Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

"வீட்டைபோல் வீதியையும் சுத்தமாக வைத்திருங்கள்'

Print PDF

தினமணி 13.08.2010

"வீட்டைபோல் வீதியையும் சுத்தமாக வைத்திருங்கள்'

புதுச்சேரி, ஆக. 12: புதுச்சேரி நகராட்சி சார்பில் தீவிர துப்புரவு வார விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி, அண்ணா சிலை அருகில் வியாழக்கிழமை நடந்தது.

இதில் முதல்வர் வி.வைத்திலிங்கம் கலந்து கொண்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கினார்.

துண்டு பிரசுரத்தில் உள்ள விவரம்:

உங்கள் வீóட்டை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறீர்களோ, அதைப்போல் வீதியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீதிக்கு ஒரு குழு அமைத்து தமக்கு தாமே தங்கள் வீதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை, மக்கும் மற்றும் மக்கா குப்பை என்று தனித் தனியே பிரித்து பைகளில் சேகரித்து, துப்புரவு ஊழியர்கள் வரும்போது கொடுக்க வேண்டும்.

ஒருபோதும் குப்பைகளை வீதியில் கொட்டக்கூடாது. கட்டட கட்டுமான பொருள்களை போக்குவரத்துக்கு இடையூறாகவும், கழிவுநீர் செல்ல தடையாகவும் இருக்கும் விதத்தில் வீதிகளில் கொட்டக்கூடாது. இடிக்கப்பட்ட கட்டட பொருள்களை உடனுக்குடன் தங்கள் சொந்த செலவிலேயே அப்புறப்படுத்துதல் வேண்டும்.

டீக்கடைகளிலோ, பொது இடங்களிலோ, காபி, டீ அருந்திய கோப்பைகளை அட்டை பெட்டியில் சேகரித்து வைத்து, துப்புரவு ஊழியர் வரும்போது ஒப்படைக்க வேண்டும். மக்கும் தன்மையற்ற மெல்லிய பிளாஸ்டிக் பைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டு, கழிவுநீரோடையில் அடைப்பு ஏற்படவும், அதனால் கொசு உற்பத்திக்கும் காரணமாகிறது. அதனால் மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களை அறவே தவிர்த்தல் வேண்டும் என்று துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

துண்டு பிரசுரம் விநியோக நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஷாஜகான், உள்ளாட்சித்துறை அமைச்சர் எ.நமச்சிவாயம், நகர்மன்றத் தலைவி பி.ஸ்ரீதேவி, நகராட்சி ஆணையர் டி.அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ஸ்வீட் ஸ்டால் குடோனுக்கு "சீல்' வைக்க முயற்சி:நெல்லை மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதம்

Print PDF

தினமலர் 13.08.2010

ஸ்வீட் ஸ்டால் குடோனுக்கு "சீல்' வைக்க முயற்சி:நெல்லை மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதம்

திருநெல்வேலி:நெல்லையில் ஸ்வீட் ஸ்டால் குடோனுக்கு மீண்டும் "சீல்' வைக்க சென்ற மாநகராட்சி அலுவலர்களுக்கும், குடோன் உரிமையாளர் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.நெல்லை ஜங்ஷன் கைலாசபுரம் நடுத்தெருவில் ஸ்வீட் ஸ்டால் குடோன் உள்ளது. இங்கு அல்வா, கேக், ரொட்டி உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. குடோன் சுகாதாரக்கேடாக இருப்பதாக கூறி மாநகராட்சி சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14ம்தேதி தடையாணை பிறப்பித்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். அதே மாதம் 17ம்தேதி குடோனுக்கு தச்சநல்லூர் மண்டல உதவி கமிஷனர் சுல்தானா உள்ளிட்ட அலுவலர்கள் சீல் வைத்தனர்.

சீல் வைக்கப்பட்ட குடோனில் ஊழியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் சீலை அகற்றி ஊழியர்களை விடுவித்தனர். குடோனில் சரக்குகள் தயாரிக்கப்படும் இடத்திற்கு செல்லும் பாதையில் இருந்த கதவை மூடி மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.நேற்றுமுன்தினம் மாநகராட்சி அலுவலர்கள் குடோனுக்கு சென்று பார்த்த போது சீல் அகற்றப்பட்டு சரக்கு தயாரிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது.

இதுகுறித்து உதவி கமிஷனர் சுல்தானா நெல்லை ஜங்ஷன் போலீசில் புகார் அளித்தார்."சீல்' வைக்க முயற்சி:உதவி கமிஷனர் சுல்தானா, உணவு ஆய்வாளர்கள் சங்கரலிங்கம், கலியனாண்டி, சுகாதார ஆய்வாளர் அரசக்குமார், வி..., கிராம உதவியாளர் உள்ளிட்ட குழுவினர் நேற்று மதியம் குடோனுக்கு மீண்டும் சீல் வைக்க சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடோன் உரிமையாளர் தரப்பை சேர்ந்த குத்புதீன், .மு.மு.., நிர்வாகிகள் உஸ்மான்கான், மைதீன்பாரூக், ரசூல்மைதீன் உள்ளிட்டோர் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் உதவி கமிஷனர் லயோலா இக்னேஷியஸ், ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் சிவசுப்பு ஆகியோர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் இரு தரப்பும் செயல்படக்கூடாது என போலீசார் அறிவுறுத்தினர். இரு தரப்பும் அங்கிருந்து சென்றனர். சுமார் ஒன்றரை மணிநேரம் போராடியும் குடோனுக்கு சீல் வைக்க முடியாமல் மாநகராட்சி அலுவலர்கள் திரும்பினர்.இதுதொடர்பாக உதவி கமிஷனர் சுல்தானா நெல்லை ஜங்ஷன் போலீசில் புகார் அளித்துள்ளார்

 

மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவம்பெண்களுக்கு புது திட்டம்: அறிவித்தார் மேயர்

Print PDF

தினமலர் 13.08.2010

மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவம்பெண்களுக்கு புது திட்டம்: அறிவித்தார் மேயர்

திருவான்மியூர் : ""மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களுக்கு பத்திய, சத்துணவு வழங்கும் புது திட்டம் அண்ணா பிறந்த நாள் முதல் துவக்கப்படும்,'' என மேயர் சுப்ரமணியன் அறிவித்தார்.மாநகராட்சிக்கு உட்பட்ட 155வது வார்டு பகுதியில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா, திருவான்மியூர், சென்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.தாம்பரம் எம்.எல்.., ராஜா முன்னிலை வகித்தார். மாநகராட்சி துணை கமிஷனர்(சுகாதாரம்) ஜோதி நிர்மலா தலைமை தாங்கினார்.

இலவச கலர் "டிவி'க்களை வழங்கிய மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் பேசியதாவது:சென்னையைப் பொறுத்தவரை ஆறு லட்சத்து 32 ஆயிரத்து 608 பேருக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) 155 வட்டத்தில், 13 ஆயிரத்து 168 கலர் "டிவி'க்கள் வழங்கப்படுகின்றன. மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களுக்கு பத்திய, சத்துணவு வழங்கும் புது திட்டம், வரும் அண்ணா பிறந்த நாள் முதல் துவக்கப்படுகிறது. அதற்கான உணவுகளை மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கவுள்ளனர்.இவ்வாறு மேயர் பேசினார்.விழாவில் துணை மேயர் சத்யபாமா, 10வது மண்டலக் குழுத் தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 194 of 519