்சி சார்பில், நுங்கம்பாக்கம் கால்வாய் 900 மீட்டர் நீளத்திற்கும், 9 மீட்டர் அகலத்திற்கும் தூர்வாரி சீரமைக்கும் பணி ரூ4.6 கோடியில் நடக்கிறது. இதை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் மேயர் கூறியதாவது:

சென்னையில் அடையாறு, கூவம் உட்பட 22 நீர் வழித்தடங்கள் உள்ளன. பொதுமக்கள் இந்த நீர்வழித்தடங்களில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், கொசு உற்பத்திக்கு வழி ஏற்படுகிறது. இதை மாற்றி சிங்காரச் சென்னையை உருவாக்க முதல்வர் கருணாநிதி உத்தரவின்படியும், துணை முதல்வர் மு..ஸ்டாலின் அறிவுரைப்படியும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக நீர்வழித்தடங்கள் தூர்வாரும் பணிகளுக்காகவும், மழைநீர் வடிகால்வாய்களை சீரமைப்பதற்காகவும் ரூ1,448 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் ரூ638 கோடியும், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ811 கோடியும் செலவிடப்படும். பொதுப்பணித்துறை சார்பில் பக்கிங்காம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சி சார்பில் நுங்கம்பாக்கம் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், மாம்பலம் & நந்தனம் கால்வாய் ஆகியவை ரூ68.35 கோடியில் 13 ஆயிரத்து 75 மீட்டர் நீளத்திற்கு சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்த கால்வாய்களில் இருபுறமும் சிமென்ட் கான்கிரீட் சுவர்கள் 8 அடியில் அமைக்கப்பட்டு, அதன் மீது 4 அடி கம்பி வேலி அமைக்கப்படும். கால்வாயில் தண்ணீர் வேகமாக செல்வதற்காக கான்கிரீட் தரை தளம் அமைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நீர்வழித்தடங்களில் குப்பை கொட்டுவது தடுக்கப்படும். மழைநீர் தேக்காமல் செல்வதற்கான பாதை சீரமைக்கப்படுகிறது. இந்த பணிகள் படிப்படியாக 2 ஆண்டுக்குள் முடிக்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.

2 ஆண்டில் பணி முடியும் 326 கி.மீ நீளத்திற்கு மழைநீர் கால்வாய் "புதிய மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணிகள் வேளச்சேரி நீர்பிடிப்பு பகுதி, கொளத்தூர் நீர்ப்பிடிப்பு பகுதி, வடக்கு பக்கிங்காம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதி, மத்திய பக்கிங்காம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதி, மாம்பலம் மற்றும் நந்தனம் கால்வாய்நீர்ப்பிடிப்பு பகுதி, தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதி, ராயபுரம் நீர்ப்பிடிப்பு பகுதி, கூவம் நீர்ப்பிடிப்பு பகுதி, கேப்டன் காட்டன் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதி ஆகிய 9 பகுதிகளில் 326.36 கி.மீ. நீளத்திற்கு ரூ527.91 கோடி செலவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளும் படிப்படியாக 2 ஆண்டிற்குள் முடிக்கப்படும்" என்றார் மேயர்.

 

டெங்கு பரவி வரும் நிலையில் கொசு மருந்து தெளிப்பு ஊழியர் ஸ்டிரைக் அறிவிப்பு

Print PDF

தினகரன் 31.08.2010

டெங்கு பரவி வரும் நிலையில் கொசு மருந்து தெளிப்பு ஊழியர் ஸ்டிரைக் அறிவிப்பு

புதுடெல்லி,ஆக.31: டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சியில் பணிபுரியும் கொசு உற்பத்தி தடுப்பு ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் நகரமே கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. நாளுக்கு நாள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800ஐ தாண்டி விட்டதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வீட்டுக்கு வீடு சென்று கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியை மாநகராட்சியின் 3,200 தற்காலிக ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் பணியை நிரந்தரம் செய்யக்கோரி செப்டம்பர் 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.டெல்லியில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் காமன்வெல்த் விளையாட்டு போட் டிகளும் தொடங்க இருக்கின்றன. இந்த சமயத்தில் கொசு உற்பத்தி தடுப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது, மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, "மாநகராட்சியில் இப்போதுள்ள நிதி நெருக்கடியில் 3,200 கொசு தடுப்பு ஊழியர்களின் பணியை நிரந்தரம் செய்ய இயலாது. ஏற்கனவே மாநகராட்சியில் பணியாற்றிவரும் சுமார் 7,000 துப்புரவு தொழிலாளர்கள் சமீபத்தில்தான் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்" என்றார்.

மேயர் எச்சரிக்கை மாநகராட்சி மேயர் சகானி கூறியதாவது:

டெங்கு காய்ச்சலால் டெல்லியே பரிதவித்து வரும் போது, கொசு மருந்து தெளிப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நல்லதல்ல. காமன்வெல்த் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. இப்போது வேலை நிறுத்தம் செய்வது நாட்டுக்கு இழைக்கும் துரோகம். அதனால், வேலை நிறுத்த அறிவிப்பை கொசு மருந்து தெளிப்பு ஊழியர்கள் கைவிட வேண்டும். இதை ஏற்காமல் வேலை நிறுத்தத்தில் அவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள். கொசு மருந்து தெளிப்பு பணியில் சேர தினமும் பலரிடமிருந்து விண்ணப்பங்கள் வருகிறது. அதனால், புதியவர்களை நியமனம் செய்வது ஒரு பிரச்னையாக இருக்காது. காமன்வெல்த் போட்டி முடிந்த பின், கொசு மருந்து தெளிப்பு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு சகானி கூறினார்.

டெங்குவுக்கு சிறுவன் பலி

டெங்கு காய்ச்சலுக்கு 11 வயது சிறுவன் நேற்று பலியானான். இதையடுத்து, டெங்குவுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 63 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களையும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 863 ஆக உயர்ந்தது. இதற்கிடையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அனிகேஷ் என்ற 11 வயது சிறுவன் நேற்று இறந்தான். இவனையும் சேர்த்து டெங்குவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, "மாநகராட்சியில் இப்போதுள்ள நிதி நெருக்கடியில் 3,200 கொசு தடுப்பு ஊழியர்களின் பணியை நிரந்தரம் செய்ய இயலாது. ஏற்கனவே மாநகராட்சியில் பணியாற்றிவரும் சுமார் 7,000 துப்புரவு தொழிலாளர்கள் சமீபத்தில்தான் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்" என்றார்.

 


Page 176 of 519