Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதாரமில்லாமல் விற்ற பன்றி இறைச்சி பறிமுதல்

Print PDF

தினகரன் 03.06.2010

சுகாதாரமில்லாமல் விற்ற பன்றி இறைச்சி பறிமுதல்

சென்னை, ஜூன் 3: நந்தனம், சத்தியமூர்த்தி நகரில் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைத்திருந்த 60 கிலோ பன்றி இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும், கண்ணம்மாபேட்டை, நியூ போக் சாலை ஆகிய இடங்களில் சாலையோரம் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய மீன் கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப் பட்டது.

ராயப்பேட்டை, ஜானி ஜான்கான் சாலையில் மாநகராட்சி உரிமம் இன்றி ஆடுகளை வெட்டி விற்பனைக்கு அனுப்புவதாக புகார் வந்தது. இதையடுத்து 111, 107 மற்றும் 107 வார்டுகளின் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று அங்கு சோதனை நடத்தி 20 கிலோ ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.

 

வயிற்று போக்கால் பலர் பாதிப்பு வீடு, வீடாக சென்று குளோரின் மாத்திரை

Print PDF

தினகரன் 03.06.2010

வயிற்று போக்கால் பலர் பாதிப்பு வீடு, வீடாக சென்று குளோரின் மாத்திரை

சென்னை, ஜூன் 3: வயிற்று போக்கு நோய் பரவாமல் இருக்க மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று குளோரின் மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.

தி.நகர், மேற்கு மாம்பலம், சிந்தாதிரிப்பேட்டை உட்பட பல்வேறு இடங்களில் வயிற்று போக்கு நோயால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டவர்கள் வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டு, தண்டையார்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தி.நகர் உட்பட சில இடங்களில் குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வந்ததால்தான் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

தி.நகரில் உள்ள காமராஜர் காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மட்டும் 30க்கும் மேற்பட்டவர்கள் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டனர். இதை அறிந்த மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மருத்துவ முகாம் நடத்தி மாத்திரைகளையும் வழங்கினர். மேலும் அந்த குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக இருந்த கட்டிட இடிபாடுகளை, தேங்கியிருந்த குப்பைகளை அகற்றினர். குடியிருப்பு கட்டிடங்களை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். மாநகராட்சி ஊழியர்கள் வழங்கினர்

தி.நகரில் உள்ள காமராஜர் காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மட்டும் 30க்கும் மேற்பட்டவர்கள் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டனர். இதை அறிந்த மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மருத்துவ முகாம் நடத்தி மாத்திரைகளையும் வழங்கினர். மேலும் அந்த குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக இருந்த கட்டிட இடிபாடுகளை, தேங்கியிருந்த குப்பைகளை அகற்றினர். குடியிருப்பு கட்டிடங்களை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிசைப் பகுதிகளில் நேற்று வீடு, வீடாக சென்று குளோரின் மாத்திரைகளை வழங்கினர். மருத்துவ முகாமும் நடத்தி வயிற்று போக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

 

சுகாதாரமற்ற இறைச்சி சிக்கியது

Print PDF

தினமலர்    03.06.2010

சுகாதாரமற்ற இறைச்சி சிக்கியது

சென்னை : நந்தனம், எஸ்.எம்., நகரில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த, 60 கிலோ பன்றி இறைச்சி சுகாதாரத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.கண்ணம்மாபேட்டை, நியூ போக் சாலையில் சாலையோரம் சுகாதாரமற்ற முறையில், விற்பனை செய்யப்பட்டு வந்த மீன் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.ராயப்பேட்டை, ஜானி ஜான் கான் சாலையில் சென்னை மாநகராட்சியின் உரிமம் இன்றி ஆடுகளை வெட்டி விற்பனைக்கு அனுப்புவதாக புகார் வந்தது. சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து 20 கிலோ எடையுள்ள ஆட்டிறைச்சியினை பறிமுதல் செய்து, கிருமி நாசினி தெளித்து, அழித்தனர்.அதேபோல், நந்தனம், எஸ்.எம்., நகரில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த 60 கிலோ பன்றி இறைச்சியை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

 


Page 232 of 519