Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுத்திகரிப்பு நிலையம் இல்லாத குடிநீர் திட்டங்கள் செயல்பட தடை ... காலரா போன்ற பாதிப்புக்களை தடுக்க நட

Print PDF

தினமலர் 04.06.2010

சுத்திகரிப்பு நிலையம் இல்லாத குடிநீர் திட்டங்கள் செயல்பட தடை ... காலரா போன்ற பாதிப்புக்களை தடுக்க நட

தேனி: சுத்திகரிப்பு நிலையம் இல்லாத குடிநீர் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என சுகாதாரத்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்ற மாதம் மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காலரா பரவியது. தற் போது வரை காலரா பாதிப்பு தொடர்ந்து கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் குடிநீர் சப்ளை குறைபாடு தான் என சுகாதாரத்துறை புகார் கூறி உள்ளது.

ஆற்றில் மணல் அள்ளுவதால் குடிநீர் திட்ட கிணறுகளில் ஊறும் நீரே மாசுபட்ட நிலையில் உள்ள இந்த நீரை முறையாக குளோரினேசன் செய்வதும் இல்லை. அப்படியே நீரை சப்ளை செய்வதே இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதற்கு காரணம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தில் "சில்வர் அயோனைசேஷன்' என்ற கருவி பொறுத்தி நீரை சுத்திகரிப்பு செய்கின்றனர். குளோரின் செய்தால் கூட குடிநீரில் உள்ள குளோரின் அளவினை கண்டறிய முடியும்.

சில்வர் அயோனைசேஷனில் அந்த நம்பகத்தன்மையும் இல்லை.குடிநீர் திட்டங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது மட்டுமே பாதுகாப் பான குடிநீர் வழங்க ஒரே வழி. எனவே அத்தனை திட்டங்களிலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையம் இல்லாத குடிநீர் திட்டங்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும்.

பைப் லைன்களை உடைத்து குடிநீர் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளம் தோண்டி குடிநீர் பிடிப்பதையும் தடை விதிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த உத்தரவை முறையாக செயல்படுத்துவதன் மூலம் குடிநீர் மாசுபடுவதை தடுப்பதுடன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க முடியும். இதற்கு குடிநீர் வடிகால்வாரியம், உள்ளாட்சி அமைப்புக்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

 

திருச்சி நகர்நல மையங்களில் இ.சி.ஜி., பரிசோதனை மாநகராட்சி ஏற்பாடு

Print PDF

தினமலர் 04.06.2010

திருச்சி நகர்நல மையங்களில் இ.சி.ஜி., பரிசோதனை மாநகராட்சி ஏற்பாடு

திருச்சி: பொதுமக்கள் இலவசமாக இதயத்தை பரிசோதித்துக்கொள்ள நகராட்சி சார்பில் நகர்நல மையங்களுக்கு 16 .சி.ஜி., இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளது. திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டில் 25 நகர்நல மையங்கள், 18 டிஸ்பென்ஸரிகள் உள்ளன. இதன் மூலம் அந்தந்த பகுதி மக்கள் இலவசமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது சுகாதாரம், பிரசவம், சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கு நகர்நல மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆனால், இதயம் பலவீனமாக உள்ளதா? என்பதை கண்டறிய தேவையான இ.சி.ஜி., இயந்திரம் இல்லை. வளர்ந்து வரும் நாகரீக உலகில் இதயம் சம்பந்தமான நோய் அதிகரித்துள்ளது. மனித இதயம் பலவீனமாக உள்ளதா? என்பதை கண்டறிய இ.சி.ஜி., இயந்திரம் பயன்படுகிறது. சாதாரணமாக இ.சி.ஜி., மூலம் இதயம் பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளில் அதிகம் செலவாகும். ஏழை, எளிய மக்கள் இலவசமாக இதயத்தை பரிசோதித்துக் கொள்ள திருச்சி மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக திருச்சி மாநகராட்சி சார்பில், 70 ஆயிரம் மதிப்புள்ள 16 .சி.ஜி., இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. 16 மயங்களுக்கு இ.சி.ஜி., இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. விரைவில் நகர்நல மையங்களுக்கு இ.சி.ஜி., இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதுதவிர, 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

திருநீர்மலை, முடிச்சூர் உட்பட புறநகரில் 100 பேருக்கு வயிற்றுப்போக்கு கல் வைத்த மாம்பழம் சாப்பிட வேண்டாம்

Print PDF

தினகரன் 03.06.2010

திருநீர்மலை, முடிச்சூர் உட்பட புறநகரில் 100 பேருக்கு வயிற்றுப்போக்கு கல் வைத்த மாம்பழம் சாப்பிட வேண்டாம்

தாம்பரம், ஜூன் 3: குரோம்பேட்டை, பல்லாவரம், அஸ்தினாபுரம், துர்காநகர், திருநீர்மலை, முடிச்சூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் சிலர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது மாம்பழ சீசன். மாம்பழங்களைப் பழுக்க வைக்க சிலர் கார்பைட் போன்ற ரசாயனக் கற்களை பயன்படுத்துகிறார்கள். அத்தகைய பழங்களை சாப்பிட்டதால் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சாலை ஓரத்தில் விற்கப்படும் பலாப் பழங்கள், மற்றும் ஈ மொய்க்கும் பண்டங்கள், தரமற்ற சிற்றுண்டிகள் முக்கியமாக சுகாதாரமற்ற குடிநீர் போன்றவற்றால் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறினர். எனவே காய்ச்சி வடிகட்டிய நீரை குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்

வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில், தெருக்களை சுத்தப்படுத்தி, குப்பை அள்ளும் பணி முடு க்கி விடப்பட்டுள்ளது. பல்லாவரம் நகராட்சி ஊழி யர்கள் இந்தப் பணியில் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர்.

 


Page 231 of 519