தினமலர் 24.05.2010
தேனியை தொடர்ந்து பொது மக்களுக்கு காலார எச்சரிக்கை குடிநீரை காய்ச்சி குடிக்க யோசனை
ராமநாதபுரம்: தேனி மாவட்டத்தில் பரவிய காலாரவை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் காலார எச்சரிக்கை விடப்பட்டு பொது மக்கள் பாதுகாப்பான குடிநீரை பருகும்படி அறிவுருத்தப்பட்டு வருகிறது.தேனி மாவட்டத்தில் வயிற்று போக்கு காலாராவாக மாறி உயிரிழப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதார துறை தலைமையிடத்திலிருந்து ஒவ்வொரு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
தற்போது சுகாதார துறையின் அறிவுறுத் தலின்படி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குடிநீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக் கப்படுகிறது. மேலும் வயிற்று போக்கு தடுக்கும் வகையில் பொதுமக்கள் வீடுகளில் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஓட்டல்களில் காய்ச்சிய நீரை வழங்க வேண்டும்.
திறந்த நிலையில் உணவு பொருட்களை வைக்கக்கூடாது. குறிப்பாக தனியார் லாரிகளில் பாதுகாப்பின்றி கொண்டு வரும் குடிநீரை பொது மக்கள் வாங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார துறையினர் தங்களது பகுதிகளில் யாருக்கேனும் வயிற்று போக்கு லேசாக ஏற்பட்டால் உடனடியாக அவர்களை கண்காணித்து தகுந்த சிகிச்சை அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.