Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

போலி டீத்தூள் தயாரிக்கும் குடோன்

Print PDF

தினமணி 23.04.2010

போலி டீத்தூள் தயாரிக்கும் குடோன்

கள்ளக்குறிச்சி, ஏப்.22: கள்ளக்குறிச்சி அருகே போலி டீத்தூள் தயாரிக்கும் குடோனை சோதனையிட்டு பல லட்சம் மதிப்புள்ள டீத்தூள் மற்றும் மூலப் பொருள்களை சுகாதாரத்துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த அம்மையகரம் சமத்துவபுரம் செல்லும் சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் போலி டீத்தூள் தயாரித்து வருவதாக கள்ளக்குறிச்சி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் எம்.கீதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து தொழில் நுட்ப நேர்முக உதவியாளர் கே.தங்கராசு, சின்னசேலம் மருத்துவ அலுவலர் அ.தர்மேந்திரன், சின்னசேலம் உணவு ஆய்வாளர் எம்.லட்சுமணபெருமாள், சுகாதார ஆய்வாளர் கே.மகாலிங்கம், சின்னசேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எ.லட்சுமி உள்ளிட்ட பலர் குழுவாக சென்றனர்.

÷அங்கு நடராஜன் என்பவரது வீட்டில் போலி டீத்தூள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்தது. நடராஜன் தனது வீட்டை கடந்த 2 ஆண்டு காலமாக சேலம் மாவட்டம் மல்லூரை சேர்ந்த மாதையன் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் மாதையன் போலீ டீத்தூள் தயாரித்து குவியலாகவும், மூட்டை கட்டி வைத்திருந்தாகத் தெரிகிறது.

÷மேலும் அதன் மூலப் பொருட்களான புளியங்கொட்டை, முந்திரிதோல், வாஷிங்சோடா உள்ளிட்டவற்றை வைத்திருந்தாராம்.

÷அவரது வீட்டின் பின்புறம் டீத்தூள் உலர வைத்திருந்ததையும் சுமார் 10 டன் எடையுள்ள டீத்தூளை துணை இயக்குனர் பறிமுதல் செய்தார். சின்னசேலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டீத்தூள் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

 

கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான உப்புகரைசல் பாக்கெட்

Print PDF

தினமலர் 23.04.2010

கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான உப்புகரைசல் பாக்கெட்

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சி சார்பில் கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான உப்புக்கரைசல் பாக்கெட் வழங்கிய சம்பவம் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு சர்க்கஸ் மைதானம் அருகே மகாராஜபுரம் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் செல்வம் (28). இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணமாகி முத்துமாரியம்மாள் (25) என்ற மனைவி உள்ளார். இவர் தற்போது சுமார் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவில்பட்டி நகராட்சி சார்பில் வழங்கப்படும் கர்ப்பிணி மருத்துவ உதவிகளை பெற முத்துமாரியம்மாளும் சேர்ந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நகராட்சி சுகாதார செவிலியர் மூலம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் இருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு மருந்துகள் கொடுத்த போது, தனக்கு சோர்வாக இருப்பதாக தெரிவித்த முத்துமாரியம்மாளுக்கு சில ஓஆர்எஸ் உப்புக்கரைசல் பாக்கெட் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை வாங்கியவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மூன்றில் இரண்டு பாக்கெட்டுகள் காலாவதியானவை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதில் தயாரிக்கப்பட்ட மாதக்குறிப்பாக கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதமென்றும், தயாரிக்கப்பட்ட தேதியில் இருந்து 18 மாதங்கள் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மருத்துவ மொத்தக் கிடங்கிலிருந்து சப்ளை செய்யப்பட்ட உப்புக்கரைசலில் இந்த பாக்கெட்டுகள் இருந்துள்ளது. அதை மாற்றித் தருவவதாகவும் தெரிவித்ததாக முத்துமாரியம்மாளின் கணவர் தெரிவித்தார். தொடர்ந்து நகராட்சி சுகாதார அலுவலர் ராஜசேகரனிடம் கேட்டபோது இதுபோன்று இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும், வந்துள்ள அனைத்து பாக்கெட்டுகளும் சோதனை செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்தாக கூறப்படுகிறது. தொடர்ந்து நகராட்சி சேர்மன் மல்லிகா, சுகாதார அலுவலர் ராஜசேகரன் உள்பட நகராட்சி அதிகாரிகள் வீரவாஞ்சி நகருக்கு நேரில் சென்று முத்துமாரியம்மாளுக்கு உப்புக்கரைசல் பாக்கெட் வழங்கப்பட்ட அன் று அப்பகுதியில் வழங்கப்பட்ட உப்புக்கரைசல் பாக்கெட் அனைத்தையும் வாங்கி சோதித்தனர்.

இதில் வேறு யாருக்கும் இதுபோன்ற பாக்கெட் கிடைக்கவில்லை என்று ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் நம்பிக்கையோடு வாங்கி உட்கொள்ளும் மருத்துவ பொருட்களை விநியோகம் செய்யும் முன்னர் நன்றாக சோதித்து பார்த்த பின்னர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Friday, 23 April 2010 07:14
 

உடுமலையில் செயல்படும் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை! மருத்துவ கழிவை விதிமுறை மீறி கொட்டக்கூடாது

Print PDF

தினமலர் 22.04.2010

உடுமலையில் செயல்படும் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை! மருத்துவ கழிவை விதிமுறை மீறி கொட்டக்கூடாது

உடுமலை : அபாயகரமான மருத்துவ கழிவுகளை விதிமுறையை மீறி பொதுக்கழிவுகளுடன் கொட்டும் மருத்துவமனைகள் குறித்து அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி கண்டறிந்துள்ளனர். சம்மந்தப் பட்ட நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

உடுமலை நகர பகுதியில் படுக்கை வசதியுடன் கூடிய 21 மருத்துவமனைகள், 30க்கும் அதிகமான கிளினிக் மற்றும் 15 மருத்துவ பரிசோதனை மையங்கள் உள் ளன. இங்கிருந்து மருத்துவ கழிவுகள் சுகாதார விதிகளின் படி அகற்றப்படுவதில் லை. பிற பொதுக்கழிவுகளுடன் சேர்த்து மருத்துவ கழிவுகளும் கொட்டப்படுகிறது. நாள்தோறும் பல நூறு கிலோ மருத்துவ கழிவுகள் நேரடியாக குப்பை தொட்டிகளில் திறந்த வெளியில் கொட் டப்படுவதால் துர்நாற்றமும், தொற்று நோய்களும், குப்பைகளை அள்ளும் பணியாளர்கள் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகும் அவல நிலையும் உள்ளது.

திருப்பூர் மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலின்படி, மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் மூலம் மருத்துவ கழிவுகள் முறையாக அகற்றப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், உடுமலையில் இயங்கும் பெரும்பாலான மருத்துவமனைகள் இந்த விதிமுறையை பின்பற்றுவதில்லை. செலவுகளை குறைக்க பொது குப்பை தொட்டியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கதையாக உள்ளது.

இதையடுத்து, நகராட்சிநகர் நல பிரிவு அதிகாரிகள் உடுமலையில் இயங்கி வரும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மருத்துவ கழிவுகளை நேரடியாக நகராட்சி குப்பை தொட்டிகளில் கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இவ்வாறு கொட்டுவது பொதுசுகாதார சட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் கையாளுதல் விதியின் கீழ் குற்றமாகும்.

மருத்துவ கழிவுகளை நகராட்சி கழிவுகளோடு சேர்க்காமல் மாவட்டத்திற்கென அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட நிறுவனத்தின் மூலம் அப்புறப்படுத்த வேண்டும். சட்டங்களை பின்பற்றாத மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.முகவரி, தினசரி உற்பத்தியாகும் மருத்துவ கழிவுகளின் அளவு, மருத்துவம் அல்லாத கழிவுகளின் அளவு, படுக்கைகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை ஆகிய தகவல்களை நிரப்பி நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். இவ்வாறு நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த பிப்., மாதம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனைகள், கிளினிக் மற்றும் பரிசோதனை மையங்கள் பல மாதங்களாகியும் எந்த பதிலும் அளிக்கவில்லை. நகரின் முக்கிய வீதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு தொழிலாளர் பிற கழிவுகளோடு சேர்ந்து கிடந்த பயன்படுத்தப்பட்ட 'சிரிஞ்ச்' குத்தி நோய்த்தாக் குதலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. துப்புரவு தொழிலாளர்கள் மருத்துவமனை இயங்கும் பகுதிகளில் குப்பை அள்ள தயக்கம் காட்டி மருத்துவ கழிவுகள் பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து இரண்டாம் கட்டமாக நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர் நல அலுவலர்கள் குழு நகரப்பகுதியில் ஆய்வு நடத்தினர். பழநி ரோடு, அனுஷம் நகர், வெங்கடகிருஷ்ணா ரோடு உட்பட இடங்களில் பொது கழிவுகளுடன், ரத்தகறைகளுடன் கூடிய பஞ்சு, காட்டன் துணிகள், ஊசியுடன் கூடிய சிரஞ்ச், சிறுநீர்பைகள், குளுக்கோஸ் ஏற்றப்பட்ட செட்கள், பயன் படுத்தப்பட்ட ரத்தகறைகளுடன் கூடிய வென்பிளான், நஞ்சுக்கொடி போன்ற அபாய மருத்துவ கழிவுகள் கொட்டப் பட்டிருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் குழுவினர் மருத்துவமனை மற்றும் பிற நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகித்து வருகின்றனர். உரிய விளக்கத்தை மூன்று நாட்களுக்குள் வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர் நல பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: உடுமலை நகரில் இயங்கி வரும் மருத்துவமனைகள் முறையாக மருத்துவ கழிவுகளை அகற்றாததால் நோய் தொற்று மற்றும் திடக்கழிவு மேலாண்மையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. பல முறை நோட்டீஸ் அளித்தும் சம்மந்தப்பட்ட நிர்வாகங்கள் கண்டுகொள்ளவில்லை. மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Last Updated on Thursday, 22 April 2010 07:20
 


Page 288 of 519