Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திருப்பூர் மாநகரில் கலப்பட பொருட்கள் விற்ற 25 கடைகள் மீது வழக்குப்பதிய நடவடிக்கை

Print PDF

தினமணி 11.08.2010

திருப்பூர் மாநகரில் கலப்பட பொருட்கள் விற்ற 25 கடைகள் மீது வழக்குப்பதிய நடவடிக்கை

திருப்பூர், ஆக.10: மாநகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில் திருப்பூர் மாநகரப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் எடுக்கப்பட்ட 77 உணவு மாதிரிகளில், 25 மாதிரிகள் கலப்படம் என ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. கலப்பட பொருட்கள் விற்ற கடைகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மாநகரப் பகுதியிலுள்ள ஹோட்டல்கள், எண்ணெய் கடைகள், மளிகை, பேக்கரி, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை நடத்தப்பட்ட ஆய்வில், கலப்படம் எனக் கருதப்பட்ட 77 உணவுப் பொருட்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அந்த உணவுப் பொருட்கள் ஓசூரிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

ஓசூர் உணவுப் பொருட்கள் பரிசோதனை மையத்தில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு செவ்வாய்க்கிழமை வரப்பெற்றிருந்த முடிவுகளில், 25 உணவுப் பொருட்கள் கலப்படம் என ஊர்ஜிதமாகியுள்ளன. இதையடுத்து, கலப்பட உணவுப் பொருட்களை விற்ற கடைகள் குறித்த அறிக்கை, மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து உணவுப் பொருட்கள் தடுப்புச் சட்ட இணை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும். இணை இயக்குநரின் உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட கடைகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, மாநகராட்சி நகர்நல அலுவலர் கே.ஆர்.ஜவஹர்லால் தெரிவித்தார்.

இதேபோல், கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது கலப்பட பொருட்கள் விற்றதாக ஊர்ஜிதம் செய்யப்பட்ட 25 கடைகள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

"மதுரையை தூய்மையாக்கும் திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை'

Print PDF

தினமணி 11.08.2010

"மதுரையை தூய்மையாக்கும் திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை'

மதுரை, ஆக. 10: மதுரையை தூய்மையாக்கும் மாவட்ட நிர்வாகத்தின் திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆட்சியர் சி.காமராஜ் வலியுறுத்தினார்.

மதுரை மாவட்டம், யா ஒத்தக்கடையில் "தூங்கா மதுரையை தூய்மையாக்குவோம்' திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது:

இத்திட்டத்தின் கீழ் இதுவரை பாலரெங்காபுரம் மருத்துவமனை, அரசு ராஜாஜி மருத்துவமனை, கோமதிபுரம் மேலமடை பஞ்சாயத்து, அழகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதுபோல, மதுரை மாவட்டத்தின் முக்கியப் பகுதியான யா ஒத்தக்கடையில் தூய்மைப்பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இப்பணியில் இந்திய செஞ்சிலுவை சங்கம், ஒத்தக்கடை ஊராட்சிமன்றம், எஸ்.வி.என். நற்பணி மன்றம், நேரு யுவகேந்திரா, நண்பன் அறக்கட்டளை, மீனாட்சி மருத்துவமனை கல்லூரி, ஒத்தக்கடை வியாபாரிகள் சங்கம், ஒத்தக்கடை எவர்சில்வர் தொழிலாளர் சங்கம், அரசு மேனிலைப் பள்ளி மாணவ, மாணவியர் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்குரியது.

ஒத்தக்கடை பகுதியில் கோழிக் கழிவுகளைக் கொட்டுவது, சாலை ஓரங்களில் ஆடுகளை வதை செய்வது, குப்பைகளை கண்ட இடங்களில் போடுவது, வாய்க்கால், கழிவுநீர் சாக்கடைகளில் பிளாஸ்டிக் பொருள்களை வீசி எரிவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் இனி எவரும் 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது.

டீக்கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்குப் பதிலாக, காகித டம்ளர்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சாக்கடைகளில் பிளாஸ்டிக் கழிவுகளைப் போடுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கிநின்று கொசு உற்பத்தியாக ஏதுவாகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகின்றது. பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருள்களை கால்வாய், சாக்கடைகளில் வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். மதுரை மாவட்டத்தில் யா ஒத்தக்கடை முழு சுகாதார முன்மாதிரி கிராமமாக உருவாக பொதுமக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றார் ஆட்சியர்.

இந்நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்கத் தலைவர் டாக்டர் புகழகிரி வடமலையான், ஒத்தக்கடை ஊராட்சிமன்றத் தலைவர் ஏ.பி.பூபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பெருமாள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியச் செயற்பொறியாளர் கிருஷ்ணராம், வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

எண்ணெய் கசிவு எதிரொலி மீன் உணவு சாப்பிட வேண்டாம்

Print PDF

தினகரன் 11.08.2010

எண்ணெய் கசிவு எதிரொலி மீன் உணவு சாப்பிட வேண்டாம்

மும்பை, ஆக.11: கடந்த சனிக்கிழமை மும்பை துறை முகம் அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதின. ஒரு கப்பலில் இருந்து எண் ணெய் கசிவு ஏற்பட்டதால் கடல் பகுதி மாசுபட்டு வரு கிறது. இதை கட்டுப்படுத்தும் வரையில் மும்பை கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்னும் சில நாட்களுக்கு மீன் சாப் பிட வேண்டாம் என பொதுமக்களை மும்பை மாநகராட்சியும் ராய்கட் மாவட்ட நிர்வாகமும் கேட்டுக் கொண்டுள்ளன.

எனினும் கடலில் எண் ணெய் கசிவு ஏற்பட்டுள்ள சம்பவம் தங்களின் வாழ்க் கையை பாதிக்காது என்று மீனவர் சமுதாயத்தினர் தெரிவித்துள்ளனர். "மழைக் காலத்தில் வியாபாரம் குறைவாகவே இருக்கும். மேலும் ஷ்ராவண் மாதத்தில் இந்துக்கள் மீன் சாப்பிட மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கும் இதனால் பாதிப்பு இல்லைÓ என்று அவர்கள் கூறினர்.

மகாராஷ்டிரா மீனவர் சங்கத் தலைவர் மோரேஷ் வர் பாட்டீல் இது பற்றி கூறுகையில், "மழைக் காலத் தில் மும்பை மார்க் கெட்டு களில் கிடைக்கும் மீன்களில் பெரும்பாலா னவை மேற்கு வங்கத்தில் உள்ள டயமண்ட் துறைமுகம், ஒரிசாவின் பிரதீப் துறைமுகம் மற்றும் ஆந்திரா, குஜராத் போன்ற வெளி இடங்களில் இருந்து தான் கொண்டு வரப்படு கின்றனÓ என்றார்.

மும்பை மீன் மார்க் கெட்டுகளில் பாம்ப்ரட், ராவஸ், கோல், சுர்மாய், பாம்பே டக், கேட்பிஷ், லாப்ஸ்டர் போன்ற மீன் வகைகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவை அனைத் தும் வெளியிடங்களில் பிடிக் கப்படும் மீன்கள் ஆகும்.

கடல்வாழ் உயிரின வல் லுனர் டாக்டர் பி.எப்.சாப் கர் கூறுகையில், "பெரும் பாலான மீன் வகைகள் சாப்பிடுவதற்கு தகுதியான வைதான். தண்ணீரை விட எண்ணெய் அடர்த்தி குறைவு என்பதால் அது கடலில் மிதக்கிறது. ஆனால் பொதுவாக நாம் சாப்பிடக்கூடிய மீன்கள் மிகவும் ஆழமான கடல் பகுதியிலேயே காணப் படுகின்றன. எனவே இவற்றை சாப்பிடுவதால் எந்த தீங்கும் ஏற்படாது. மட்ஸ்கிப்பர் என்ற மீன் வகையை மட்டும் தவிர்ப்பது நல்லதுÓ என்றார்.

எனினும் எண்ணெய் கசிவின் சேதங்கள் குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்படும் வரை மீன் சாப்பிடுவதை தவிர்க்கும்படி இந்துஜா மருத்துவமனை டாக்டர் குஸ்ரவ் பஜன், பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

 


Page 196 of 519