Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஜூலை மாத இறுதியில் சாரல் திருவிழாகுற்றாலத்தில் அடிப்படை வசதிகளுக்கு உத்தரவு:பிளாஸ்டிக் பொருட்களுக்கு

Print PDF

தினமலர் 09.06.2010

ஜூலை மாத இறுதியில் சாரல் திருவிழாகுற்றாலத்தில் அடிப்படை வசதிகளுக்கு உத்தரவு:பிளாஸ்டிக் பொருட்களுக்கு

திருநெல்வேலி:குற்றாலத்தில் வரும் ஜூலை மாதம் இறுதியில் சாரல் திருவிழா நடக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.குற்றாலத்தில் வரும் ஜூலை மாதம் இறுதியில் சாரல் திருவிழா அரசு சார்பில் ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஜூலை மாதம் இறுதியில் சிறப்பாக சாரல் விழா நடத்துவதற்கு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் தலைமை வகித்து கலெக்டர் ஜெயராமன் பேசியதாவது:குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும். குற்றாலம் பகுதியில் சுகாதார ஏற்பாடுகளை விரிவாக செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பஸ் ஸ்டான்ட் உட்பட மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் சுத்தமான, சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பஸ் வசதி, மின் வசதி ஏற்படுத்தவும், மக்கள் பார்வைக்கு தெரியும் வகையில் முதல் உதவி உட்பட முக்கிய டெலிபோன் எண்களை விளம்பரப்படுத்த வேண்டும்.பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்ரமிப்புகளை போலீஸ் துறையினர் உதவியுடன் உடனடியாக அப்புறப்படுத்தவும், அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக, குற்றாலம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மருத்துவ குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாரல் திருவிழா நடக்கும் நாட்களில் தினமும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி சப்-கலெக்டர் வீரராகவராவ், தென்காசி டி.எஸ்.பி ஸ்டாலின், திட்ட அலுவலர் சங்கர், சுற்றுலா அலுவலர் விஜயகுமார், ஆர்.டி.ஓக்கள் மூர்த்தி, தமிழ்செல்வி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா மைதீன், டவுன் பஞ்.,களின் உதவி இயக்குனர் சீனிவாசன், பி.ஆர்.ஓ ரவீந்திரன், குற்றாலம் டவுன் பஞ்.,துணைத் தலைவர் ராமையா, செயல் அலுவலர் ராசையா, தாசில்தார்கள், அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தென் மேற்கு பருவ மழை இயற்கை இடர்பாடு பிரச்னைகள்:தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவு:*கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை வசதிதிருநெல்வேலி:தென் மேற்கு பருவ மழை இயற்கை இடர்பாடுகளை தடுக்க தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தென் மேற்கு பருவ மழை காலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போது தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் தலைமை வகித்து கலெக்டர் ஜெயராமன் பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள், குளங்களை பொதுப்பணித் துறையினர் பார்வையிட்டு தண்ணீர் செல்வதற்கு இடையூறு இல்லாமல் ஆக்ரமிப்புகளை அகற்றி சரி செய்ய வேண்டும். உடைப்புகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து முன்கூட்டியே சரி செய்ய வேண்டும்.வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக பள்ளிக் கூடங்கள், சமுதாய நலக் கூடங்கள் மற்றும் தனியார் திருமண மண்டபங்களை நேரில் பார்வையிட்டு போதுமான வசதிகள் உள்ளதா என அறிந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் உயிர்களை காப்பாற்ற தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.நெடுஞ்சாலைத் துறையினர் சாலையில் உள்ள பாலங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அடைப்பு இல்லாமல் பாதுகாக்கவும், உடைப்பு ஏற்படும் கால்வாய்களில் உடனுக்குடன் சரி செய்து போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தினர் அனைத்து நீரேற்று நிலையங்களில் குடிநீரை குளோரின் மூலம் சுத்தம் செய்து முறையான குடிநீர் வினியோகம் தடைபடாமல் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் தொட்டிகளை குறிப்பிட்ட காலங்களில் சுத்தம் செய்து கழிவு நீர் வாய்க்கால்களை தூர் வார வேண்டும். மழைக் காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தண்டோரா மூலம் தெரிவிக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே வெளியேற செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.சத்துணவு மையங்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தேவையான பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும். மருத்துவ நடவடிக்களை மேற்கொண்டு மருத்துவ, சுகாதார துறையினர் தேவையான மருந்துகளை இருப்பு வைக்கவும், மருத்துவ குழு மற்றும் அவசர கால ஊர்தி தயார் நிலையில் வைக்க வேண்டும். உணவு பொருள் வழங்கல் பிரிவு மற்றும் நுகர்பொருள் வாணிப கழகம் தேவையான உணவு பொருட்கள், மண்ணெண்ணெயை இருப்பு வைக்க வேண்டும். அத்யாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

கால்நடை பராமரிப்பு துறையினர் கால்நடைகளுக்கு நோய்கள் பரவாமல் தடுக்கவும், தேயைவான மருந்துகள், தீவனங்கள் கிடைக்கவும், இயற்கை சீற்றத்தால் மரணமடையும் கால்நடைகளுக்கு நிவாரண தொகை கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் உரங்களை தட்டுப்பாடு இன்றி இருப்பு வைக்கவும், பயிர் சேதங்களை உடனுக்குடன் அறிக்கை தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மின் துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதிக வெள்ளம் ஏற்படும் நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தி மின் வினியோகத்தை சரி செய்ய வேண்டும்.ஆர்.டி.ஓக்கள், தாசில்தார்கள் ஒருங்கிணைந்து கிராமப்புறங்களில் ஏற்படும் சேதங்களை அறிந்து நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வீடுகள் இழப்பு, உயிர் சேதம், கால்நடை சேதம் ஆகியவற்றை அறிந்து நிவாரணம் வழங்குவதற்கு ஏதுவாக உடன் தகவல் தெரிவிக்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் நான்கு இலக்க டெலிபோன் இணைப்பு பெறப்பட்டு கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.இதில் டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி, சப்-கலெக்டர் வீரராகவராவ், திட்ட அலுவலர் சங்கர், ஆர்.டி.ஓக்கள் மூர்த்தி, தமிழ்செல்வி, கூடுதல் நேர்முக உதவியாளர் (பொது) லீலா, போலீஸ் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதார துறை, வேளாண், தோட்டக்கலைத் துறை, மருத்துவ துறை அலுவலர்கள், தாசில்தார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர

 

உணவு கலப்பட விதிகள் குறிப்பிடாதபேக்கரியில் உணவு பண்டங்கள் பறிமுதல்

Print PDF

தினமலர் 09.06.2010

உணவு கலப்பட விதிகள் குறிப்பிடாதபேக்கரியில் உணவு பண்டங்கள் பறிமுதல்

திருநெல்வேலி:உணவு கலப்பட தடைச் சட்ட விதிகள் எதையும் குறிப்பிடாத பேக்கரியில் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நெல்லை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் சுப்பையன் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி டாக்டர் கலு.சிவலிங்கம் ஆலோசனையின் பேரில் உணவு ஆய்வாளர் ஏ.ஆர்.சங்கரலிங்கம், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், ரத்தினகுமார், பாலபபிதா ஆகியோர் அடங்கிய குழுவினர் பாளை., பகுதி கடைகளில் காலாவதி உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தனர். அப்போது திருவனந்தபுரம் ரோட்டிலுள்ள ஒரு பேக்கரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் அனைத்திலும் தயாரிப்பு தேதி, உணவுப் பொருளின் பெயர், எடை, விலை விபரம், எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது, சைவ, அசைவ வகை குறியீடு ஆகிய விபரங்கள் எதுவும் தெரிவிக்காமல் விற்பனை செய்வது தெரியவந்தது. அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள பிஸ்கட், முறுக்கு, கேக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கலப்பட உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பபட்டது.

ஆந்திரா முறுக்கில் கலர்சுகாதார அதிகாரி எச்சரிக்கை:ஆந்திரா முறுக்கு போன்ற காரவகைகளில் எந்த வகையான செயற்கை வண்ணங்கள் சேர்க்க உணவு கலப்பட விதிகளில் அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வாறு காரவகைகளில் செயற்கை வண்ணங்கள் சேர்த்து விற்பனை செய்தால் அந்த உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், உணவு கலப்பட தடைச் சட்டத்தில் வழக்கு தொடரப்படும் என மாநகராட்சி சுகாதார அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

 

மாநகர துப்புரவு பணியில் ரோடு ஸ்வீப்பர் வாகனங்கள் சாலை இனி ‘பளிச்’ ஆகும்

Print PDF

தினகரன் 08.06.2010

மாநகர துப்புரவு பணியில் ரோடு ஸ்வீப்பர் வாகனங்கள் சாலை இனி பளிச்ஆகும்

கோவை, ஜூன் 8: கோவை மாநகராட்சியில் மாநாடு பணிக்காக 3 ரோடு ஸ்வீப்பர் வாகனங்கள் வந்துள்ளன.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக ரோடு ஸ்வீப்பர் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. புனாவிலிருந்து 3 ரோடு ஸ்வீப்பர் வாகனங்கள் நேற்று பெறப்பட்டது. 5 டன் கொள்ளளவு கொண்ட இரண்டு ரோடு ஸ்வீப்பர் வாகனமும், 6.5 டன் கொள்ளளவு கொண்ட ஒரு ரோடு ஸ்வீப்பர் வாகனமும் வாங்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு 1.20 கோடி ரூபாய்.

கோவை நகரில் உள்ள ரோடு, பொது இடம், மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், மைதானம் போன்றவற்றை ரோடு ஸ்வீப்பர் வாகனம் மூலம் சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாகனமும் தினமும் 40 கி.மீ தூரம் ஓட்ட முடியும். ஒரு மணி நேரத்திற்கு 9 கி.மீ தூரம் வரை இயக்க முடியும். 3 மீட்டர் அகலத்திற்கு ரோடு முழுவதையும் சுத்தம் செய்து விடும். சுமார் 5 கிலோ எடை கொண்ட பொருளை கூட எளிதாக எடுத்து விடும். ரோட்டில் வாகனத்தை இயக்கினால் கல், மண், மணல், பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து உறிஞ்சி எடுத்து விடும். குப்பைகளை சேகரிக்க வாகனத்தில் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஸ்வீப்பர் மூலம் நீரை தெளித்து ரோடு, பொது இடத்தை சுத்தம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரிரு நாளில் இந்த வாகனம் மூலம் கோவை நகரில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 200 தொழிலாளர்கள் தினமும் செய்யும் பணியை இந்த வாகனமும் ஒரே நாளில் செய்து விடும்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாகனத்தின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம், நகர் நல அலுவலர் (பொறுப்பு) அருணா, மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாநாடு சுகாதார பணிகளுக்காக பிரசுடன் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நவீன குப்பை கூட்டும் கருவிகள், ஒட்டடை அடிக்கும் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது.

 


Page 227 of 519