Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

Print PDF

தினகரன்             27.11.2013

பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

கோவை, : கோவை மாவட்டத்தில் 37 பேரூராட்சிகள் உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அனைத்து பேரூராட்சிகளிலும் 40 மைக்ரான் தடிமன் அளவிற்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர், தட்டு போன்றவற்றை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம் தடை விதித்தது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணி, பேப்பர், சணல் பைகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அனை த்து பேரூராட்சிகளிலும் வியாபார கடைக ளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 7 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளில் ஒரு காகிதப்பை 2 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக பிளாஸ்டிக் பயன்பாடு வழக்கம் போல் அதிகரித்து விட்டது. கேரி பேக் பயன் பாடு அதிகமானதால், பேரூரட்சி பகுதிகளில் சுகாதார கேடு அதிகமாகி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதை தொ டர்ந்து பிளாஸ்டிக் பொரு ட்கள் பயன்பாட்டை முற்றி லும் தடுக்கவேண்டும், அலட்சியம் காட்டக்கூடாது என பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் பேரூராட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை

Print PDF

தினகரன்         26.11.2013

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை

கோவை, : கோவை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் நேற்று உத்தரவிடப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

தமிழக கைத்தறி, கைத்திறன், ஜவுளி, கதர்த்துறை முதன்மை செயலாளரும், கோவை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான ஹர்மந்தர் சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், மாநகராட்சி கமிஷனர் லதா, மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம், பொள்ளாச்சி சப் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் முத்து கோபாலகிருஷ்ணன், பொது சுகாதார பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ராமகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகேசன், ஆர்.டீ.ஓ குணசேகரன் உட்ப பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட அளவில் டெங்கு நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். வீடுகளின் அருகே நீர் தேங்கி இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். கொசு பெருக்கத்தை தடுத்து நோய் பரவலை தடுக்க வேண்டும் என கண்காணிப்பு அதிகாரி உத்தரவிட்டார்.

 மாவட்ட அளவில் திட்ட பணிகளை விரைவாக முடிக்கவேண்டும். முதியோர் உதவி தொகை, இலவச மனை பட்டா, ஆடு, மாடு உள்ளிட்ட நலத்திட்ட பணிகளை தடையின்றி மேற்கொள்ளவேண்டும். பொதுமக்களின் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

இலவச கொசுவலை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

Print PDF

தினபூமி         21.11.2013

இலவச கொசுவலை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார் 

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Free-Mosquito-Net-CM-Inagurate(C).jpg 

சென்னை, நவ.21 - 5 லட்சம் பேருக்கு விலையில்லாக்  கொசுவலை வழங்கும் திட்டத்தை முதல்_அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:_

சென்னை அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்வழித் தடங்களின் கரைகள் அவைகளை யொட்டிய சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கொசுத் தொல்லையினைத் தவிர்க்கவும், கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஐந்து லட்சம் எண்ணிக்கையிலான விலையில்லாக் கொசுவலைகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 1 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 96 ரூபாய் செலவில் 78,184 கொசு வலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

முதல்_அமைச்சர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு கொசுவலைகளை நேற்று  வழங்கினார்.

முதலமைச்சரின் 64வது பிறந்த தினத்தை சென்னை மாநகரின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மற்றும் உலக வெப்பமயமாதல் தடுக்கும் நாளாக சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு கடந்த 24.2.2012 அன்று சென்னை மாநகரம் முழுவதும் மாணவ, மாணவியர் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அன்றைய தினமே சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தலா 64 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, முதல்_அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடிட சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் 29.08.2013 அன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரின் பிறந்த தினத்தன்று சென்னை மாநகராட்சி மூலமாக சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மற்றும் உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதன்படி, பள்ளிக் குழந்தைகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் வகையில் வைட்டமின் 'நீஏ' சத்து கொண்ட 6.5 லட்சம் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்; சென்னை மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்திட பொதுமக்களுக்கு 5.5 லட்சம் மூலிகை குணம் கொண்ட நொச்சிச்செடி கன்றுகள் வழங்கும் திட்டம்; ஆகியவற்றைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு முதல்_அமைச்சர் ஜெயலலிதா நேற்று  பப்பாளி மரக்கன்றுகள் மற்றும் நொச்சிச் செடி கன்றுகளை வழங்கினார்.

சென்னையிலுள்ள படித்த ஏழை எளிய பட்டதாரி இளைஞர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் இதர போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக, சென்னை மாநகராட்சியால் முதற்கட்டமாக 710 ஏழை எளிய பட்டதாரி இளைஞர்களுக்கு கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்கும் வகையில் சைதாப்பேட்டையிலுள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மற்றும் பெரம்பூர் பந்தர் கார்டனிலுள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இரண்டு பயிற்சி மையங்களை முதல்_ அமைச்சர் ஜெயலலிதாநேற்று   

 தொடங்கி வைத்து, 4 நபர்களுக்கு சேர்க்கை கடிதங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 23 of 519