Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகராட்சி நவீன ஆடு வதைக்கூடம் சுகாதாரத்தைக் காக்க முயற்சி

Print PDF

தினமலர் 23.07.2010

மாநகராட்சி நவீன ஆடு வதைக்கூடம் சுகாதாரத்தைக் காக்க முயற்சி

மதுரை : மதுரை மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் நவீன ஆடு வதைக் கூடம் அடுத்த வாரம் துவக்கப்பட உள்ளது. அதன் பிறகு, இந்த இடத்தைத் தவிர, வேறு எங்கும் ஆடுகளை வெட்டக் கூடாது என்று உத்தரவிடப்படும்.நகரில் கண்ட இடங்களில் ஆடுகள் வெட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இதைத்தடுப்பதற்காக, ஒரே இடத்தில் சுகாதாரமான முறையில் ஆடுகளை அறுக்கும் வகையில் நவீன வதைக் கூடத்தை மாநகராட்சி அமைக்கிறது. 3.5 கோடி ரூபாய் செலவில் அனுப்பானடியில் கட்டப்படும் இக்கூடம், அடுத்த வாரம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இங்கு சித்திரவதை செய்யப்படாமல் ஆடுகளை வெட்ட வேண்டும் என்பது முக்கிய நோக்கம். முதலில், கன்வேயர் பெல்ட் வழியே கூடத்திற்குள் அனுப்பப்படும் ஆட்டுக்கு, மின்சார அதிர்ச்சி கொடுக்கப் படுகிறது. உடனே ஆடு மயங்கி விழுகிறது. அதன் பிறகே, ஹலால் முறையில் துள்ளாமல், துடிக்காமல் ஆட்டின் தலை வெட்டப்படுகிறது. ஆட்டின் ரத்தம் வெளியேறியதும், கால்கள் கட்டப்பட்டு இயந்திரம் மூலம் தூக்கிச் செல்லப்படும் ஆட்டின் தோல், தானியங்கி இயந்திரம் மூலம் உரிக்கப்படுகிறது.பின் ஆட்டின் குடல், ஈரல், கால்கள் போன்ற பாகங்கள் ஒவ்வொரு கட்டமாக பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும் குழாய்கள் அமைக்கப்பட்டு வெட்டுபவர் கைகளையும் கத்தியையும் கழுவ ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. டாக்டர் பரிசோதித்து, சான்றிதழ் தந்த பிறகே, ஆடுகள் வெட்டப்படும். கடைசியிலும் டாக்டர் "சீல்' வைப்பார். நோய்வாய்ப்பட்ட ஆடுகள், வெட்டப்பட அனுமதிக்கப்பட மாட்டாது. ஒவ்வொரு ஆட்டுக்கும் டோக்கன் தரப்பட்டு, அதன் இறைச்சி, ஆட்டின் உரிமையாளருக்கு தரப்படும்.

நேற்று உயிருள்ள ஆட்டை செலுத்தி, இயந்திரங்கள் செயல்பாடுகளை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்திவேல், நகர்நல அலுவலர் சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன் ஆய்வு செய்தனர். கமிஷனர் கூறும்போது, ""இக்கூடம் துவக்கப்பட்ட பிறகு, நகரில் ஆடுகள் வெட்டப்படுவது தடை செய்யப்படும். இதன் அருகிலேயே விரைவில் குளிர்பதன வசதி வசதி ஏற்படுத்தப்படும்'' என்றார்.

சுவையான இறைச்சி எது?:இக்கூடம் அமைப்பதற்கு ஆலோசகர்களாக இருந்த டாக்டர்கள் கோவிந்தராஜன், பக்தா கூறும்போது, ""முழு உடலாக இருந்தால், 4 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் பாதுகாத்து, 10 மணி நேரம் கழித்து உண்டால் அந்த இறைச்சி தான் சுவையாக இருக்கும். இறைச்சியை துண்டுகளாக வெட்டி, வீட்டுக்கு எடுத்துச் சென்றால், பிரிட்ஜ் பிரீஸரில் மைனஸ் 1.5 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் 10 மணி நேரங்கள வைத்திருந்து அதன் பிறகு சாப்பிட வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் என்சைம்கள் சுரந்து, இச் சான்றுகளுடன் நேரில் வந்து பதிவுமூப்பை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பிச்சம்மாள் தெரிவித்துள்ளார்.

 

மாநகராட்சி மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மாலை நேரத்திலும் செயல்படும்

Print PDF

தினகரன் 22.07.2010

மாநகராட்சி மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மாலை நேரத்திலும் செயல்படும்

மும்பை, ஜூலை 22: மழைக் காலத்தையொட்டி பரவி வரும் நோய்களை கட்டுப் படுத்துவதற்காக மருத்துவ மனைகளின் புற நோயாளி கள் பிரிவை(.பி.டி.) மாலை நேரமும் திறந்து வைக்க மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மும்பையில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலை யில், பல்வேறு நோய்களும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மலேரியா, லெப் டோ, டெங்கு, டைப்பாய்டு, வயிற்றுப் போக்கு போன்ற நோய்களின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிக மாக காணப்படுகிறது.

இந்நோய்களால் பாதிக் கப்பட்ட ஆயிரக்கணக் கானோர் நகரில் உள்ள வெவ்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நகரில் உள்ள மாநக ராட்சி மருத்துவமனை களுக்கு புற நோயாளிகளாக வருபவர்களின் எண்ணிக் கையும் கடந்த சில நாட்க ளில் கணிசமாக அதிகரித் துள்ளது. ஆனால் பகல் 12 மணி வரை மட்டுமே மாநகராட்சி மருத்துவ மனைகளில் புற நோயாளி கள் பிரிவு செயல்படும் என் பதால், பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு மாலை நேரத்தி லும் புற நோயாளிகள் பிரிவை திறந்து வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாநகராட்சி நிர் வாகம் முடிவு செய்துள் ளது.நகரில் பரவி வரும் மழைக்கால நோய்கள் தொ டர்பான பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக மாநகராட்சி பொதுக் குழுவின் சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் நோய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை களை எடுக்க தவறி விட்ட தாக எதிர்க்கட்சி உறுப் பினர்கள் குற்றம்சாட்டினர். நோய்களை கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கை களில் மாநகராட்சி நிர் வாகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.

உறுப்பினர்களுக்கு பதிலளித்து பேசிய மாந கராட்சி கூடுதல் கமிஷனர் மனீஷா மாய்ஸ்கர் கூறுகை யில், "நோய் பரவலை கட்டுப் படுத்துவதற்காக மாநகராட்சி மருத்துவ மனைகளில் புற நோயாளி கள் பிரிவை மாலை நேரத்தி லும் திறந்து வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது" என் றார்.

அவர் மேலும் கூறியதாவது;

மாநகராட்சி நிர்வாகத் தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 3 பெரிய மருத்துவ மனைகளிலும் 16 சாதாரண மருத்துவமனைகளிலும் புற நோயாளிகள் பிரிவு இனி மாலை நேரத்திலும் செயல் படும். மழைக்கால நோய் களை கட்டுப்படுத்த மாநக ராட்சி தேவையான நடவ டிக்கைகளை எடுத்து வரு கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிறப்பு கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு மழைக் கால நோய்களால் பாதிக்கப் பட்டு இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் குடிசைப் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 50 சதவீதம் பேர் தாங்கள் குடி யிருந்த பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றனர். நோய் தீவிரமடைந்த பிறகே இவர் கள் மாநகராட்சி மருத்து வமனைக்கு கொண்டு வரப் பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

 

சேலத்தில் குப்பைகள் தேக்கம் : வாகன பற்றாக்குறையால் மாநகராட்சி நிர்வாகம் திணறல்

Print PDF

தினமலர் 22.07.2010

சேலத்தில் குப்பைகள் தேக்கம் : வாகன பற்றாக்குறையால் மாநகராட்சி நிர்வாகம் திணறல்

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் குப்பைகளை அள்ளுவதற்கு தேவையான வாகனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வார்டுகளில் குப்பைகள் தேக்கம் அடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் மூன்று ஆண்டுக்கு முன் இரண்டு, ஏழு, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 27, 29, 30, 31, 32, 33 47 ஆகிய 21 வார்டு துப்புரவு பணி பெங்களூரை சேர்ந்த ஸ்வச்சதா கார்ப்ரேஷன் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்வச்சதா கார்ப்ரேஷன் நிறுவனம் சார்பில் பெரிய டிப்பர் லாரி 11, டிராக்டர் ஐந்து, கூப்பர் ஆட்டோ 23 ஆகிய வாகனங்கள் மூலம் குப்பை அள்ளும் பணி மேற்கொள்ளப்பட்டது. தனியார் வசம் இருந்த 21 வார்டிலும் மொத்தம் 650 பேர் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த ஜூன் 29 ல் சேலம் மாநகராட்சி-ஸ்வச்சதா கார்ப்ரேஷன் நிறுவனம் ஒப்பந்த காலம் முடிந்தது. பல்வேறு எதிர்ப்புக்களுக்கு இடையே துப்புரவு பணியை மீண்டும் தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக தனியார் வசம் இருந்த 21 வார்டிலும் மாநகராட்சி சார்பில் தினக்கூலி பணியாளர்கள் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியில் 39 வார்டில் 46 டிராக்டர், ஆறு டம்பர் பிளேசர், ஆறு மினி லாரி, ஒரு டிப்பர் லாரி மூலம் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்த 21 வார்டிலும் தற்போது மாநகராட்சிக்கு சொந்தமான துப்புரவு பணி வாகனங்கள் மூலம் குப்பைகளை அகற்ற வேண்டி இருக்கிறது. சேலம் மாநகராட்சியில் தற்போது நாள் ஒன்றுக்கு 600 டன் குப்பைகள் தேக்கம் அடைந்து வருகிறது. சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் மூலம் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது தனியார் வார்டிலும் மாநகராட்சி வாகனங்கள் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் துப்புரவு பணிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் பெரும்பாலான வாகனங்கள் ஏற்கனே மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. வாகனங்களின் இழுவை திறன் குறைவால் அதிகளவு குப்பைகளை ஏற்ற முடியாத நிலை உள்ளது. தவிர, பெரும்பாலான வாகனங்கள் அடிக்கடி சிறிய பழுதுக்கு உட்படுகிறது. சில நாட்களாக சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பெரும்பாலான வார்டுகளில் முறையாக குப்பைகளை அகற்ற முடியவில்லை. பல இடங்களில் குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளது. சில வார்டுகளில் இரண்டு நாட்களுக்கு மேலாகியும் குப்பைகள் அகற்றப்படாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சேலம் மாநகராட்சியில் மேயர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புதிதாக வாகனங்களை வாங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை புதிததாக வாகனங்களை வாங்குகின்றனர். ஆனால், சுகாதார சீர்கேட்டை தவிர்க்க குப்பை அள்ளும் வாகனங்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, சேலம் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளின் பிடியில் ஸ்தம்பித்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 


Page 212 of 519