Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சூப்பர் மார்க்கெட்டுகளில் காலாவதியான உணவு பறிமுதல் : குடந்தையில் அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினமலர் 06.05.2010

சூப்பர் மார்க்கெட்டுகளில் காலாவதியான உணவு பறிமுதல் : குடந்தையில் அதிகாரிகள் அதிரடி

கும்பகோணம் : கும்பகோணத்தில் 4 சூப்பர் மார்க்கெட்டுகளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்ததை நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.காலாவதியான மருந்து மாத்திரைகளை தொடர்ந்து உணவுப் பொருட்களையும் சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து நேற்று கும்பகோணம் நகராட்சி ஆணையர் பூங்கொடி, நகர்நல அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தஞ்சை மெயின் சாலையில் உள்ள 4 சூப்பர் மார்க் கெட்டுகளில் இச்சோதனை நடந்ததால் பரபரப்பு ஏற் பட்டது. இந்த கடைகளில் சோதனையிட்ட போது கடந்த 2009ம் ஆண்டே காலாவதியான 'ஹால்ஸ்', 2008ல் காலாவதியான மைதா, கோதுமை, ரவா, அப்பளம், 2009ல் காலாவதியான குழந்தைகள் விரும்பி உண்ணும் முன்னணி நிறுவனங்களின் பிஸ்கட்கள்.

வெளிநாட்டு கம்பெனிகளின் பெயரிலான டின்களில் அடைக்கப்பட்ட உயர் ரக குளிர்பானங்கள், பல தரப்பட்ட பேரீட்சம் பழங் கள், திராட்சை, அத்தி போன்ற உலர்ரக பழ வகைகள், சமையல் எண்ணை, சேமியா, நெய், புழுத்துபோன பருப்பு வகைகள், மாவாகிப்போன கொண்டக்கடலை போன்றவற்றை இச்சோதனையின் போது நகராட்சியினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் என கணக் கிடப்பட்டுள்ளது.

இதுபற்றி நகராட்சி ஆணையர் பூங்கொடி கூறியதாவது: தினமும் அதிக மக்கள் வந்து வாங்கிச் செல்லும் சூப்பர் மார்க்கெட்களில் இதுபோல 2 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியான உணவு பொருட்கள் இருந்தது வேதனையாக உள்ளது. முதல் முறையாக கைப்பற்றியதால் விற்பனையாளர்களை எச்சரித்து உள்ளோம்.

இதுபோன்ற நடவடிக்கை தொடரும். இனிமேல் இதுபோல் விற்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல பொருட்களில் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் தேதி, மாதம், வருடங்கள் இல்லை. அதுபோன்ற பொருட்களும் கைப்பற் றப் பட்டுள்ளது.

கலப்படம் உள்ளதா என கண்டறியும் வகையில் 48 பொருட்கள் 'சாம்பிள்' எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்படும். ஊறுகாயில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொருட்களை வாங்கும் மக்கள் காலாவதியான தேதியை பார்த்து வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Thursday, 06 May 2010 07:06
 

கோவில்பட்டியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினமலர் 06.05.2010

கோவில்பட்டியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் காலாவதியான உணவுப் பொருட்களை பயன்படுத்துவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷ்னர் அறிவித்துள்ளார்.கோவில்பட்டி நகராட்சி கமிஷ்னர் விஜயராகவன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் ராஜசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முத்துக்குமார், வெங்கடேஷ் மற்றும் சுகாதார பணியாளர்கள் கோவில்பட்டி நகரப்பகுதியில் அமைந்திருக்கும் ஹோட்டல்கள், கடைகளில் திடீர் ஆய்வுள் மேற்கொண்டனர். இதில் ரயில்வே ஸ்டேசன் ரோடு, மெயின் ரோடு, பசுவந்தனை ரோடு, எட்டயபுரம் ரோடு உட்பட பல பகுதிகளில் நடந்த சோதனையில் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள், தேயிலை, கூல்டிரிங்ஸ், கடலைமாவு மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.

ஒருசில கடைகளில் இருந்த காலாவதியான பொருட்களை கைப்பற்றி அழித்தனர். தொடர்ந்து காலாவதியான உணவுப்பொருட்கள் பயன்படுத்தாமல் இருப்பது குறித்தும், உணவு பொருட்களை முறையாக பயன்படுத்துவது குறித்தும் அறிவுரை வழங்கினர். மேலும் ஹோட்டல், கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்படால் பொதுசுகாதாரத்துறை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில்பட்டி நகராட்சி கமிஷ்னர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 06 May 2010 07:03
 

உணவு பொருட்களில் கலப்படம்: உடுமலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர் 06.05.2010

உணவு பொருட்களில் கலப்படம்: உடுமலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

உடுமலை : உடுமலையில், உணவுப்பொருட்களில் கலப்படம் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை குறித்து ஆர்.டி.., தலைமையில் சுகாதாரத்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தினர்.போலி மருந்துகளை தொடர்ந்து, உணவுப்பொருட்களிலும் கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் பாதித்து வருகின்றனர். மதுரையில் சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவு சாப்பிட்ட கல்லூரி மாணவர் இறந்தார்.

இதனையடுத்து, ஓட்டல்கள் மற்றும் கடைகளில் ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் நேற்று உடுமலை நகரம் மற்றும் கிராமங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். உடுமலை ஆர்.டி.., சோமசேகரன், உடுமலை தாசில்தார் சபாபதி, நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் காமராஜ், ராமகிருஷ்ணன், எரிசனம்பட்டி வட்டார ஆய்வாளர்கள் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் குழு கடைகளில் ஆய்வு செய்தது.

உடுமலை பஸ் ஸ்டாண்ட் கடைகளில் ஆய்வு செய்த போது, காலாவதியான குடிநீர், பால், மோர், தயிர், குளிர்பானங்கள் ஆகியவை விற்பனைக்காக இருந்தது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள், டீத்தூள், வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்ட பட்டாணி, கடலை, கேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைகளில் தரமான பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

அதே போல், ஓட்டல்களில் உணவு தயாரிக்கும் இடம், பயன்படுத்தும் பாத்திரங்கள், பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து விற்க வேண்டும், காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவு பொருட்கள் அடைத்து விற்க கூடாது என அறிவுறுத்தினர். பல கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். அதே போல், உடுமலை , மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களிலுள்ள கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தினர்.

அதிகாரிகள் கூறுகையில்,' தரமான உணவு பொருட்கள் , சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, தயாரிப்பு நிறுவனம், 'பேட்ஜ்' எண் ஆகிய தகவல்கள் உள்ள உணவு பொருட்களை மட்டுமே வாங்கி விற்பனை செய்ய வேண்டும், உணவு பொருட்களால் பொதுமக்கள் பாதித்தால் விற்கும் கடைக்காரர்கள்தான் பொறுப்பு' என எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் அடிக்கடி ஆய்வு செய்யப்படும்' என்றனர்.

Last Updated on Thursday, 06 May 2010 07:01
 


Page 273 of 519