Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் அழிப்பு

Print PDF

தினகரன் 02.06.2010

கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் அழிப்பு

திருவில்லிபுத்தூர், ஜூன் 2: திருவில்லிபுத்தூரில் நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

திருவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் நகர் நல அலுவலர் காஞ்சனா, மருத்துவ அலுவலர் அய்யப்பன் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள குடோன்களில் கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்திருந்த 250 கிலோ மாம்பழங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்து அழித்தனர்.

மேலும் இறைச்சி கடைகளிலும் சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு கடையில் கெட்டுப்போன 25 கிலோ கோழிக்கறியை கைப்பற்றி அழித்தனர். பள்ளிகளுக்கு 100 மீட்டர் தொலைவுக்குள் புகையிலை சம்பந்தமான பொருட்கள் விற்கப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.

இதில் 3 கடைகளில் சிகரெட், பாக்கு, புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ததது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்த ரூ.ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

கடைகளில் திடீர் ஆய்வு சுகாதாரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினகரன் 02.06.2010

கடைகளில் திடீர் ஆய்வு சுகாதாரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

கீழக்கரை, ஜூன் 2: கீழக்கரையில் உள்ள கடைகளில் நடத்திய திடீர் சோதனையில் சுகாதாரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகள், காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கீழக்கரை பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் சுகாதாரமற்ற மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

கீழக்கரை நகராட்சி கமிஷனர் சுந்தரம், உணவு கலப்பட தடுப்பு அதிகாரி மோகன்ராஜ் மற்றும் சுகாதாரத்துறையினர் கீழக்கரையில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, காலாவதியான குளிர்பான பாட்டில்கள், ஐஎஸ்ஐ முத்திரையில்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து கீழக்கரை நகராட்சி கமிஷனர் சுந்தரம் கூறும்போது, கீழக்கரை நகராட்சிக்கென்று கலப்படம் கண்டுபிடிக்கும் அதிகாரி இதுவரை நியமிக்கப்பட வில்லை. விரைவில் நியமிக்கப்படுவார். அதன் பின்னர் அடிக்கடி சோதனை நடத்தப்படும்.

காலாவதியான மருந்து பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது போல், குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் வாங்கும் போதும் ஐஎஸ்ஐ முத்திரை உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும், என்றார்.

Last Updated on Wednesday, 02 June 2010 10:39
 

ரூ.50லட்சம் ஒதுக்கீடு ‘மேயர் மருத்துவ நிதி’ புதிய திட்டம் துவக்கம்

Print PDF

தினகரன் 02.06.2010

ரூ.50லட்சம் ஒதுக்கீடு மேயர் மருத்துவ நிதிபுதிய திட்டம் துவக்கம்

பெங்களூர், ஜூன் 2: பெங்களூர் மாநகரில் வாழும் ஏழைகளின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு மேயர் மருத்துவ நிதிஎன்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்த மேயர் எஸ்.கே.நடராஜ் முடிவு செய்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஏழைகளின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பல பெயர்களில் மருத்துவ நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்கள் மருத்துவ வசதி பெறும் நோக்கத்தில் வாஜ்பாய் ஆரோக்கியஸ்ரீ என்ற பெயரில் புதிய திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சி சார்பில் ஏழைகளுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேயர் மருத்துவ நிதிஎன்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்த மேயர் நடராஜ் முடிவு செய்துள்ளார். முதல் கட்டமாக ரூ.50 லட்சம் இதற்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ள மேயர், இத்திட்டத்திற்கு தொழிலதிபர்கள், தன்னார்வு தொண்டு அமைப்புகளின் உதவியை நாடவும் முடிவு செய்துள்ளார்.

மேயர் பெயரில் தொடங்கும் மருத்துவ நிதி உதவி திட்டத்தில் மாநகரில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் (பி.பி.எல். ரேஷன் கார்டு) குடும்பங்களை சேர்ந்தவர்களின் நீரிழிவு, சிறுநீரகம், இருதயம் போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டம் மூலம் உதவி வேண்டுவோர், நேரடியாக மாநகராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெற்ற 24 மணி நேரத்தில் சம்மந்தப்பட்ட வார்டு சுகாதார அதிகாரியின் பார்வைக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்து உடனடியாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேயர் கூறுகையில், ஏழை மக்களுக்கு சேவை செய்யும் வாயப்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி மேயர் மருத்துவ நிதி என்ற திட்டம் செயல்படுத்த முடிவு செய்துள்ளேன். இது எனக்கு பின் வரும் மேயர்களும் தொடர வேண்டும் என்பதால், தனிப்பட்ட முறையில் யாருடைய பெயரும் வைக்காமல், பொதுவாக மேயர் மருத்துவ நிதி என்று வைத்துள்ளோம். இது நல்ல பலன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

 


Page 235 of 519