Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நெல்லை ஸ்வீட் குடோனுக்கு 2வது முறையாக சீல் வைப்பு

Print PDF

தினகரன் 20.08.2010

நெல்லை ஸ்வீட் குடோனுக்கு 2வது முறையாக சீல் வைப்பு

நெல்லை, ஆக.20: நெல்லை சந்திப்பு பகுதி யில் இயங்கி வரும் ஒரு ஸ்வீட் ஸ்டாலுக் கான கேக் மற்றும் ரொட்டி, தயாரிக்கும் குடோன் கைலாசபுரம் நடுத்தெருவில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியாகும் புகையினால் சுகாதார கேடு, சுவாச கோ ளாறு ஏற்பட்டு வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.

கமிஷனர் சுப்பையன் உத்தரவின் பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அப்பகுதியில் நேரடி ஆய்வு நடத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு சுகா தார சீர்கேட்டை விளைவிக் கும் வகையில் அக் குடோன் இருப்பதாக குழு அறிக்கை யில் தெரிவித்தது. எனவே மாநகராட்சி சுகா தார அதிகாரிகள் குடோ னுக்கு ஜூன் 18ம் தேதி சீல் வைத் தனர்.

கடந்த 10 தினங்களுக்கு முன்புஅக்குடோனில் மீண்டும் ஸ்வீட் தயாரிக்கும் பணிகள் நடப்பதாக மாநகராட்சிக்கு தகவல் கிடைத் தது. அதிகாரி கள் மீண்டும் அங்கு சீல் வைக்க சென்ற போது, குடோன் உரிமையாளர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. எனவே அம்முயற்சி கைவிடப்பட்டது. மாநகராட்சி அதிகாரி கள் முறையான ஆவணங் களை காட்டி, சீல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர் பாக போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் பாலம் போலீசார் குடோன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நேற்று பிற்பகலில் மாநகராட்சி உதவி கமிஷனர் சுல்தானா தலைமையிலான அதிகாரிகள் குடோனுக்கு சென்று 2வது முறையாக நோட்டீஸ் ஒட்டி சீல் வைத் தனர். போலீஸ் உதவி கமிஷனர் லயோலா இக்னேஷியஸ், இன்ஸ்பெக்டர் சிவசுப்பு தலைமையில் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

மாநகராட்சி ஊழியர்களை ஆபாசமாக திட்டி மிரட்டிய வழக்கில் சுவீட் கடை ஊழியர்களான சிந்தா உசேன் (34), தாகீர் (20), பால்பாண்டி (20), முகம்மதுஅக்பர்ஷா (27), மாரியப்பன் (27), மாரியப்பன் (40), செய்யது (51), இசக்கிமுத்து (32), முகம்மது (26), திப்பு சுல்தான் (21), முகம் மதுஅலி (23) ஆகிய 11 பேரை நெல்லை ஜங்ஷன் போலீசார் கைது செய் தனர்.

நெல்லையில் உள்ள ஸ்வீட் குடோனுக்கு சுகாதார சீர்கேடுகளை காரணம் காட்டி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று 2வது முறையாக சீல் வைத்தனர்

 

டெங்கு பரவுவதை தடுக்க கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துங்கள் அதிகாரிகளுக்கு ஆசாத் உத்தரவு

Print PDF

தினகரன் 20.08.2010

டெங்கு பரவுவதை தடுக்க கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துங்கள் அதிகாரிகளுக்கு ஆசாத் உத்தரவு

புதுடெல்லி, ஆக.20: டெல்லியில் டெங்கு காயச்சல் பரவுவதை தடுக்க கொசு உற்பத்தியாவதை தடுத்து நிறுத்துங்கள் என்று அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே டெங்கு காய்ச்சல் பரவ ஆரம்பித்து விட்டது. டெங்கு காய்ச்சலுக்கு முக்கிய காரணம் கொசுதான். டெல்லியில் பல இடங்களில் கழிவு நீர் தேங்கியிருப்பதாலும், கட்டுமான கழிவுகள் பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளதாலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.

டெல்லியில் இதுவரை 297 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 4 பேர் இறந்துள்ளனர் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனினும், தனியார் மருத்துவமனைகள், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகம் கூறுகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் நேற்று ஆலோசனை நடத்தினார். கொசு அதிகளவில் உற்பத்தியாவதால்தான் டெங்கு காய்ச்சல் பரவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய தொற்று நோய் கட்டுப்பாடு மையம், கொசுக்கள் மூலம் பரவும் நோய் கட்டுப்பாடு திட்டம்,, மத்திய சுகாதார சேவை இயக்குனரகம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவை ஆசாத் நியமித்துள்ளார்.

டெல்லியில் டெங்கு பரவுவதை தடுக்க கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதிகளுக்கு அதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்என்று ஆசாத் கேட்டு கொண்டார்

 

குடிநீர் பரிசோதனை ஆய்வகம் துவக்கம்

Print PDF

தினமலர் 20.08.2010

குடிநீர் பரிசோதனை ஆய்வகம் துவக்கம்

முசிறி: முசிறியில், நடந்த குடிநீர் ஆய்வக துவக்க விழாவில் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மாதவன் வரவேற்றார்.

யூனியன் ஆணையர்கள் பன்னீர்செல்வம், அனுசுயா முன்னிலை வகித்தனர். குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக மாறன் தலைமை வகித்தார். முசிறி யூனியன் சேர்மன் மனோண்மணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் முசிறி உபகோட்டத்தில் தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் நிதி உதவியுடன் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய ஆய்வகத்தை துவக்கி வைத்தார்.

குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மாதவன் கூறியதாவது: தொட்டியம், முசிறி, தா.பேட்டை, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய ஐந்து யூனியனை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் ஆதாரங்களை தர ஆய்வு செய்து, தொடர்ந்து கண்காணிக்கும் பொருட்டு புதிய ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத்தில் குடிநீரின் தரம் பரிசோதனை, நீரில் உள்ள கார, உப்பு தன்மை, நீரின் அமிலத்தன்மை, புளோரைடு, சல்பேட்டு உப்பு அளவு கண்டறிதல் உட்பட பல்வேறு பரிசோதனை செய்து கொள்ளவும், கிராமங்களில் உள்ள குடிநீர் தரத்தை பரிசோதிக்கவும், கைபம்பு மின் விசை மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் சேகரிக்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கு தகுதியானதா என்பது பற்றி பரிசோதனை செய்து கொள்ளலாம்.

நோய்களை கட்டுப்படுத்தவே குடிநீர் ஆதாரங்களின் தர பரிசோதனை செய்யப்பட மாவட்ட அளவில் மட்டுமே இருந்த ஆய்வகம் தற்போது யூனியன் அளவிலும் செயல்படுத்தும் நோக்கில் முசிறியில் குடிநீர் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 


Page 189 of 519