Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நெல்லை, எட்டயபுரத்தில் தரம் இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினகரன் 24.08.2010

நெல்லை, எட்டயபுரத்தில் தரம் இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

நெல்லை, ஆக. 24: தமிழகம் முழுவதும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம், மேலப்பாளையம் உதவி வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் ஷாகுல் ஹமீது, அரசகுமார், இசக்கிமுத்து, முருகேசன், துப்புரவு ஆய்வாளர்கள் பரமசிவம், வேலாயுதம், ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.

இதில் புதிய பஸ் நிலைய கடைகளில் உள்ள அழுகிய பழங்கள், ஐஎஸ்ஐ முத்திரையில்லாத தண்ணீர் பாக்கெட்டுகள், கலப்பட தேயிலை பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் புதிய பஸ் நிலையத்தில் விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டன. ஒரு வாகனத்திற்கு ரூ.50 செலுத்தி உரிமையாளர்கள் வாகனத்தை மீட்டு சென்றனர்.

இச்சோதனை காரணமாக புதிய பஸ் நிலையத்தில் மேலப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எட்டயபுரம்: கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ரால்ப் செல்வின் உத்தரவின்பேரில் கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மோசஸ்பால் தலைமையில் எட்டயபுரம் பேரூராட்சி உணவு ஆய்வாளர் மாரிச்சாமி, சுகாதார ஆய்வாளர்கள் முருகராஜ், கோபாலகிருஷ்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட உணவு விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான உணவு பொருட்கள், குடிநீர் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், தேதி குறிப்பிடப்படாத பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

 

சிவகாசியில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு நகராட்சி சுகாதாரத்துறையினர் நடவடிக்கை

Print PDF

தினகரன் 24.08.2010

சிவகாசியில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு நகராட்சி சுகாதாரத்துறையினர் நடவடிக்கை

சிவகாசி, ஆக. 24:சிவகாசியில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட மினரல் வாட்டர் குடிநீர் பாக்கெட்டுகள், கேன்களை நகராட்சி சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

சிவகாசி நகராட்சி பகுதியில் ஏராளமான மினரல் வாட்டர் கம்பெனிகள் உள்ளன. மினரல் வாட்டர் பாக்கெட் மற்றும் கேன்களை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விற்பனை செய்கின்றனர். பல நிறுவனங்கள் ஐஎஸ்ஐ சான்றிதழை புதுப்பிக்காமல் விற்பனை செய்வதாக நகராட்சி சுகதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

நகராட்சி சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் உணவு ஆய்வாளர் முத்துமாரியப்பன், சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், பாலகிருஷ்ணன் அடங்கிய சுகாதார குழுவினர் நேற்று நகரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சிவகாசி பஸ்நிலைய பகுதி, பைபாஸ் ரோடு, என்.ஆர்.கே.ஆர். ரோடு, போலீஸ் ஸ்டேசன் ரோடு, .எஸ்.கே.டி. ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், மினரல் வாட்டர் ஏஜென்சி நிறுவனங்கள், டீலர்கள் ஆகியோரிடம் சோதனை செய்தனர்.

ஆய்வில் ஐஎஸ்ஐ சான்றிதழ் இல்லாமல், சான்றிதழை புதுப்பிக்காமல் விற்பனை செய்யப்பட்ட 250 மில்லி குடிநீர் பாக்கெட்டுகள் இரண்டு மூடை, 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 மினரல் வாட்டர் கேன்கள், 2 லிட்டர் பாட்டில்கள் 12 முதலியனவை பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் (பொறுப்பு) முருகன் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

மேலும் சிவகாசியிலுள்ள ஒரு மினரல் வாட்டர் நிறுவனத்திலிருந்து சுமார் 15 பாக்கெட் 2 லிட்டர் மினரல் வாட்டர் பாக்கெட்டுகளின் மாதிரிகள் எடுக்கபட்டு சென்னை கிண்டியுள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

நகராட்சி சுகாதாரத்துறையினர் கூறுகையில், ‘மினரல் வாட்டர்களில் ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ்கள் கட்டாயம் இருக்க வேண்டும். உரிமம் புதுப்பிக்கபட்டிருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் வாங்கிய ஐஎஸ்ஐ தரச்சான்றிதழை மீண்டும் புதுப்பிக்காமல் விற்பனை செய்யக்கூடாது. அப்படி விற்பனை செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்என்றனர்.

 

நகராட்சி கமிஷனர் அட்வைஸ் : மழைகாலம் துவங்குவதால் சுகாதாரம் அவசியம் தேவை

Print PDF

தினமலர் 24.08.2010

நகராட்சி கமிஷனர் அட்வைஸ் : மழைகாலம் துவங்குவதால் சுகாதாரம் அவசியம் தேவை

திருத்துறைப்பூண்டி: "திருத்துறைப்பூண்டி நகராட்சிப்பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள், பொது இடங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்' என திருத்துறைப்பூண்டி நகராட்சி கமிஷனர் திருமலைவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபற்றி, மேலும் அவர் கூறியதாவது: வரும் காலங்களில் வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளதால் மழை நீர் தேங்கும் பொருட்களில் பகலில் கடிக்கும் கொசுக்களான ஏடிஸ் வகை கொசு உற்பத்தியாகும். இவ்வகை கொசு மூலம் ஆல்ஃபா வைரஸ் கிருமி மூலம் சிக்-குன்-குனியா எனும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதை தடுக்க கொசு உற்பத்தியை தடுத்தல் மற்றும் கொசு உற்பத்தி இடங்களை அழித்தலாகும். இக்கொசுக்கள் நன்னீர் தேங்கும் இடங்கள் மூலலே உருவாகிறது. கண்ணாடி குடுவை, தேங்காய் மூடி, சிமெண்ட் தொட்டி, உடைந்த பூந்தொட்டி, ஆட்டும் உரல், பிளாஸ்டிக் டிரம், பிளாஸ்டிக் கலன், டயர், தார் டிரம் போன்ற பொருட்களில் மழைநீர் தேங்குவதால், கொசு உற்பத்தியாவதுடன், சிக்-குன்-குனியா ஏற்பட வாய்ப்புள்ளது.

கொசு உற்பத்தியாகும் வகையில் எவரேனும் தங்கள் வளாகத்தை பராமரிப்பின்றி வைத்திருந்தால் சுகாதார விதிகளின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 


Page 187 of 519