Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தரமற்ற, சுகாதாரமற்ற உணவுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிரடி சோதனை

Print PDF

தினமலர் 07.04.2010

தரமற்ற, சுகாதாரமற்ற உணவுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிரடி சோதனை

சென்னை : மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், வடசென்னையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், 550 கிலோ எடை கொண்ட தரமற்ற உணவுகள், தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.சென்னை நகரில், கோடை காலத்தில் சுகாதாரமற்ற குடிநீர் பாக்கெட்களின் விற்பனை அதிகரித்து விடும். அதேபோல, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக வடசென்னை பகுதிகளில், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், அப்பகுதி மக்கள் அடிக்கடி தொற்று நோய்களுக்கு ஆளாகிவருகின்றனர்.இது குறித்து, பொதுநலச்சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் மாநகராட்சியில் புகார் செய்து வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புளியந்தோப்பு மண்டலம்-3 உதவி சுகாதார அலுவலர் ராஜா தலைமையில், ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழு ஒன்று பூக்கடை பஸ் ஸ்டாண்டு, வால்டாக்ஸ் சாலை, அல்லிக்குளம், பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதிகள் மற்றும் புளியந்தோப்பு ஆகிய இடங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டது.இதில், 3,500 தரமற்ற குடிநீர் பாக் கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சாலையோரங்களில் தயாரித்து சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த பிரியாணி, போண்டா, பஜ்ஜி, பூரி உள்ளிட்ட 550 கிலோ எடைகொண்ட உணவுப் பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அவற்றின் மீது பிளீசிங் பவுடர் தூவி மாநகராட்சி குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டி அழிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஆறு நிறுவனங்களில் குடிநீர் பாக்கெட்டுக்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.நேற்று முன்தினம் மாநகராட்சியினர் நடத்திய சோதனையில் ஆறாயிரம் குடிநீர் பாக்கெட்டுகள், 250 சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'சென்னை நகரில் மாநகராட்சி சார்பில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, தரமற்ற உணவுப் பொருட்கள், தண்ணீர் பாக் கெட்டுகள் பறிமுதல் செய்து அழிக்கப் பட்டு வருகின்றன.இந்த சோதனை இனி தொடர்ந்து நடத்தப்படும். எனவே, சிறு கடை விற்பனையாளர்கள் தரமுள்ள உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.தரமற்ற பொருட் களை விற்பனை செய்து சோதனையில் சிக்குபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

Last Updated on Wednesday, 07 April 2010 06:34
 

தரமற்ற குடிநீர் பாக்கெட் விற்பனை

Print PDF

தினமலர் 07.04.2010

தரமற்ற குடிநீர் பாக்கெட் விற்பனை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தண்ணீர் தேவை அதிகரித்து இருப்பதால், தரமற்ற குடிநீர் பாக்கெட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேல் தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெயிலை மிஞ்சும் வகையில் வெயில் உக்கிரம் வாட்டி வருகிறது. மாவட்டத்தின் உள்ள நீர ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைவு காரணமாக விவசாய கிணறுகள், கிராம பகுதி குடிநீர் திட்டத்துக்கான போர்வெல் அனைத்திலும் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலை ஏற்பட்டுள்ளது.வெயில் உக்கிரம் காரணமாக குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடி வருகிறது. தண்ணீர் தேவையால் பாக்கெட், பாட்டில், கேன்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் குடிநீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.குடிநீர் விற்பனைக்கு ஐ.எஸ்.., தரம் உள்ளிட்ட பல்வேறு தர சான்று பெற்று, உரிய உரிமம் பெற்று விற்பனை செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் விற்பனையை அதிகரிப்பு காரணமாக தரமற்ற குடிநீர் விற்பனை மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது.

தரமற்ற பிளாஸ்டிக் பாக்கெட்டிகளில் சுத்திகரிப்பு இல்லாத குடிநீர் அடைக்கப்பட்டும், அதே போல் கேன்களில் தண்ணீர் அடைக்கப்பட்டும் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தரமற்ற குடிநீர் பாக்கெட்களை வாங்கி பருகும் போது, பிளாஸ்டிக் வாடை அடிக்கிறது. அதே போல் கேன்களிலும் அடைக்கப்படும் தண்ணீரும் ஒரு வித மணம் வருவதால், தண்ணீர் குடிக்க முடியாமல் மக்கள் அவதிப்படும் நிபைலயுள்ளது. விற்பனையை அதிகம் இருப்பதை பயன்படுத்தி தர்மபுரி மாவட்டத்தில் பல இடங்களில் தரமற்ற குடிநீர் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போல் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களும் தரமற்ற முறையில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்களில் பஸ் ஸ்டாண்டில் இது போன்ற விற்பனை நடந்து வருகிறது. 'சுகாதார துறையினர் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி தரமற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Last Updated on Wednesday, 07 April 2010 06:27
 

ஈரோட்டில் காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினமணி 06.04.2010

ஈரோட்டில் காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

ஈரோடு, ஏப். 5: ஈரோடு மாவட்டத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் காலாவதியான உணவுப் பொருள்கள், மருந்துகள், குளிர்பானங்கள், குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஈரோடு தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, காலாவதியான 22 குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மறுமுத்திரையிடாத 95 எடைக்கற்கள், தராசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக 95 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறி பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் நலத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Last Updated on Tuesday, 06 April 2010 10:06
 


Page 302 of 519