Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தமிழகத்தில் முதன்முறையாக அனுப்பானடியில் ஸ்4 கோடியில் நவீன ஆட்டிறைச்சி கூடம்

Print PDF

தினகரன் 10.08.2010

தமிழகத்தில் முதன்முறையாக அனுப்பானடியில் ஸ்4 கோடியில் நவீன ஆட்டிறைச்சி கூடம்

மதுரை, ஆக. 10: தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அனுப்பானடியில் ணீ4 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஆட்டிறைச்சி கூடம் திறக்கப்பட்டது.

மதுரை நகரில் இறைச்சி கடைகளுக்கு ஆடு அறுத்து கொடுக்கும் மாநகராட்சி ஆடு வதை கூடம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நெல் பேட்டையில் இயங்கி வருகிறது. சுகாதார கேடு மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக இதனை அனுப்பானடிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனுப்பானடியில் 2 ஏக்கர் பரப்பளவில் ணீ4 கோடி மதிப்பில் தமிழகத்திலேயே முதன்முறையாக மாநகராட்சி நவீன ஆட்டிறைச்சி கூடம் கட்டப்பட்டது.

சீனாவிலிருந¢து வரவழைக்கப்பட்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. இதனை மேயர் தேன்மொழி நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் செபாஸ்டின் நிருபர்களிடம் கூறுகையில், இங்கு மின்சார ஷாக் மூலம் ஆடுகளை மயக்க நிலைக்கு உள்ளாக்கி இறைச்சியாக பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த நவீன ஆட்டிறைச்சி கூடத்தில் ஒரு நாளைக்கு 1200 ஆடுகளை சுகாதாரமான முறையில் அறுக்க முடியும். மாநகராட்சி முத்திரையுள்ள இறைச்சி மட்டுமே கடைகளில் விற்பனைக்கு அனுமதிக்கப்படும். முத்திரையில்லாத இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும். நெல்பேட்டை யிலுள்ள ஆடு வதை நிலையம் விரைவில் மூடப்படும்Ó என்றார்.

மாநகராட்சி தலைமை பொறியாளர் சக்திவேல், நன்மாறன் எம்எல்ஏ மண்டல தலைவர் குருசாமி, சுகாதார குழுத்தலைவர் ராலியாபானு, கவுன்சிலர் காதர் அம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேயர் திறந்து வைத்தார்

 

மலேரியா வேகமாக பரவி வருவதால் மும்பையை சுத்தப்படுத்த கட்சியினருக்கு ராஜ்தாக்கரே உத்தரவு

Print PDF

தினகரன் 10.08.2010

மலேரியா வேகமாக பரவி வருவதால் மும்பையை சுத்தப்படுத்த கட்சியினருக்கு ராஜ்தாக்கரே உத்தரவு

மும்பை, ஆக.10: மும்பை யில் மலேரியா நோய் வேக மாக பரவி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் பத்துக் கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.

நகரம் சுத்தமாக வைக் கப்படாமல் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி யாவதே இந்நோய் பரவுவ தற்கு காரணம். மலேரியா சாவுகள் அதிகரித்து வரு வதை யொட்டி மும்பையை சுத்தப்படுத்தும் பிரசாரத்தில் பல்வேறு அரசியல் கட்சி களும் இறங்கியுள்ளன. சமீபத்தில் சிவசேனா தலை வர்களும் வடக்கு மும்பை காங்கிரஸ் எம்.பி., சஞ்சய் நிருபமும் வீதிகளில் உள்ள குப்பைகளை கூட்டி பிர சாரம் செய்தனர்.

இந்த நிலையில் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் கட்சியும் மும்பையை சுத்தப் படுத்தும் பிரசாரத்தில் இறங்கி இருக்கிறது.

மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் மும்பையை சுத்தப்படுத்தும்படி ராஜ் தாக்கரே தமது கட்சி தொண்டர்களுக்கு உத்தர விட்டு இருக்கிறார். "குப் பையை எங்கே பார்த்தாலும் அந்த இடத்தை சுத்தப்படுத்தி மலேரியா பரவாமல் பார்த் துக்கொள்ளுங்கள்Ó என்று தன் கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் தமது இந்த நடவ டிக்கை விளம்பர தந்திரம் அல்ல என்பதையும் அவர் தெளிவு படுத்தியுள்ளார்.

"தெருக்களை பெருக்கு வது போல சில தலைவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். அதுதான் விளம்பர தந்திரம்Ó என்று அவர் கூறினார்.

மும்பையில் குடிசைப் பகுதிகள் பெருகுவதற்கு எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது என்றும் ராஜ்தாக்கரே தமது கட்சியி னரை எச்சரித்து இருக்கிறார். "நோய்கள் பெருகி வருவ தற்கு, வெளி மாநிலத்தவர் வந்து தங்கி இருக்கும் குடி சைப் பகுதிகள்தான் கார ணம்Ó என்று அவர் குற்றம் சாட்டினார்.

தனியார் நிலங்கள் ஆக் கிரமிப்பு செய்யப்படா மல் இருக்கும் நிலையில் மாநில மற்றும் மத்திய அர சுக்கும் மாநகராட்சிக்கும் சொந்த மான இடங்கள் மட் டுமே ஆக்கிரமிப்பு செய் யப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.

இதுபோன்று நடப்ப தற்கு கவுன்சிலர்களும் அதி காரிகளும்தான் காரணம் என்று குற்றம்சாட்டிய ராஜ் தாக்கரே, இதனை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக் கும்படி கட்சி தொண்டர் களை கேட்டுக்கொண் டார்.

மலேரியாவால் பாதிக் கப்பட்டோரின் எண் ணிக்கை குறித்து மாநக ராட்சி வெளியிட்டுள்ள தக வல்கள் தவறானவை என் றும் அவர் குற்றம் சாட்டி னார். "எனக்கு கிடைத் துள்ள தகவலின்படி மலேரி யாவுக்கு மும்பை கே..எம். மருத்துவமனை யில் மட்டும் 56 பேர் பலி யாகி இருக்கி றார்கள்Ó என்று ராஜ் தாக்கரே கூறினார்.

 

மாடம்பாக்கத்தில் க்ஷீ30 கோடியில் அமைப்பு 200 படுக்கை வசதியுடன் தொற்றுநோய் மருத்துவமனை

Print PDF

தினகரன் 10.08.2010

மாடம்பாக்கத்தில் க்ஷீ30 கோடியில் அமைப்பு 200 படுக்கை வசதியுடன் தொற்றுநோய் மருத்துவமனை

தாம்பரம், ஆக. 10: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் 33 ஏக்கர் பரப்பளவிலான காலி இடத்தை 1947ம் ஆண்டு ஆர்.எம்.அழகப்ப செட்டியார், சென்னை மாநகராட்சிக்கு தானமாக வழங்கினார். ‘மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமே இடத்தை பயன்படுத்த வேண்டும்என்று அப்போது கூறியிருந்தார். அந்த இடம் நீண்ட காலமாக பயன்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சென்னை மாநகராட்சி சார்பில்

க்ஷீ34.8 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. ஆர்.எம்.அழகப்ப செட்டியார் கூறியது போல மருத்துவமனை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து அந்த இடத்தை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார்பேட்டையில் மட்டுமே உள்ளது. தென்சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் தொற்று நோயால் பாதித்தால் அங்குதான் செல்ல வேண்டும். எனவே இங்கு புதிய தொற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. அதன்படி

க்ஷீ30 கோடி செலவில் 200 படுக்கை வசதியுடன் கூடிய தொற்றுநோய் மருத்துவமனை பிரிவு, 200 படுக்கை வசதியுடன் கூடிய மகப்பேறு மருத்துவமனை பிரிவு, 200 படுக்கை வசதியுடன் கூடிய பொதுமருத்துவ பிரிவு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு மற்றும் மாநகராட்சி நிதியிலிருந்து இந்தப்பணி நிறைவேற்றப்படும். இங்குள்ள இடத்தை சுத்தம் செய்து மரங்கள் பாதிக்காத வகையில் கட்டிடங்கள் அமைக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் பணி தொடங்கும். பூங்கா வசதி யும் அமைக்கப்படும்.

மும்பை மாநகராட்சி போன்று சென்னை மாநகராட்சியும் மருத்துவ கல்லூரி தொடங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு மேயர் கூறினார். துணை மேயர் சத்யபாமா, துணை ஆணையர் (சுகாதாரம்) ஜோதி நிர்மலா, சுகாதார அலுவலர் குகானந்தன், கூடுதல் அலுவலர் தங்கராஜ், நிலைக்குழு தலைவர் (சுகாதாரம்) மணிவேல், 9&வது மண்டல அலுவலர் பிரேம்சந்த் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 10 August 2010 06:34
 


Page 199 of 519