Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

காலாவதியான உணவுப்பொருட்களைவிற்பனை செய்தால் கடும் நடவடிக்கை:திருவாரூர் கலெக்டர் எச்சரிக்கை

Print PDF

தினமலர்      17.05.2010

காலாவதியான உணவுப்பொருட்களைவிற்பனை செய்தால் கடும் நடவடிக்கை:திருவாரூர் கலெக்டர் எச்சரிக்கை

திருவாரூர்:காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் (பொ) தங்கவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் காலாவதியான பொருட்கள் குறிப்பாக உணவுபொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விற்பனையாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உணவு பொருளுக்கும் உற்பத்தி தேதி மற்றும் காலாவதியாகும் காலம் பொட்டலத்தில் குறிப்பிடப்பட வேண்டும் என்று எடை மற்றும் அளவுகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விவரங்கள் இல்லாத பொட்டலமிடப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர், விற்பனையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பொட்டலப் பொருட்கள் ( ஒழுங்குமுறை) ஆணை 1975 விதி 5ன்கீழ் உற்பத்தி தேதி, அதிகபட்ச விற்பனை விலை, எடை, உற்பத்தியாளர் பெயர், முகவரி ஆகியவை குறிப்பிடாத பொட்டலப்பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை செய்யப்படும் பொட்டலப்பொருள்களை காலாவதி தேதிக்கு பிறகு கடைகளில் இருந்தும், கிடங்குகளில் இருந்தும் அகற்றி அதை அழித்துவிட வேண்டும். இவ்வாறு அழிக்கப்பட வேண்டிய காலாவதியான உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கும் நிறுவனங்கள் அவ்வாறு செய்யாமல் சட்டவிரோதமாக அவற்றை சிறு வணிகர்களிடம் விற்று விடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இத்தகைய செயல்களில் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்படும் என்பதால் காலாவதியான பொருள்களை அழிக்க தவறும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 273 ன் கீழும், உணவு கலப்பட தடைச்சட்டம் 1954ன்கீழ் உள்ள பிரிவு 7ன் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சட்டவிரோதமாக காலாவதியான உணவு மற்றும் பிற பொருள்களை அழிக்காமல் விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்கள், சிறு வணிகர்கள் மீது கலெக்டர் வாயிலாக நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 1986ன் பிரிவு 12(டி)ன் கீழ் வழக்கு தொடரப்படும்.

இந்த சட்டப்பிரிவு 14 (1) (ஜி) ன் கீழ் சட்ட விரோதமாக செயல்படும் நிறுவனங்களிடம் இருந்து நுகர்வோருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு போன்ற பாதிப்புகளுக்கான நஷ்ட ஈட்டை கணக்கிட்டு வசூலிக்கவும் நுகர்வோர் குறைதீர்மன்றங்கள், மாநில நுகர்வோர்குறைதீர் ஆணையம் உத்தரவிடலாம்.தரக்குறைவான அல்லது காலாவதியான பொட்டல பொருள்களை விற்பனை செய்வதாக தகவல் அறிந்தால் மாநில நுகர்வோர் சேவைமையம் தொலைபேசி எண் 044-28592828 ல் புகார் அல்லது தகவல் அளிக்கலாம். மேலும் இது தொடர்பாக மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் தலைவரான திருவாரூர் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் நேரிடையாக புகார் தெரிவிக்கலாம்.


 

காலாவதியான பொருள்கள் விற்பனை: ஆட்சியர் எச்சரிக்கை

Print PDF

தினமணி      17.05.2010

காலாவதியான பொருள்கள் விற்பனை: ஆட்சியர் எச்சரிக்கை

சிவகாசி, மே 16: காலாவதியான பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்த அவரது செய்தி குறிப்பு: ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் உற்பத்தி தேதி மற்றும் காலாவதியாகும் காலமும், தேதியும் பொட்டலத்தில் குறிப்பிட வேண்டும் என எடை மற்றும் அளவுகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டால், தயாரிப்பாளர் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை விலை, எடை, உற்பத்தியாளர் பெயர், முகவரி ஆகியவை இல்லாத பொருள்கள் விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறும் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காலாவதியான பொருள்கள் கடையிலோ, கிட்டங்கியிலோ இருந்தால் அவற்றை அழித்துவிட வேண்டும்.

இதனைச் செய்யத் தவறும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 273-ன் கீழும், உணவு கலப்பட தடைச் சட்டம் 1954-ன் கீழ் உள்ள பிரிவு 7-ன் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இவ்வாறு சட்ட விரோதமாகவும், சமூகத்தின்பால் அக்கறையில்லாமல் எதிர்கால சந்ததியினரின் உடல் நலத்தினை கருத்தில் கொள்ளாமலும், காலாவதி ஆகிய உணவு மற்றும் இதர பொருள்களை அழிக்காமல் விற்பனை செய்யும் பொரிய நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீது மாவட்ட ஆட்சியர் மூலம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்படும்.

சட்ட விராதமாக செயல்படும் நிறுவனங்களிடமிருந்து நுகர்வோருக்கு உடல்நலக் குறைவு போன்ற பாதிப்புக்களுக்கான நஷ்டஈட்டை கணக்கிட்டு வசூலிக்கவும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிடலாம்.

காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் அறிந்தால் மாநில நுகர்வோர் சேவை மையத்திற்கு 044-28592828 என்ற தொலைபேசி மூலம் புகார் அல்லது தகவல் அளிக்கலாம். மேலும் இது தொடர்பாக மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் நேரடியாகப் புகார் அளிக்கலாம்.

 

காலாவதி உணவுப்பொருள் விற்பனை: தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்

Print PDF

தினமணி    17.05.2010

காலாவதி உணவுப்பொருள் விற்பனை: தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்

ஈரோடு, மே 16: காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் குறித்து தொலைபேசி மூலம் மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் ஆர்.சுடலைக்கண்ணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

÷கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் பைகளிலும் உற்பத்தித் தேதி, எடையளவு, விற்பனை விலை, உற்பத்தியாளர் முகவரி, காலாவதியாகும் தேதி ஆகிய விவரங்கள் குறிப்பிடப்படவேண்டும் என்று எடை மற்றும் அளவுகள் சட்டம் குறிப்பிட்டுள்ளது. இதனை மீறும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கையெடுக்கப்படும்.

காலாவதியான உணவுப்பொருட்களை அழிக்காமல் சிறு வணிகர்களிடம் விற்பனை செய்துவிடுவதாக, ஒரு சில பெரிய நிறுவனங்கள் மீது புகார் பெறப்பட்டுóள்ளது. சமூகத்தின் மீது அக்கறையில்லாமல் இவ்வாறு செயல்படும் பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் படி கடும் நடவடிக்கையெடுக்கப்படும்.

÷மேலும், இந்த உணவுப்பொருட்களால் நுகர்வோர் பாதிக்கப்பட்டால், நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் மூலம், உணவுப்பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்களிடம் இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறித்து மாநில நுகர்வோர் சேவை மையத்துக்கு 044- 2859 2828 என்ற தொலைபேசி எண்ணிலும், மாவட்ட ஆட்சியருக்கு 94450 00237 என்ற செல்போன் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

÷நுகர்வோர் உடல்நலத்தைப் பாதுகாத்திட, ஈரோடு மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு, காலாவதி பொருட்கள் விற்பனை, கலப்படம் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கையெடுக்கப்படும், என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

 


Page 261 of 519