Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாடம்பாக்கத்தில் மருத்துவமனை கட்டும் இடத்தை பார்வையிட்டார் மேயர்

Print PDF

தினமணி 09.08.2010

மாடம்பாக்கத்தில் மருத்துவமனை கட்டும் இடத்தை பார்வையிட்டார் மேயர்

சென்னை, ஆக.9- சென்னை மாநகராட்சி சார்பில் மாடம்பாக்கத்தில் மருத்துவமனை கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மேயர் மா. சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார்.அவருடன் மாநகராட்சி அதிகாரிகள் உடன் ந்திருந்தனர்.மாடம்பாக்கத்தில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் 600 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை கட்டப்படவுள்ளது.

 

தாம்பரம் அருகே 600 படுக்கைகள் கொண்ட மாநகராட்சி மருத்துவமனை; மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

Print PDF

மாலை மலர் 09.08.2010

தாம்பரம் அருகே 600 படுக்கைகள் கொண்ட மாநகராட்சி மருத்துவமனை; மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

தாம்பரம், ஆக. 9- தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் பேரூராட் சிக்குட்பட்ட பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 1946-ம் ஆண்டு அழகப்பா செட்டியார் சென்னை மாநகராட்சிக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.

இந்த நிலத்தை சென்னை மாநகர மேயர் மா.சுப் பிரமணியன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்கு சென்னை மாநகராட்சியின் சார்பில் 600 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இவற்றில் மகப்பேறு பிரிவுக்கு 200 படுக்கை வசதியும், தொற்று நோய் பிரிவுக்கு 200 படுக்கை வசதியும், பொது நோய் பிரிவுக்கு 200 படுக்கை வசதியும் வழங்கப்படும்.

இந்த மருத்துவமனை கட்ட ரூ. 30 முதல் ரூ. 40 கோடி வரை செலவாகும். அந்த நிதியை மத்திய-மாநில அரசுகளிடம் இருந்து பெற்று இந்த ஆண்டு இறுதியில் கட்டுமான பணி தொடங்கப்படும்.

இங்கு நிறைய மரங்கள் உள்ளன. அவற்றை வெட்டாமல் மருத்துவமனை கட்டப்படும். இந்த நிலத்தை சுற்றி கட்டப்பட்டுள்ள காம்பவுண்டு சுவர் பழு தடைந்தும், கேட் இன்றியும் உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பும் உள்ளது. அதிகாரிகள் இவற்றை விரைவில் சீரமைப்பார்கள் என்றார்.

 

கடைகள் தோறும் சிமென்ட் குப்பை தொட்டி பொதுமக்கள் வலியுறுத்தல்

Print PDF

தினகரன் 09.08.2010

கடைகள் தோறும் சிமென்ட் குப்பை தொட்டி பொதுமக்கள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஆக. 9: புதுக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் 50 முதல் 100 கடை வரை உள்ளன. கடைகள் அனைத்தும் நகராட்சி மூலம் டெண்டர் விடப்பட்டு மாதந்தோறும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கடைகளுக்கு முன்பு குப்பை, கூளங்கள் அதிகமாக சோந்து துர்நாற்றம் வீசும் அளவிற்கு குப்பைகள் சேருகின்றன. இதை போக்க அந்தந்த கடைகளுக்கு முன் சிமெண்ட் குப்பை தொட்டிகள் அமைக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் பல்வேறு நகராட்சி பஸ் நிலையங்களில் குப்பை சேராமல் சுகாதாரமாக வைக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மத்திய பஸ் நிலையத்தில் அனைத்து கடைகள், நகராட்சி அமைக்கப்படும் குப்பை தொட்டிகளில் குப்பைகளை போட்டால் சுத்தமாக, சுகாதாரமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.

 


Page 201 of 519