Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

போலி குடிநீர் பாக்கெட் அழிப்பு

Print PDF

தினமலர் 05.05.2010

போலி குடிநீர் பாக்கெட் அழிப்பு

உச்சிப்புளி: உச்சிப்புளி உணவு ஆய் வாளர் கருணாநிதி, வட்டார சுகாதார மேற் பார்வையாளர் அண்ணாமலை, சுகாதார ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் சுகாதார துறையினர் உச்சிப் புளி, பெருங் குளம், நாகாச்சி பகுதிகளில் கடை, ஓட்டல்களில் விற் பனைக்கு வைக்கப்பட்டிருந்த குடிநீர் பாக்கெட்டுகளை ஆய்வு செய்தனர். இதில் பதிவு எண், தயாரிப்பு தேதி இல்லாத குடி நீர் பாக்கெட், பாட் டில் கள் பறிமுதல் செய் யப் பட்டு அழிக்கப் பட் டன.

Last Updated on Wednesday, 05 May 2010 06:20
 

காலாவதி உணவுபொருளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; சட்டசபையில் அமைச்சர் வேலு எச்சரிக்கை

Print PDF
மாலை மலர் 04.05.2010

காலாவதி உணவுபொருளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; சட்டசபையில் அமைச்சர் வேலு எச்சரிக்கை

காலாவதி உணவுபொருளை விற்றால்      கடும் நடவடிக்கை எடுக்கப்படும்;      சட்டசபையில் அமைச்சர் வேலு எச்சரிக்கை

சென்னை, மே. 4-

சென்னையில் காலாவதி உணவுப்பொருள் சிக்கியது தொடர்பாக சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் சேகர் பாபு (.தி.மு..), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), வேல்முருகன் (பா...) மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்டு) சதன் திருமலைக்குமார் (.தி.மு..), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தை) ஆகியோர் பேசினார்கள். இதற்கு பதில் அளித்து உணவுத்துறை அமைச்சர் எ.. வேலு கூறியதாவது:-

சென்னை வண்ணாரப் பேட்டை ஜி.. சாலை 4-வது சந்தில் உள்ள ஒரு கிடங்கில் காலாவதி உணவுப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போனில் தகவல் வந்தது. உடனே துறை இணை ஆணையர், உணவுப் பொருள் வழங்கல்-நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதார துறையினர், போலீஸ் அதிகாரிகளுடன் அந்த கிடங்கை ஆய்வு செய்தனர்.

அந்த கிடங்கை வாடகைக்கு எடுத்திருந்த துரைப்பாண்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இதனால் பூட்டை உடைத்து சோதனையிட்டனர்.

அங்கு காலாவதியான அரிசி, துவரம் பருப்பு, மிளகாய், டீ தூள், புளி, சாக்லேட்கள், சோப்பு பவுடர்கள், பிஸ்கட், பேஸ்ட் போன்றவை இருந்தன. அங்குள்ள மக்களிடம் விசாரணை செய்ததில் பெரிய கடைகளில் காலாவதியான பொருட்களை குறைந்த விலைக்கு துரைப்பாண்டி வாங்கி, சேதம் அடைந்த பாக்கெட் என்று சொல்லி குறைவான விலைக்கு மறு சுழற்சியில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 47 வகையான உணவு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துரைப்பாண்டி மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழம், உணவு கலப்பட தடுப்புச்சட்டத்தின் கீழம் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

ராயபுரம் போலீசார் சட் டப்பிரிவு 273, 420 இந்திய தண்டனை சட்டம் 37, மருந்து அழகுப்சாதனப்பொருட்கள் தடுப்பு சட்டம் 37 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் ஜெகன், சுடலை இருவர் கைதாகி உள்ளனர். வியாபாரத்தை நடத்திய துரைப்பாண்டி தலைமறைவாகி விட்டதால் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.

அனைத்து மாவட்டங்களிலும் இதேபோல காலாவதி உணவுப்பொருள் உள்ளதா என்று ஆய்வு செய்ய கலெக்டர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

நேற்று கோவை மாவட்டத்தில் சோதனை நடத்தி உள்ளனர். இது சுகாதாரத் துறை சம்பந்தப்பட்டது. என்றாலும் நாங்கள் தட்டிக் கழிக்காமல் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளோம்.

இதில் மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

உயர்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் நுகர்வோர் மையம் தொடங்கப்பட்டு பெற்றோருக்கும் விழிப்புணர்வை உருவாக்கி வருகிறோம்.

தமிழ்நாட்டில் 6 கோடியே 67 லட்சம் பேர் உள்ளனர். பல சரக்கு கடை, சூப்பர் மார்க்கெட் போன்ற பல கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்கும்போது, அதுதரமான பொருள்தானா என்பதை பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.

இந்த விஷயத்தை பொறுத்த வரை குற்றவாளிகள் மீது தமிழக அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும். முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி மேலும் கடுமையான சட்டத்தை அமல்படுத்தி நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்படும்.

பன்னாட்டு கம்பெனியில் இந்த பொருட்களை இவர்கள் வாங்கி விற்றது தெரிய வந்தால் அந்த நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். வ்வாறு அமைச்சர் எ.. வேலு கூறினார்.

Last Updated on Tuesday, 04 May 2010 11:38
 

காலாவதி பொருள் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்; சட்டசபையில் வற்புறுத்தல்

Print PDF

மாலை மலர் 04.05.2010

காலாவதி பொருள் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்; சட்டசபையில் வற்புறுத்தல்

சென்னை, மே. 4-

காலாவதி உணவு பொருள் விற்பனை தொடர்பாக சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

பி.கே.சேகர்பாபு (.தி. மு..):- சென்னையில் காலாவதி பொருட்களும், கலப்பட பொருட்களும் தாராளமாக விற்கப்படு கின்றன. கொள்ளை கூட்ட கும்பலே இதில் தீவிர விற்பனையில் ஈடுபடுகிறது.

இந்த பொருட்களை குடிசை பகுதிகளில் அதிகம் விற்று உள்ளனர். காலாவதி உணவு பொருட்களை விற்க முன்னணி வணிக நிறுவனங்கள் ஊக்குவிக் கின்றன. காலாவதியான மருந்து பிடிபட்ட பரபரப்பு அடங்குவதற்குள் காலாவதி உணவு பொருட்களும் தாராளமாக புழக்கத்தில் உள்ளன. இதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சமூக விரோத கும்பல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகள் சுலபமாக ஜாமீனில் வந்து விடுகின்றனர்.

எனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர்களை ஜெயிலில் அடைக்க வேண்டும், சட்டத்தை கடுமை யாக்க ஆயுள் தண்டனை வரை விதிக்கும் அளவுக்கு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்.):- மத்திய அரசு ஏற்கனவே உணவு கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆயுள் தண்டனையை சட்டமாக நிறைவேற்றி உள்ளது. அதை தமிழ்நாட்டிலும் நாம் கொண்டு வரவேண்டும். இதற்கு ஒரு தனியாக அதிகார அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

பெரிய சூப்பர் மார்க்கெட் கடைக்காரர்கள் தான் காலாவதி பொருளை சந் தைக்கு விற்கிறார்கள். எனவே இதன் பின்னணியில் உள்ள தொழில் அதிபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகன் (பா...):- இன்று நாம் சாப்பிடும் எல்லாவற்றிலும் கலப்படம் உள்ளது. குடிக்கும் டீயில் கூட முந்திரி கழிவுகளை கலந்து விடுகிறார்கள். எனவே உயிரோடு விளையாடும் கலப்படக்காரர்கள் மீதும் காலாவதி பொருள் விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகேந்திரன் (மார்க்சிஸ்டு கம்யூ¢.):- உயிரை பறிக்கும் காலாவதி, கலப்பட பொருட்கள் விற்பவர்கள் மீது தயவு தாட்சன்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போல சிவபுண்ணியம் (இந்தியகம்யூ.), சதன் திருமலைகுமார் (.தி.மு..), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தை) ஆகியோரும் இந்த கருத்துக்களை வலியுறுத்தி பேசினார்கள்.

 


Page 278 of 519