Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

போலி குளிர்பான கம்பெனிக்கு சீல் காலாவதியான பொருட்கள் அழிப்பு

Print PDF

தினமலர்   12.05.2010

போலி குளிர்பான கம்பெனிக்கு சீல் காலாவதியான பொருட்கள் அழிப்பு

திண்டுக்கல்: சாணார்பட்டியில் போலியாக குளிர்பானம் தயாரித்த கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. காலாவதியான ஆட்டா மாவு, ரொட்டி, பிஸ்கட்,புட்டு மாவு அழிக்கப்பட்டன.சாணார்பட்டியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஸ்குமார், டாக்டர் பூங்கோதை, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கமாலுதீன், நேர்முக உதவியாளர் அப்துல்பாரி ஆகியோர் ஒட்டல்கள்,சோடா கம்பெனி, உணவு விடுதி, மளிகை கடைகளில் சோதனை செய்தனர்.

கொசவபட்டியில் போலியான லேபிள் ஒட்டி குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது.மேலும் சாணார்பட்டி கடைகளில் காலாவதியான பிஸ்கட், ரொட்டி, சர்பத், ஆட்டா மாவு, புட்டுமாவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. சுகாதார துணை இயக்குனர் ஜெகதீஸ்குமார் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கடைகளில் விற்கும் பொருட்களின் பாக்கெட் மீது தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி பற்றிய விவரங்கள் எழுதப்பட வேண்டும்.அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் புகார் கூறுவதற்கு வசதியாக சுகாதார ஆய்வாளர் மொபைல் எண்கள் எழுதி வைக்கப்படும். கடைகளில் பொருட்கள் வாங்கும் போது காலாவதியான பொருட்கள் இருப்பதை கண்டால் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார். *பழநியில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நகராட்சி சுகாதார அதிகாரி (பொறுப்பு) பர்வீன் பானு தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பொருட்களை பறிமுதல் செய்தனர். சுகாதாரமில்லாத 2 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

 

கெட்டுப்போன புரோட்டா புளித்த இட்லி மாவு பறிமுதல்

Print PDF

தினமலர்   12.05.2010

கெட்டுப்போன புரோட்டா புளித்த இட்லி மாவு பறிமுதல்

மதுரை: மதுரை பெரியார் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் பகுதி ஓட்டல்களில் கெட்டுப்போன புரோட்டா, புளித்த இட்லி மாவு மற்றும் மாட்டிறைச்சியை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவர் இசையமுதன் (21). மதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே இருந்த சிவபார்வதி ஓட்டலில் சாப்பிட்டபின், உடல் நலக்குறைவால் மே 2 ல் இறந்தார். இதன் எதிரொலியாக மாநகராட்சி அலுவலர்கள் மதுரை ஓட்டல்களில் மே 3 முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு 7.30 மணி முதல் 8.10 மணி வரை உதவி கமிஷனர் தேவதாஸ் தலைமையில், தெற்குமாசி வீதி புகாரி மட்டன் ஸ்டால், மேல வடம் போக்கித் தெரு பீலா தால்சா பிரியாணிக் கடை, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் கார்த்தி, .கே.ஜெயம், பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஜீவா, கே.எஸ்.ஆர்.,ஓட்டலகளில் திடீர் சோதனை நடத்தினர்.திறந்த வெளியில் சுகாதாரமற்ற முறையில் இருந்த மாட்டிறைச்சி, குருமா, குடல் குழம்பு, கெட்டுப்போன புரோட்டா, சாம்பார், புரோட்டா மாவு, புளித்த இட்லி மாவு, காய்ந்த பூரி மற்றும் குடிநீரை பறிமுதல் செய்யப்பட்டது.பெரியார் பஸ் ஸ்டாண்ட் ராஜாராம் கடையில் கெட்டுப்போன ஜூஸ், பழங்கள், மீனாட்சி ஸ்வீட் ஸ்டாலில் புளித்த மாவில் தயாரித்த இனிப்பு வகைகள், முருகன் காபி பாரில் காலாவதியான கார வகைகள், முத்துச் செல்வி டீ ஸ்டாலில் கெட்டுப்போன மோர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். போலீஸ் உதவிக் கமிஷனர் கணேசன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.குருமா சிவப்பது ஏன் நேற்று ஓட்டல்களில் பறிமுதல் செய்யப்பட்ட குருமாக்கள் சிவப்பாக இருந்தன. மக்களை கவர வேண்டும் என்ற நோக்கில், துணிகளுக்கு சாயம் ஏற்ற பயன்படுத்தும் சிவப்பு நிற 'டை' பவுடரை சட்டவிரோதமாக குருமாவில் கலந்திருந்தனர். இந்த குருமாவை தொடர்ந்து சாப்பிட்டால், கல்லீரல் பாதிப்பு, குடல் புண் உட்பட பல்வேறு தீராத நோய்கள் ஏற்படும்.

 

மேட்டூர் கடைகளில் அதிரடி சோதனை காலாவதி உணவு பொருள் பறிமுதல்

Print PDF

தினமலர்     12.05.2010

மேட்டூர் கடைகளில் அதிரடி சோதனை காலாவதி உணவு பொருள் பறிமுதல்

மேட்டூர்: மேட்டூர் பஸ் ஸ்டாண்ட், ஆர்.எஸ்., பகுதியில் உள்ள டீக்கடை, மளிகை கடைகளில் நகராட்சி உணவு, சுகாதார ஆய்வாளர் குழுவினர் சோதனை நடத்தி 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காலாவதி உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேட்டூர் நகராட்சி உணவு ஆய்வாளர் இப்ராஹிம், சுகாதார ஆய்வாளர்கள் வேலவன், பாஸ்கர், சுகாதார மேற்பார்வையாளர்கள் ராபர்ட், கந்தசாமி, காளியண்ணன் குழுவினர் நேற்று மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் காலாவதியான பிஸ்கட் பாக்கெட், கூல் டிரிங்க்ஸ், ரொட்டி, காரவகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பஸ் ஸ்டாண்டில் 20க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்திய குழுவினர் காலாவதி உணவு பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து லாரியில் கொட்டினர். அதன் பின்னர் மேட்டூர் மெயின்ரோட்டில் உள்ள மளிகை மற்றும் டீக்கடைகள், மேட்டூர் ஆர்.எஸ்., பகுதியில் உள்ள கடைகளிலும் சோதனை நடந்தது. சோதனையின் போது 30 ஆயிரம் ரூபாய் மதிப்பு காலாவதி உணவு பொருட்களை குழுவினர் பறிமுதல் செய்தனர். ஆர்.எஸ்., பகுதியில் உள்ள சில கடைகளில் தயாரித்து பல ஆண்டுகள் ஆன மைதாமாவு பாக்கெட், டால்டா பாக்கெட், மரத்தூள் கலந்த கலப்பட டீத்தூள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. கலப்பட உணவு பொருட்கள் அனைத்தும் பள்ளம் தோண்டி பூமியில் புதைக்கப்படும் என உணவு ஆய்வாளர் தெரிவித்தார்.

 


Page 267 of 519