தினமணி 29.06.2010
ஒட்டன்சத்திரத்தில் பன்றிகள் அகற்றம்
ஒட்டன்சத்திரம், ஜூன் 28: ஒட்டன்சத்திரம் பேரூராட்சிப் பகுதியில் சுற்றித் திரித்த பன்றிகளை பேரூராட்சி ஊழியர்கள் பிடித்து காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரூராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகள் அகற்றப்பட வேண்டும் என்று பேரூராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
அதன்பேரில், திங்கள்கிழமை செயல் அலுவலர் செல்வா (பொறுப்பு) சுகாதார ஆய்வாளர் கணேசன், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் காமராஜ், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் சென்ற குழுவினர் காந்தி மார்க்கெட், தென்றல் நகர், சத்யா நகர், திடீர் நகர், வினோபா நகர், சின்னக்குளம், வ.உ.சி. நகர், விஸ்வநாத நகர் ஆகிய இடங்களில் சுற்றித் திரிந்த 50-க்கும் மேற்பட்ட பன்றிகளையும்,அதன் குட்டிகளையும் பிடித்து காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.
இந்த பணியானது வாரம் ஒருமுறை செயல்படுத்தப்பட்டு, பன்றி தொல்லைகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்று பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.