தினமலர் 26.08.2010
தென்காசி டாஸ்மாக் பார்களில் காலாவதியான தண்ணீர் பாக்கெட் பறிமுதல்
தென்காசி : தென்காசி டாஸ்மாக் பார்களில் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், பொது சுகாதாரத்துறை இயக்குநர் பொற்கை பாண்டியன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் மோகன் உத்தரவின் பேரில் தென்காசி நகராட்சி கமிஷனர் செழியன் தலைமையில் உணவு ஆய்வாளர் ஹக்கீம், துப்புரவு அலுவலர் டெல்விஸ்ராய், உணவு ஆய்வாளர் (பயிற்சி) மகராஜன், துப்புரவு ஆய்வாளர் சேகர், மேற்பார்வையாளர்கள் காசிம், தங்கவேல் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தென்காசி பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் காலாவதியான தண்ணீர் பாக்கெட் விற்பனை செய்யப்படுகிறதா என அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் காலாவதியான தண்ணீர் பாக்கெட் மூடைகள் கண்டு பிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று இனி காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சில கடைகளிலும் நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.