Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

அண்ணா சிலை முதல் கிண்டி வரை ஒரே நேரத்தில் 9 கி.மீ துப்புரவு பணி

Print PDF

தினகரன் 10.08.2010

அண்ணா சிலை முதல் கிண்டி வரை ஒரே நேரத்தில் 9 கி.மீ துப்புரவு பணி

சென்னை, ஆக. 10: அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து கிண்டி ரயில் நிலையம் வரை ஒரே நேரத்தில் துப்புரவு பணியில் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். 9.1 கி.மீ தூரம் உள்ள இந்த சாலையின் இருபக்கமும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆங்காங்கு தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துப்புரவு பணி நடைபெற்றது.

அப்போது சாலைகள் மற்றும் வணிக வளாகங்களின் முன் குவிந்து கிடந்த மணல் மற்றும் குப்பை அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. இதில் ஐஸ்அவுஸ், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை ஆகிய 4 மண்டலங்களைச் சேர்ந்த 725 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். குப்பை சேகரிப்பதற்காக மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வண்டிகள், 35 மூன்று சக்கர வண்டிகள், 12 லாரிகள், 40 பெரிய குப்பை தொட்டிகள் பயன்படுத்தப்பட்டன. குப்பையில் இருந்த கட்டிட இடிபாடுகள், மணல் மற்றும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டது.

மாநகராட்சி தலைமை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஆகியோர் துப்புரவு பணியை மேற்பார்வையிட்டனர்.

 

மெரீனாவில் சுகாதாரமற்றகுடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

Print PDF

தினமலர் 10.08.2010

மெரீனாவில் சுகாதாரமற்றகுடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

சென்னை : மெரீனாவில் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவது குறித்து நேற்று, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, மாநகராட்சி சுகாதாரத்துறையினர் நேற்று மெரீனாவில் ஆய்வு செய்தனர். அதில், மணலைத் தோண்டி நான்கு இடங்களில் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.ஒன்று, இரண்டு லிட்டர் அளவுள்ள 600 குடிநீர் பாட்டில்களும், 25 குடிநீர் கேன்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்.இத்தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

நவீன ஆட்டிறைச்சி மையம் துவக்கம்

Print PDF

தினமலர் 10.08.2010

நவீன ஆட்டிறைச்சி மையம் துவக்கம்

மதுரை: மதுரை மாநகராட்சியின் சார்பில் அனுப்பானடி பகுதியில் 3.84 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, நவீன ஆட்டிறைச்சி மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட நெல்பேட்டை, செல்லூர் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் ஆடுகள் அறுக்கப்படுகின்றன. கழிவுகளை அப்படியே விடுவதாலும், வாய்க்காலில் கொட்டுவதாலும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக, அனுப்பானடி மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ஆடுகள் அறுக்கும் வகையில், நவீன ஆட்டிறைச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.இம்மையத்தில் மருத்துவப் பரிசோதனை, வலியில்லாமல் அறுத்தல், சாப்பிட தகுதியில்லாத இறைச்சி பிரிக்கப்படும் பகுதிகள் தனித்தனியாக உள்ளன. மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின் கீழ், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இறைச்சி வெட்டப் பயன்படும் கத்தி, அரிவாள்கள் நீராவி மூலம் உடனுக்குடன் சுத்தப்படுத்தப்படுகிறது. தரமான இறைச்சி என்பதற் கான மருத்துவச் சான்றுக்கு பின் வினியோகிக்கப்படுகிறது. இத்தனை வசதிகளை உள்ளடக்கிய இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள மையத்துக்கு, மாநகராட்சி சார்பில் 3.74 கோடியும், மாநில அரசின் இரண்டாம் திட்டத்தின் கீழ் பத்து லட்ச ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் குளிர்சாதன வசதியும் செய்யப்பட உள்ளது. இம்மையத்தை மேயர் தேன்மொழி நேற்று திறந்து வைத்தார். கமிஷனர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்திவேல், மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் பங்கேற்றனர்.

 


Page 200 of 519