Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஆரணியில் சுகாதாரத் துறை திடீர் ஆய்வு: காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினமணி 26.08.2010

ஆரணியில் சுகாதாரத் துறை திடீர் ஆய்வு: காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

ஆரணி, ஆக.25: ஆரணி நகரக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை சுகாதாரத் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.சுகாதாரத்துறை சார்பில் டாக்டர்கள் செந்தில்குமார், ஐங்கரன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் ஆரணி பகுதியில் உள்ள குளிர்பானக்கடைகள், டாஸ்மாக் பார்கள் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

தென்காசி, வள்ளியூரில் காலாவதி தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு

Print PDF

தினமணி 26.08.2010

தென்காசி, வள்ளியூரில் காலாவதி தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு

தென்காசி, ஆக. 25: தென்காசி பகுதியில் காலாவதி குடிநீர் பாக்கெட்டுகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.தென்காசி நகர்மன்ற ஆணையர் செழியன் தலைமையில், உணவு ஆய்வாளர் ஹக்கீம், உணவு ஆய்வாளர் (பயிற்சி) மகராஜன், துப்புரவு அலுவலர் டெல்விஷ்ராய், ஆய்வாளர் சேகர், மேற்பார்வையாளர் காசிம், தங்கவேலு மற்றும் அதிகாரிகள் தென்காசி பகுதியிலுள்ள மதுக் கூடங்கள், கடைகளில் காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

தென்காசி காசிவிசுவநாதர் கோயில், சன்னதிபஜார் பகுதிகளில் உள்ள கடைகளிலும், காலாவதியான மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட நாள் குறிப்பிடாமல் விற்க வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 30 ஆயிரம்.வள்ளியூர் பகுதியில்...: வள்ளியூர் பகுதிகளில் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை சுகாதாரத் துறையினர் செவ்வாய்க்கிழமை அழித்தனர்.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரான்முகைதீன் உத்தரவின் பேரில் அவரது நேர்முக உதவியாளர் அருணாசலம் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மனோகரன், உணவு ஆய்வாளர் தம்பரதானு, சுகாதார ஆய்வாளர்கள் சந்திரசேகர், ரகுபதி, மோரீஸ், பாலசுப்பிரமணியன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வடக்கன்குளம், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர் ஆகிய பகுதிகளில் கடைகளில் சோதனையில் மேற்கொண்டனர்.அப்போது, காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை கண்டுபிடித்து அவற்றை அழித்தனர்.

 

குடிநீர், காலாவதி உணவு பொருள்கள் குறித்த ஆய்வு

Print PDF

தினமணி 26.08.2010

குடிநீர், காலாவதி உணவு பொருள்கள் குறித்த ஆய்வு

திருப்பத்தூர், ஆக. 25: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், கல்லல், காரைக்குடி ஆகிய ஊர்களில் குடிநீர் மற்றும் காலாவதி உணவுப் பொருள் குறித்து சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

புதன்கிழமை மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் ரகுபதி தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் காலை 10 மணியளவில் கல்லலில் கலப்படப் பொருள் ஆய்வைத் தொடங்கினர். கல்லல் மற்றும் காரைக்குடிப் பகுதிகளில் இரண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் சிறு தவறுகளைத் திருத்திக் கொள்ள எச்சரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் பஸ் நிலையம், மதுரை ரோடு, உள்ளிட்ட கடைகளில் இருந்த தேதியில்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்கள், பாதாம் பால் பாட்டில்கள் முதலியன பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில சுகாதாரத் துறை இயக்குநரின் உத்தரவின் பேரில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர் ரகுபதி, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ரமேஷ், சுகாதாரப் பணிகளின் நேர்முக உதவியாளர் ராஜா, மருத்துவ அலுவலர்கள் செந்தில்குமார், ராஜ்குமார் திருப்பத்தூர் உணவு ஆய்வாளர் சுரேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்டு, திருப்பத்தூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் ஆகியோர் ஆய்வுப் பணி மேற்கொண்டனர். ஆய்வில் சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் குடிநீர்ப் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, பேரூராட்சி அலுவலகம் முன் அழிக்கப்பட்டது.

 


Page 182 of 519