Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நெல்லையில் 2 வது நாளாக சோதனை: ரூ. 30 ஆயிரம்: போலி தண்ணீர் பாக்கெட், குளிர்பானம் பறிமுதல்

Print PDF

தினமணி 28.04.2010

நெல்லையில் 2 வது நாளாக சோதனை: ரூ. 30 ஆயிரம்: போலி தண்ணீர் பாக்கெட், குளிர்பானம் பறிமுதல்

திருநெல்வேலி, ஆக. 24: திருநெல்வேலியில் 2-வது நாளாக மாநகராட்சி சார்பில் கடைகளில் மேற்கொண்ட திடீர் சோதனையில், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள போலி தண்ணீர் பாக்கெட்,குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் பொற்கை பாண்டியன், இணை இயக்குநர் சதாசிவன் ஆகியோர் தமிழகம் முழுவதும் ஐ.எஸ்.. முத்திரை இல்லாமலும், தரக்குறைவாகவும் விற்கப்படும் போலி தண்ணீர் பாக்கெட்டுகளை திடீர் சோதனை மூலம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர்.அதன்படி தமிழகம் முழுவதும் இச் சோதனையை சுகாதாரத் துறையினர் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை செய்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி சுகாதாரத் துறையினர், சந்திப்பு பஸ் நிலையம், .மு.சாலை ஆகியப் பகுதிகளில் உள்ள குளிர்பானக் கடைகளிலும்,பெட்டிக் கடைகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இச் சோதனையில் ஐ.எஸ்.. முத்திரை இல்லாமலும், தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாமலும் இருந்த போலி தண்ணீர் பாக்கெட், குளிர்பானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல காலாவதியான சிப்ஸ்,பிஸ்கட் போன்ற உணவு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வசந்தாநகரில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு கிட்டங்கியில் சோதனையிட்டதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள போலி தண்ணீர் பாக்கெட்,குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனையில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் அ.ரா.சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர் சாகுல்ஹமீது மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.மாநகராட்சி அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச் சோதனை இனி அடிக்கடி நடத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

பாக்கெட் குடிநீரின் தரம் ஆய்வு சுகாதாரத் துறையினர் நடவடிக்கை

Print PDF

தினமலர் 25.08.2010

பாக்கெட் குடிநீரின் தரம் ஆய்வு சுகாதாரத் துறையினர் நடவடிக்கை

விழுப்புரம் : தமிழகத்தில் விற்பனையாகும் பாக்கெட் குடிநீரின் தரத்தினை சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு மேற் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் உணவுப் பொருட்களில் கலப்படம், சுகாதார சீர்கேடு குறித்து ஆய்வு செய்ய சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.இக் கூட்டத்தில் உணவுப் பொருட்கள் கலப்படத்தை தடுத்தல், பாக் கெட் குடிநீர் விற்பனையை ஆய்வு செய்தல் குறித்து ஆலோசிக்கப்பட் டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாக் கெட் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற் கொண்டு, குடிநீரின் தரம் குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டிருந் தார்.சுகாதாரத் துறையினர், மாநகராட்சி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வினை மேற் கொண்டுள்ளனர். விழுப்புரம் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர் கள் முருகேசன், செபஸ் டின் ஆகியோர் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரத்தில் பாக் கெட் குடிநீர் தயாரித்து விற்பனை செய்யும் வைகை ஏஜன்சிஸ் (விகேர்), பாலாஜி ஏஜன்சிஸ் (ஜலதரா), விக்னேஷ் ஏஜன்சீஸ் (ட்ரு) விற்பனையகங்களில் ஆய்வு செய்து குடிநீர் மாதிரிகளை சேகரித்தனர்.ஒவ்வொரு நிறுவனத் தின் குடிநீர் மாதிரிகளை (தலா 4 லிட்டர்) எடுத்து அதனை ஆய்வுக்காக சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு (கிங் இன்ஸ்டிடியூட்) மையத்திற்கு சீல் வைத்து அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் தரம் குறித்து ஆய்வு அறிக்கை அளிக்கப்பட உள்ளது.

 

சுகாதாரத்துறையினர் கடைகளில் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர் 25.08.2010

சுகாதாரத்துறையினர் கடைகளில் திடீர் ஆய்வு

ராசிபுரம்: அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகுடீஸ்வரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், வெங்காடஜலம், பாபு மற்றும் சுகாதார துறையினர், ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் மற்றும் குருசாமிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள டீ கடை, பேக்கரி, குளிர்பான கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.குடிநீர் பாக்கெட், பாட்டில்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். அவை குறிப்பிடப்படாத குடிநீர் பாக்கெட், பாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், பொது இடத்தில் புகைபிடித்தவர்களுக்கும், பீடி, சிகரெட் விற்கும் கடைகளில் எச்சரிக்கை பலகை வைக்காதவர்களுக்கும் அபாராதம் விதித்து, 800 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. நாமகிரிப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் சத்தியலட்சுமி, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஞானசுந்தரம் ஆகியோர் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஹரிஹரசுப்ரமணி, சுதாதார ஆய்வாளர்கள், உணவு ஆய்வாளர் உள்ளிட்ட குழுவினர் 30க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர். கடைகளில் காலாவதி மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத உணவு பாக்கெட்டுகள், தண்ணீர் பாக்கெட், பாட்டில்களை பறிமுதல் செய்து அளித்தனர். பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டது.

 


Page 185 of 519