Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மக்களின் அச்சத்தை போக்க பன்றி காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்ட மேயர், கமிஷனர் பிம்ப்ரி&சிஞ்ச்வாட்டில் விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினகரன் 02.08.2010

மக்களின் அச்சத்தை போக்க பன்றி காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்ட மேயர், கமிஷனர் பிம்ப்ரி&சிஞ்ச்வாட்டில் விழிப்புணர்வு முகாம்

புனே, ஆக. 2: பன்றி காய்ச்சல் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிம்ப்ரி&சிஞ்ச்வாட் மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷ னர் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்.

பன்றி காய்ச்சல் தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டம் நிலவி வருவதால் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிம்ப்ரி&சிஞ்ச்வாட் மாநகராட்சி சார்பில் கடந்த வெள்ளியன்று முகாம் ஒன்று நடத்தப்பட்டது.

இந்த முகாமில் பிம்ப்ரி& சிஞ்ச்வாட் மேயர் யோகேஷ் பேஹ்ல், மாநகராட்சி கமிஷனர் ஆஷிஸ் ஷர்மா, நிலைக்குழு தலைவர் பிரசாந்த் ஷிடோலே, சட்ட கமிட்டி தலைவர் காலுராம் பவார், மாநகராட்சி அவை ஆளும் கட்சி தலைவர் ஜக்தீஷ் ஷெட்டி, ‘பிமண்டல தலைவர் கணேஷ் போன்ட்வே, சிவசேனா கட்சி கவுன்சிலர்கள் தலைவர் சுலபா உபாலே மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் நிலவும் தவறான கண்ணோட்டம் மற்றும் அச்சத்தை போக்கும் வகை யில் முகாமில் கலந்து கொண்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண் டனர்.

இது குறித்து மாநகராட்சி மருத்துவ இயக்குனர் ஆர்.ஆர். ஐயர் கூறுகையில், "பிம்ப்ரி&சிஞ்ச்வாட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. மாநக ராட்சி அதிகாரிகள் மருத்துவ முகாம்களை நடத்தி பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நோய் பரவலை தடுக்கவும் தடுப்பூசியின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்தவும் விழிப்பு ணர்வு முகாம்கள் நடத்தப் பட்டு வருகின்றன. டாக்டர் பரிந்துரைபடி தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம் மட்டுமின்றி அது நோய் பவரலையும் தடுக்கும் என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

 

இறைச்சி கழிவால் சுகாதாரக்கேடு:எரிஉலை அமைக்குமா மாநகராட்சி

Print PDF

தினமலர் 02.08.2010

இறைச்சி கழிவால் சுகாதாரக்கேடு:எரிஉலை அமைக்குமா மாநகராட்சி

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்றுப்பகுதி ஊராட்சிகளில் கோழி இறைச்சி கழிவுகள் ரோட்டோரங்களில் கொட்டப்படுகின்றன. மாநகராட்சியுடன் இணைக்க உள்ள ஊராட்சி பகுதிகளுக்கும் சேர்த்து, இறைச்சி கழிவை அப்புறப்படுத்த முறையான வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.திருப்பூர் நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனை கடைகள் அதிகம் உள்ளன. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, இறைச்சி விற்பனை கடைகளும் ஆங்காங்கே தினமும் புதிதாக முளைத்து வருகின்றன. இதற்கு உரிமம் வழங்குபவை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள்.ஆனால், உரிமம் பெற்ற கடையில் இருந்து கோழி இறைச்சிக்கழிவுகள் முறையாக அகற்றப் படுகிறதா என்பது கண்காணிக்கப்படுவதில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன், கோழி இறைச்சி விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை மாநகராட்சி சுகாதாரப்பிரிவு நடத்தியது.இதில், இறைச்சி கழிவை சாக்கடை, ரோட்டோரங்களில் கொட்டக்கூடாது; மீறினால் அபராதம் விதிப்பதுடன், கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆயினும், ஆங்காங்கே இறைச்சி கழிவுகள், கோழி இறகுகள் கொட்டப்படுவது தொடர்கிறது.காற்றில் பறக்கும் கோழி இறகுகள், பொது சுகாதாரத்துக்கு அறைகூவல் விடுகின்றன. அழுகி துர்நாற்றம் வீசும் இறைச்சி கழிவுகள் தெருநாய்களால் குதறப்படுகின்றன. மாநகராட்சி எல்லைக்குள் மட்டுமின்றி, மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள ஊராட்சிகள் மற்றும் சுற்றுப்பகுதி ஊராட்சிகளிலும் இறைச்சி கழிவுகளை பாதுகாப்பின்றி கொட்டுவது தொடர்கிறது; ரோட்டோரங்களிலும் கொட்டி விடுகின்றனர்.இதற்கு மாற்று நடவடிக்கையாக, தற்போதைய மாநகராட்சி மற்றும் விரிவுபடுத்தப்பட உள்ள மாநகராட்சி எல்லைகளை உள்ளடக்கி, கோழி இறைச்சி விற்பனையாளர்களுடன் ஆலோசனை நடத்த மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.ஒட்டுமொத்தமாக அனைத்து கோழி இறைச்சி கழிவுகளையும், எரித்து அப்புறப்படுத்த எரி உலை (இன்சினரேட்டர்) அமைக்க வேண்டும். அனைத்து இறைச்சி கழிவுகள் எரி உலை மூலமே அகற்றப்பட வேண்டும். இதேபோல், மாநகராட்சி பகுதிகளில் தெருநாய் தொல்லையும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ரோட்டோர இறைச்சி கழிவை தின்னும் நாய்கள், புதுத்தெம்புடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

 

நாகர்கோவிலில் வீடு, வீடாக சுகாதாரத்துறை ஆய்வு தண்ணீரில் கொசு புழுக்களை அழிக்கும் மருந்து தெளிப்பு

Print PDF

தினகரன் 30.07.2010

நாகர்கோவிலில் வீடு, வீடாக சுகாதாரத்துறை ஆய்வு தண்ணீரில் கொசு புழுக்களை அழிக்கும் மருந்து தெளிப்பு

நாகர்கோவில், ஜூலை 30: நாகர்கோவில் நகர பகுதிகளில் கொசு புழுக்களை ஒழிக்கும் வகையில் வீடு, வீடாக சுகாதார பணியாளர் கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 8 பேர் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து கொசு புழுக்களை ஒழிக்கும் பணிகள் மாவட்டம் முழு வதும் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக மாவட்ட எல்லை பகுதியில் உள்ள பள்ளிகள், விடுதிகளில் சுகாதாரத்துறை துணை இயக்கு னர் மதுசூத னன் தலைமை யில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 600 க்கும் மேற்பட்டவர்களி டம் இருந்து ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின் றன. கொசு ஒழிப்பு மருந்துகளும் ஆங்காங்கே தெளிக்கப்பட்டு வருகின்றன.

நாகர்கோவில், குழித் துறை, குளச்சல், பத்மநாபபுரம் உள்ளிட்ட நகராட்சி பகுதிகளிலும், ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் கொசுக்களை ஒழிப்பதில் பணியாளர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். நாகர்கோவில் நகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் டாக்டர் கள் காவேரி, கலைச்செல்வி, உமாராணி தலைமையில் 3 குழுக்களாக பிரிந்து வீடு, வீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதார ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர் கள், செவிலியர்கள், சுகா தார பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ள னர்.

வீடுகளில் சிரட்டை, சிமென்ட் தொட்டிகள், முட்டை தோடு, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காத அளவுக்கு பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும் தண்ணீரை மூடி வைத்து உபயோகப்படுத்த வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள். ஒரு சில இடங்களில் சிமென்ட் தொட்டி, உடைந்த பொருட்களில் தேங்கி இருந்த தண்ணீரில் உற்பத்தியாகி இருந்த கொசு புழுக்களை அழித்தனர். நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளை சுகாதார துணை இயக்குனர் மதுசூதனன் ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் ஜானகி, நகர் நல அலுவலர் டாக்டர் போஸ்கோ ராஜன் உள்ளிட்டோர் தலைமையில் இந்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து நகர் நல அலுவலர் டாக்டர் போஸ்கோ ராஜன் கூறியதாவது: மலேரியா, டெங்கு உள்ளிட்ட கொசுக்களை பரப்பும் ஏ.டி.எஸ். கொசு வகைகள் சாக்கடை நீரில் உருவாகுவதில்லை. சாக் கடை நீரில் உருவாகும் கொசு புழுக்கள் நோய் பரப்புவதில்லை. வீடுகளில் சுற்றப்புறங்களில் தண்ணீர் தேங்காத அளவுக்கு பொதுமக்கள் பார்த்துக் கொள்ள வேண் டும். மழைக்காலம் என்பதால் அதிகளவு தண்ணீர் தேங்க வாய்ப்பு உண்டு. இந்த வகை கொசு புழுக்கள் நல்ல நீரில் உற்பத்தியாகி முட்டையிடுவதால் மேலும், மேலும் நோய் பரவும் அபாயம் ஏற் படும். இதை தவிர்க்கும் வகையில் வீடு, வீடாக நக ராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள். பொதுமக்களும் இந்த பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

 


Page 206 of 519