Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினமலர்       12.05.2010

காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

மன்னார்குடி: மன்னார்குடி பகுதி கடைகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 24 ஆயிரம் ரூபாய் மதிப்பு காலாவதியான மளிகைப்பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.மன்னார்குடி நகராட்சி ஆணையர் மதிவாணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் தேரடி, மேலராஜவீதி, பஸ்ஸ்டாண்ட் உட்பட பல பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல கடைகளில் இருந்த 24 ஆயிரம் ரூபாய் மதிப்பு காலாவதியான மளிகைப்பொருட்கள், எண்ணை, குடிநீர் பாக்கெட், பழரச பானங்கள் உட்பட உணவு பொருட்களை கைப்பற்றினர். பின்னர் அவற்றை நகராட்சி அலுவலக வாசலில் கொட்டி தீவைத்து அழித்தனர்.இதுகுறித்து ஆணையர் மதிவாணன் கூறுகையில், காலாவதியான பொருட்களை வைத்துள்ளவர்கள் தாங்களாகவே அதை விற்பனை செய்யாமல் அப்புறப்படுத்தி அழித்து விடவேண்டும். இல்லாவிடில் அதிகாரிகள் சோதனை செய்து மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

சுகாதார துறையினர் அதிரடி ஆய்வு

Print PDF

தினமலர்          12.05.2010

சுகாதார துறையினர் அதிரடி ஆய்வு

திருத்தணி : திருத்தணி நகராட்சி செயல் அலுவலர் செண்பகராஜ் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் கருப்பையன், மேற்பார்வையாளர் தாமுவேல் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் திருத்தணி பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினர். போலீசாரின் உதவியுடன் ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரி, பெட்டி கடைகளில் நடத்திய ஆய்வில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆய்வின்போது ஒன்றரை டன் எடை கொண்ட தரமற்ற நெய், எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளை பறிமுதல் செய்து அழித்தனர். இதுபோன்று சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறையினர் எச்சரித்தனர்.
மப்பேடு: பேரம்பாக்கம் அடுத்த மப்பேடு பகுதியில் உள்ள கடைகளில் திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் சம்பத் உத்தரவின் பேரில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அருட்செல்வி, மெய்யநாதன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனை செய்தனர். அப்போது, காலாவதியான மளிகை பொருட்கள் மற்றும் தரமற்ற உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். தரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களை எச்சரித்தனர்.

 

டிரம்மில் வைத்து விற்கப்பட்ட சமையல் எண்ணெய் பறிமுதல்

Print PDF

தினமலர்     12.05.2010

டிரம்மில் வைத்து விற்கப்பட்ட சமையல் எண்ணெய் பறிமுதல்

ராணிப்பேட்டை:வாலாஜாபேட்டையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாயத் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி காலாவதியான உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.தாசில்தார் கிருபானந்தம், நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம் மற்றும் ஊழியர்கள் நேற்று மாலை டிரங்க் ரோட்டில் துவங்கி மளிகைக் கடைகள், பழக்கடைகள், ஓட்டல்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் உள்ள தாயரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை பறிசோதனை செய்த அவர்கள் தரமற்ற காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர். டிரம்மில் வைத்து விற்கப்பட்ட சமையல் எண்ணெயும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பழக்கடைகளில் இருந்த அழுகிய பழங்கள், பழைய வாட்டர் பாக்கெட்டுகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த ரெய்டால் வாலாஜாபேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

 


Page 268 of 519