Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நகர சுகாதார செவிலியர்கள் மண்டல செயற்குழு கூட்டம்

Print PDF

தினமலர் 16.04.2010

நகர சுகாதார செவிலியர்கள் மண்டல செயற்குழு கூட்டம்

திருவண்ணாமலை: நகராட்சி, மாநகராட்சி சுகாதார செவிலியர் சங்கத்தின் வேலூர் மண்டல செயற்குழு கூட்டம் தி.மலையில் நடந்தது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநில தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சீதாராமன் வரவேற்றார். நகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் குமரிமன்னன் உட்பட பலர் பேசினர். நகராட்சி ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் அரசு ஊழியர்களாக்க வேண்டும். சுகாதார துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நகரில் சுகாதார பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ளும் வகையில் சுகாதார பணிகளை தவிர தேர்தல் பணிகள் உட்பட இதர பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Last Updated on Friday, 16 April 2010 06:58
 

பெருந்துறையில் அனுமதிபெறாத மாட்டு இறைச்சிகடைகள் அகற்றம்: பேரூராட்சி நடவடிக்கை

Print PDF

மாலைமலர் 15.04.2010

பெருந்துறையில் அனுமதிபெறாத மாட்டு இறைச்சிகடைகள் அகற்றம்: பேரூராட்சி நடவடிக்கை

பெருந்துறை, ஏப். 15-

பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட ஈரோடுரோடு சந்தை எதிரில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் ஆறு மாட்டு இறைச்சிகடைகள் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த மாட்டிறைச்சி கடைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இருப்பதால் சுகாதார கேடும், அதிக அளவில் கழிவுகளை தேக்கி வைப்பதால் துர் நாற்றம், ஏராளமான ஈக்கள் பரவுவதாலும் மிகவும் இடையூறாக இருப்பதாக கூறி பேரூராட்சியினருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதன்பேரில் பெருந்துறை பேரூராட்சி நிர்வாகத்தினர் கடைகளை அகற்ற வேண்டும் என கடைக்காரர்களிடம் கூறியதால் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாங்கள் நீண்ட நாட்களாக அந்த இடத்தில் வியாபாரம் செய்து வருவதாகவும், அதனால் தற்போது கடையை அகற்றினால் தங்களது வருமானம் பாதிக்கும் எனக்கூறி வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2010 பிப்ரவரி 16-ந் தேதி பெருந்துறை பேரூராட்சிக்கு சாதகமாக தீர்ப்பாகியது. அதன்படி தீர்ப்புஅளிக்கப்பட்டதேதியில் இருந்து 15 நாட்களுக் குள் அந்த கடை உரிமையாளர்கள் பெருந்துறை பேரூராட்சி அனுமதி பெற்று பேரூராட்சியினால் அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் மட்டுமே கடைவைத்து கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால் பேரூராட்சியினரிடம்எந்தவிதமான அனுமதியும் பெறாத காரணத்தினால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்துறை அலுவலர்கள் மற்றும்பெருந்துறை போலீசுடன் பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் நாதவேதலிங்கம் மற்றும் அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சி கடைகளை அகற்ற முற்பட்டனர்.

அப்போது கடை உரிமையாளர்கள் தாங்களே அகற்றுவதற்கு ஒத்துழைப்பு தருவதாக கூறியதின் பேரில் கடைஉரிமையாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கடையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல்அலுவலர்நாதவேத லிங்கம் கூறும்போது, தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடிபேரூராட்சி அனுமதி பெறாத இந்த மாட்டிறைச்சிகடைகளை அகற்றுகிறோம். அவர்கள் பேரூராட்சியில் கடைகள் வைக்க அனுமதிபெற்ற பேரூராட்சியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் கடைகள் வைக்க அனுமதி கோரும் பட்சத்தில் உரிய அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.

Last Updated on Thursday, 15 April 2010 12:03
 

சென்னையில் காலரா இல்லை: மேயர் மா. சுப்பிரமணியன்

Print PDF

தினமணி 15.04.2010

சென்னையில் காலரா இல்லை: மேயர் மா. சுப்பிரமணியன்

சென்னை, ஏப்.14: சென்னையில் காலரா இல்லை, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில்புதன்கிழமை அவர் சோதனை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியது:

சென்னையில் விற்பனை செய்யப்பட்டுவரும் தரமற்ற பாக்கெட் குடிநீர், உணவுப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

புறநகர் பகுதிகளான திருவள்ளூர், செங்குன்றம், திருவொற்றியூர், மாதவரம், புழல் பகுதிகளிலிருந்து 175 பேர், கடந்த 5 நாள்களுக்கு முன்பு தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் வயிற்றுப்போக்குக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.

சாலை ஓரங்களில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள், தரமற்ற குடிநீர் ஆகியவற்றால்தான் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 165 மருத்துவமனைகள் மூலம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவைப்படுவபவர்களுக்கு குளோரின் மாத்திரைகள், வயிற்றுப்போக்குக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மண்டலம் 1, 2 ஆகியவற்றில் உள்ள சில பகுதிகளில் குடிநீரில் குளோரின் அளவு குறைந்துள்ளதால், உடனடியாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, மாநகராட்சி மூலம் வீடுவீடாக குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு உப்பு, சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

மழைக் காலத்தின்போதும், கோடை காலத்தின்போதும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் சாதாரணமாக 30 முதல் 40 நபர்கள் வரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது வழக்கமான ஒன்று. எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம், சென்னையில் காலரா இல்லை என்றார் மேயர்.

Last Updated on Thursday, 15 April 2010 10:08
 


Page 294 of 519