Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

உலக கழிப்பறை தினமான நேற்று மாநகராட்சி பராமரிக்கும் கழிப்பறைகளின் சுத்தம் குறித்து ஆய்வு

Print PDF

தினமலர்         20.11.2013

உலக கழிப்பறை தினமான நேற்று மாநகராட்சி பராமரிக்கும் கழிப்பறைகளின் சுத்தம் குறித்து ஆய்வு

மதுரை : உலக கழிப்பறை தினமான நேற்று, மாநகராட்சி பராமரிக்கும் கழிப்பறைகளின் சுத்தம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மேயர் ராஜன்செல்லப்பா தலைமையிலான அதிகாரிகள்.

உலக கழிப்பறை தினம்' நேற்று; "இதுக்குமா தினம்?' என, கேட்கக்கூடாது. மனிதனின் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவை, கழிப்பறை. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 524 கழிப்பறைகளின் சுகாதாரம் குறித்து, மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில், துணை கமிஷனர் லீலா, துணைமேயர் கோபாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் தேவதாஸ், நகர்நல அலுவலர் டாக்டர் யசோதா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அலங்கோலமாய் காட்சியளிக்கும் பல கழிப்பறைகள், மேயரின் வருகைக்காக நேற்று சுத்தம் செய்யப்பட்டிருந்தன.

கழிப்பறையின் வெளியே சுகாதாரக் கேடாக காட்சியளித்த பகுதிகளை, பொடிகளை தூவி "அழகாக்கினர்'. பொது இடங்களில் சிறுநீர் கழித்தவர்களுக்கு ரூ.2,850 அபராதமும் விதித்தனர்! உலக கழிப்பறை தினம் என்பதால், "ஒரு நாள்' நடவடிக்கையாக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

 

தொண்டாமுத்தூரில் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு வாகன பிரசாரம்

Print PDF

தினகரன்          20.11.2013

தொண்டாமுத்தூரில் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு வாகன பிரசாரம்

தொண்டாமுத்தூர், : கோவை அருகே தொண்டாமுத்தூர் பேரூராட்சி சார்பில் தீவிர டெங்கு காய்ச்சல் மற்றும் கோமாரி நோய் தடுப்பு வாகன பிரசாரம் துவங்கியது. பிரசாரத்தை பேரூராட்சி தலைவர் ரவி துவக்கி வைத்தார்.

பிரசார வாகனம் கெம்பனூர், குப்பேபாளையம், வண்டிகாரனூர், வலையபாளையம், காளியண்ணன்புதூர், முத்திபாளையம், மல்லிகை நகர், தொண்டாமுத்தூர் உட்பட 15 வார்டுகளில்  வீதி, வீதியாக  சென்று டெங்கு காய்ச்சல் மற்றும் கோமாரி நோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விரிவாக விளக்கி பேசினர்.

பிரசாரத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் அசோக்குமார், துணைத்தலைவர் சேகர், கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

385 இடங்களில் நம்ம டாய்லெட்

Print PDF

தினகரன்          20.11.2013

385 இடங்களில் நம்ம டாய்லெட்

தாம்பரம், : தமிழகத்தில் 385 இடங்களில் நம்ம டாய்லெட் அமைக்கப்பட உள்ளது என நகராட்சி நிர்வாக ஆணையர் தெரிவித்தார்.

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கழிப்பறைகளில் தீவிர துப்புரவு பணி முகாம் நடந்தது. பல்லாவரம் நகராட்சியில் துப்புரவு பணியை நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளே தொடங்கி வைத்தார். பின்னர் குரோம்பேட்டை பஸ் நிலையம், சி.எல்.சி. லைன், கோதண்டன் நகர் பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை ஆய்வு செய்தார்.

பின்னர், நிருபர்களி டம் அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலா தளங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இலவசமாக பயன்படுத்தும் நம்ம டாய்லெட் 385 இடங்களில்  அமைக்கப்படவுள்ளன. இந்த பணி 4 மாதத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். மண்டல நகராட்சி ஆணையர் லட்சுமி, நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தாம்பரம்- வேளச்சேரி சாலையில் நகராட்சி நிர்வாக உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தலைமையில் கழிப்பறை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. இதில் நகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 26 of 519