Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

புறநகர் பகுதிகளில் கூடுதல் மருத்துவமனை தேவை மலேரியா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை

Print PDF

தினகரன் 09.08.2010

புறநகர் பகுதிகளில் கூடுதல் மருத்துவமனை தேவை மலேரியா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை

மும்பை, ஆக. 9: மலேரியா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அமைச்சர் நசீம்கான் வலியுறுத்தியுள்ளார்.

மும்பை புறநகர் பொறுப்பு அமைச்சர் நசீம் கான் நேற்று காட்கோபர் ராஜாவாடி மற்றும் போரி வலி பகவதி மருத்துவ மனையில் மலேரியா நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

அமைச்சருடன் மாநக ராட்சி கூடுதல் கமிஷனர் மணீஷா மாய்ஸ்கர், உள்ளூர் கவுன்சிலர்கள் மற்றும் அதி காரிகளும் சென்றனர்.

பின்னர் பேட்டி அளித்த அவர் கூறியதாவது: புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் குறைந்தது 4 மருத்துவம னைகள் இங்கு தேவை. கிழக்கு புறநகர் பகுதிகளில் 2 மருத்துவமனை களும் மேற்கு புறநகர் பகுதிகளில் மேலும் 2 மருத்துவ மனைகளும் அமைக்கப்பட வேண்டும். இது தவிர தற்போதுள்ள மருத்துவ மனைகளை நவீனப்படுத்தி அவைகளை மேம்படுத்த வேண்டியதும் அவசியம். மலேரியா நோயின் தாக்கம் குறைந்து வருகிறது. இன்னும் 8 அல்லது 10 தினங்களில் நிலைமை மேலும் சீரடையும் என்று தெரிகிறது. மலேரியா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மலேரியாவை கட்டுப்படுத்த மாநகராட்சி எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் மாநில அரசு தேவையன ஒத் துழைப்பை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

காட்கோபரில் உள்ள மிலிந்த் நகர் குடிசைப் பகுதிக்கும் சென்ற அமைச்சர் நசீம்கான், அங்கு சுகாதாரம் எப்படி இருக்கிறது என்பதை யும் நேரில் ஆய்வு செய் தார்.

 

அழுக்கு நகரம் மும்பை ஆய்வில் தகவல்

Print PDF

தினகரன் 09.08.2010

அழுக்கு நகரம் மும்பை ஆய்வில் தகவல்

மும்பை, ஆக. 9: இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களில் மும்பை நகரம்தான் மிகவும் அழுக்கான நகரமாக விளங்குவதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இந்த வரிசையில் சென்னை 13வது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் முறையாக அரசு இந்திய நகரங்களின் தூய்மை குறித்து, தேசிய நகர சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் (என்யுஎஸ்பி) கீழ் ஆய்வு செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

சுகாதாரம், தூய்மை, உடல்நல மேம்பாட்டுக்கு உரிய ஏற்பாடுகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 423 நகரங்கள் பட்டியல் இடப்பட்டன. அதில் மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடுகையில் மும்பை நகரம் குறைந்த 46 இடத்தில் உள்ளது. கான்பூர் மற்றும் குண்டூர் நகரங்கள் மும்பையை விட மேலே உள்ளன. மகாராஷ்டிராவின் நவி மும்பை 11 இடத்தை பிடித்தது.

இந்திய நகர்புற மக்கள் 72 சதவீதம் பேர் மட்டுமே கழிப்பறையை பயன்படுத்துவது தெரியவந்தது. சாக்கடை நீர், கழிவு நீர் ஆகியவற்றை மனிதர்களே அகற்றுகின்றனர்.

தூய்மையை அடிப்படையாக வைத்து நகரங்களுக்கு 100 சதவீத மதிப்பெண் மற்றும் பச்சை, நீலம், கருப்பு, சிகப்பு என்ற நிறங்களாலும் வகைப்படுத்தப்பட்டன. இதில் மும்பைக்கு 45 புள்ளிகள் மற்றும் கருப்பு நிறமும் கிடைத்தது. டெல்லி 61 புள்ளியுடன் 5வது இடமும், சென்னை 13, கொல்கத்தா 25வது இடமும் பிடித்தன.

இதை தொடர்ந்து 4 நகரங்கள் நீலம் நிறமும், 230 நகரங்கள் கருப்பு நிறமும், 189 நகரங்கள் சிகப்பு நிற தரத்தையும் பெற்றன. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் தூய்மையின்மை காரணமாக நகர மக்கள் உடல் சம்பந்தமான நோய்களுக்கு உட்பட்டு வாழ்ந்து வருவதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

 

 

 

டாக்டர்கள் குற்றச்சாட்டு மலேரியா சாவு எண்ணிக்கையை குறைத்து காட்டும் மாநகராட்சி

Print PDF

தினகரன் 06.08.2010

டாக்டர்கள் குற்றச்சாட்டு மலேரியா சாவு எண்ணிக்கையை குறைத்து காட்டும் மாநகராட்சி

மும்பை, ஆக.6: மும்பை மாநகராட்சி, மலேரியா நோய்க்கு பலியானவரி களின் எண்ணிக்கையை குறைத்து தகவல் வெளி யிடுவதாக மும்பையில் உள்ள டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மும்பையில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 17 ஆயிரத்து 138 பேருக்கு மலேரியா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த நோயினால் பாதிக்கப்பட்ட 4,000க்கும் மேற்பட்டோர் மருத்து வமனைகளில் அனுமதிக் கப்பட்டுள் ளனர். மூச்சுத் திணறல் மற்றும் உடல் உறுப்புகள் செயல் இழத்தல் போன்றவை காரணமாக இவர்களில் பலர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளனர். அப்படி இருந்தும் மலேரியா நோய்க்கு இதுவரையில் மொத்தம் 18 பேர் மட்டுமே பலியாகி இருப்பதாக மாந கராட்சி தொரிவித்துள்ளது. இவர்களிலும் 7 பேர்தான் மலேரியா நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் என்றும் மீதமுள்ள 11 பேருக்கு மலேரியா உறுதி செய்யப்படவில்லை என்றும் மாநகராட்சி கூறியுள்ளது. இந்த புள்ளி விவரம் சரியானது அல்ல என்று டாக்டர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

இந்துஜா மருத்து வமனையின் அவசர சிகிச் சை பிரிவில் பணியாற்றி வரும் டாக்டர் ஒருவர் இது பற்றி கூறுகையில், "மாநகராட்சி தெரிவித் துள்ள கணக்கு தவறானது. தற்போதைய நிலவரத்தின் படி மலேரியா நோயால் பாதிக்கப்பட்டர்களில் 0.5 சதவீதத்தில் இருந்து 1 சத வீதம் நோயாளிகள் இறந்து போகிறார்கள். எனவே மாநகராட்சி தெரிவித் துள்ள எண்ணிக்கையை காட்டிலும் சாவு எண்ணிக் கை பத்து மடங்கு அதிக மாக இருக்கும்Ó என்றார்.

முலுண்ட் போர்டிஸ், மாகிம் இந்துஜா மற்றும் தென்மும்பை ஜஸ்லோக் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவு களில் மலேரியா நோயாளி கள் நிரம்பி வழிவதாக தக வல்கள் தெரிவிக்கின்றன. மலேரியா நோயால் ஏற்படும் சாவுகள், அடை யாளம் தெரியாத நோய் தாக்கி இறந்ததாக காட்டப் படுவதாக மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றும் சில டாக்டர்கள் தெரிவித்துள் ளனர்.

 


Page 203 of 519