Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

அனுமதியின்றி வெட்டப்படும் ஆடுகள் மாற்று இறைச்சிகளின் புழக்கத்தால் பீதிஉறக்கத்தில் அதிகாரிகள்

Print PDF

தினமலர்    01.06.2010

அனுமதியின்றி வெட்டப்படும் ஆடுகள் மாற்று இறைச்சிகளின் புழக்கத்தால் பீதிஉறக்கத்தில் அதிகாரிகள்

ராமநாதபுரம்: அனுமதியின்றி ஆடுகள் வெட்டப்படுவதால் , ஓட்டல்களில் மாற்று இறைச்சிகள் புழக்கத்தில் வருவது அதிகரித்து வருகிறது. வறண்ட மாவட்டமாக ராமநாதபுரம் இருந்த போதும், பணப்புழக்கத்தில் மாநகராட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு பணம்படைத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நகர் பகுதியில் ஏராளமான ஓட்டல்கள் உதயமாகி வருகின்றன. அசைவ பிரியர்கள் நிறைந்த இங்கு, அதை சார்ந்த உணவு விடுதிகளின் எண்ணிக்கையே அதிகம். போதாக்குறைக்கு இரவு நேரங்களில் மாமிசங்களுடன் கூடிய சூப் கடைகள் நிறைய உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளில் ஆடு இறைச்சிக்கு பதிலாக மாற்று இறைச்சிகள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆடுகள் அனுமதியின்றி வெட்டப்படுவதே இதற்கு காரணமாகும். நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள ஆடி அடிச்சாலையில் மட்டுமே ஆடுகளை வெட்ட வேண்டும் என்பது வரையறை. இங்கு வெட்டப்படும் ஆடுகளின் இறைச்சியில் முத்திரை குத்தப்படும். இதை கொண்டு ஆட்டு இறைச்சியை அடையாளம் காணமுடியும். இங்கோ அவரவர் விருப்பத்துக்கு கடைகளில் ஆடுகளை வெட்டி இறைச்சியை விற்கின்றனர். ஆறு ஆடுகள் வெட்டும் இடத்தில் விற்கப்படுவதோ 10 ஆடுகளின் இறைச்சியாக உள்ளது. வரிசையாக ஆடுகளின் தலையை அடுக்கி வைக்கப்படுவதால் மக்களும் நம்பி ஏமார்ந்து வருகின்றனர். மாற்று இறைச்சிகள் புழக்கத்தில் விடுவது ஒருபுறமிருந்தாலும், ஆடுகள் வெட்டப்படுவதை கண்காணிப்பதிலுமா சோம்பேறிதனம் வேண்டும். வருவாயையும் இழந்து, பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இது போன்ற நடவடிக்கையை அனுமதிப்பது ஆபத்தானதாகும். குறைந்த முதலீட்டில் லாபம் கிடைப்பதால் சில ஓட்டல்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

 

ஓட்டல், பேக்கரிகளில் அதிகாரிகள் சோதனை

Print PDF

தினமலர் 01.06.2010

ஓட்டல், பேக்கரிகளில் அதிகாரிகள் சோதனை

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று, நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.

நகராட்சி கமிஷனர் சுந்தரம் உத்தரவின் பேரில், நகர் நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் நல்லுசாமி, சரவணன், செந்தில்குமார், அங்குராஜ் மற்றும் உதவியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். குளிர்பான பாட்டில் கிடங்கில் ஆய்வு செய்து, காலாவதியான பாட்டில்களை திறந்து கீழே ஊற்றினர். நகர்நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் கூறியதாவது: தரமான பொருட்களை மட்டும் வாங்கி உபயோகப்படுத்த வேண்டும், சுத்தமான பொருட்களை சுகாதாரமான இடத்தில் விற்பனை செய்ய வேண்டும், என்ற விழிப்புணர்வை பொதுமக்கள், கடை வியாபாரிகளுக்கு ஏற்படுத்தவே இதுபோன்ற அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. பேக்கரிகளில் எண்ணெய் பலகாரங்களை, கண்ணாடி பெட்டியில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். ரோட்டின் ஓரத்தில் "'க்கள் மொய்க்கும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், என்றார்.

 

காலாவதி பொருள் விற்பனை: சூரம்பட்டியில் திடீர் ஆய்வு

Print PDF

தினமணி    31.05.2010

காலாவதி பொருள் விற்பனை: சூரம்பட்டியில் திடீர் ஆய்வு

ஈரோடு, மே 30: ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதி கடைகளில் காலாவதி பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, சுகாதார அலுவலர்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோடு சுகாதாரத் துறை துணை இயக்குநர் கோ.ரகுநாதன் உத்தரவின்பேரில், சித்தோடு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ப.மங்கையர்க்கரசி தலைமையில், உணவு ஆய்வாளர்கள் ந.ராமசாமி, ஆர்.சீனிவாஸ், எம்.பத்மநாபன், துப்புரவு ஆய்வாளர் ராமசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர், சூரம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

கடைகளில் விற்பனை செய்யப்பட்ட உணவுப் பொட்டலங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, எடை, விலை போன்ற விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளதா, பிஸ்கெட்கள், தண்ணீர் பாக்கெட்கள், குளிர்பானங்கள், மளிகைப் பொருள்கள் தரமானதாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேதி குறிப்பிடாத மற்றும் காலாவதியான பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

 


Page 238 of 519