Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்

Print PDF

தினமணி 26.04.2010

ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்

மதுரை, ஏப். 25: அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காணவரும் பக்தர்களுக்கு நடமாடும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளது என்று மதுரை மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

மதுரையில் சித்திரை திருவிழாவுக்காக அழகர் ஆற்றில் இரங்கும் நிகழ்ச்சிக்கு விழாவிற்கு முன்னதாக வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டில் போதிய மழை இல்லாத நிலையில் அணையில் 30 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

அணையில் குடிநீர் பயன்பாட்டுக்காக உள்ளதால், தண்ணீர் திறப்பு இல்லை. எனினும் பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி மூலம் அனைத்து ஏற்பாடுகளும் தாற்காலிகமாக செய்து தரப்பட உள்ளது.

பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் 100 சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்படும். முக்கியமான இடங்களில் ஆம்புலன்ஸ் வசதியுடன் 20 இடங்களில் மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் துப்பரவுப் பணிகளை செய்வதற்கு 400 பேர் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட உள்ளாதாக ஆணையர் தெரிவித்தார்.

 

சாத்தான்குளத்தில் இறைச்சி கடைகளில் சுகாதாரத் துறையினர் சோதனை

Print PDF

தினமணி 24.04.2010

சாத்தான்குளத்தில் இறைச்சி கடைகளில் சுகாதாரத் துறையினர் சோதனை

சாத்தான்குளம், ஏப். 23: சாத்தான்குளம் பகுதி இறைச்சி மற்றும் குளிர்பானக் கடைகளில் சுகாதாரத் துறையினர் திடீரென புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

சாத்தான்குளம் பகுதியில் சுகாதார கேடு விளைக்கும் வகையில் இறைச்சியும் தரமற்ற நிலையில் குளிர்பானங்களும் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அதன் அடிப்படையில் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் உமா உத்தரவின்பேரில் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயகணேஷ் ஆலோசனையின் படி வட்டார உணவு ஆய்வாளர் முத்துராஜா, சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர்செல்வதாஸ், மந்திரராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் புதன்கிழமை இங்குள்ள இறைச்சிகடைகள், மற்றும் குளிர்பானக் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

காலாவதி மற்றும் தயாரிப்பு தேதியினை அறிந்து குளிர்பானங்கள் அருந்த வேண்டும் என பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்

 

கர்ப்பிணிக்கு காலாவதி மருந்து

Print PDF

தினமணி 23.04.2010

கர்ப்பிணிக்கு காலாவதி மருந்து

கோவில்பட்டி, ஏப். 22: கோவில்பட்டி நகராட்சி சுகாதார செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கர்ப்பிணிக்கு காலாவதி மருந்தை வழங்கியதாக கோவில்பட்டி நகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை மகாராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் மகன் செல்வம் (28) ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி முத்துமாரியம்மாள் (25), 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கோவில்பட்டி நகராட்சி சுகாதார செவிலியர் மற்றும் உதவியாளர்கள் வீரவாஞ்சி நகரிலுள்ள ஆலய வளாகத்தில், அப் பகுதியிலுள்ள கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தடுப்பூசி, மருந்துகளை வழங்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனராம்.

அப்போது, முத்துமாரியம்மாளுக்கு உப்பு சர்க்கரை கரைசல் அடங்கிய 3 பாக்கெட்டுகளை அளித்தனராம். அதில், 2 பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி 06/2008 என்றும், காலாவதி தேதி தயாரிப்பிலிருந்து 18 மாதங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம், நகராட்சி ஆணையர் விஜயராகவனிடம் வியாழக்கிழமை புகார் அளித்தார்.

இதனையடுத்து, ஆணையர், சுகாதார அலுவலர் ராஜசேகரனை அழைத்து புதன்கிழமை எந்த பகுதியெல்லாம் சுகாதார ஊழியர்கள் முகாமிட்டார்களோ, அந்தப் பகுதிகளுக்குச் சென்று, காலாவதி மருந்து ஏதேனும் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார். அதன்பேரில், நகர்மன்றத் தலைவி மல்லிகா, சுகாதார அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் சீனிவாசன், வெங்கடேஷன் உள்ளிட்டோர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், சுகாதார அலுவலர் ராஜசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதன்கிழமை வழங்கப்பட்ட மருந்துகளை ஆய்வு செய்தோம். அதில், காலாவதியான மருந்துகள் விநியோகம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், முத்துமாரியம்மாளுக்கு வழங்கிய உப்பு சர்க்கரை கரைசல் பாக்கெட் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இனி வரும் காலங்களில் மருந்துகள் வழங்கும்போது, காலாவதி தேதியை சரி பார்த்த பின் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.

 


Page 287 of 519