Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுத்தமானது மருதமலை அடிவாரம் செம்மொழி மாநாட்டு பணியில் 'ராக்'

Print PDF

தினமலர் 05.05.2010

சுத்தமானது மருதமலை அடிவாரம் செம்மொழி மாநாட்டு பணியில் 'ராக்'

பேரூர் : மருதமலை அடிவார பகுதியைச் சுற்றியுள்ள குப்பைகளை, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் தன்னார்வ அமைப்பு குழுவினர் நேற்று அகற்றினர்.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாதம் நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு வருவோர் மருதமலைக்கு வர விரும்புவர். மருதமலை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருக்கவும் வேண்டும் என கோயம்புத்தூர் குடியிருப்போர் விழிப்புணர்வு அமைப்பு (ராக்) விரும்பியது. இதையடுத்து, மருதமலை அடிவாரத்தில் தூய்மைப்பணி செய்ய விரும்பியது.

மருதமலை அடிவாரத்தில் நேற்று வடவள்ளி பேரூராட்சி, சோமையம்பாளையம் ஊராட்சி, ராக் அமைப்பு, நேசம் அமைப்பு, ஐடிசி, நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் ஆகியன சார்பில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. இதில், பஸ் டெப்போ, கோவில் படிக்கட்டு, பஸ் ஸ்டாப் பகுதி, ஓட்டல் மற்றும் சிறு, சிறு வியாபாரிகள் கடைகளிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்தனர். மக்கும்குப்பை, மக்காத குப்பைகளை சேகரிக்க பிளாஸ்டிக்கூடை, சாக்குகள் வழங்கப்பட்டன. இதில், ராக் நிர்வாகி ரவீந்திரன், வடவள்ளி பேரூராட்சி தலைவர் அமிர்தவல்லி, சோமையம்பாளையம் ஊராட்சி தலைவர் ராமலிங்கம், நேசம் அமைப்பு தலைவர் சண்முகசுந்தரம், பேரூராட்சி துணை தலைவர் சிவசாமி உள்பட பலர் பங்கேற்றனர். குப்பைகளை அகற்றும் பணியில், கிருஷ்ணா கல்லூரி, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, அமிர்தா, என்.ஜி.பி., கல்லூரிகளைச் சேர்ந்த 250க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் இப்பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Monday, 05 April 2010 06:12
 

எலிகளை ஒழிக்க மாநகராட்சி நடவடிக்கை : கமிஷனர் புதிய திட்டம்

Print PDF

தினமலர் 05.05.2010

எலிகளை ஒழிக்க மாநகராட்சி நடவடிக்கை : கமிஷனர் புதிய திட்டம்

சென்னை : பிளேக், லெப்டோ ஸ்பைரோசிஸ் நோய்களுக்கு காரணமான எலிகளை ஒழிக்க மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கமிஷனர் ராஜேஷ் லக்கானி கூறினார்.

நகரில் அதிகரித்து வரும் எலிகள், அரசு அலுவலகங்களில் உள்ள பைல் களை கடித்து நாசம் செய்கிறது. தானிய கிடங்குகளில் பெரும் பங்கை காலி செய்கிறது. மேலும், எலிகள் மூலம் பிளேக், லெப்டோ ஸ்பைரோசிஸ் போன்ற நோய்களும் பரவுகின்றன. இதனால் எலிகளை ஒழிக்க, நடவடிக்கை மேற்கொள்ள புதிய திட்டம் அறிவிக் கப்படும் என்று மேயர் பட்ஜெட்டில் அறிவித்தார்.

இதுகுறித்து, கமிஷனர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது: எலிகளை ஒழிக்க, 10, 15 நாட் களில் பிரபல நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் கோர உள்ளது. இதில் பல அயல்நாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தன. ஆனால், ஒரு எலியை பிடித்து ஒழிக்க 50 முதல் 60 ரூபாய் வரை கேட்டன. எனவே, மாநகராட்சி தரப்பில் உள்ளூர் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோர உள்ளது. உள்ளூர் நிறுவனங்களின் கருத்து மற்றும் செயல்திறனை ஆய்வு செய்து, மாநகராட்சிக்கு சாதகமான நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்படும். அதோடு, மத்திய அரசின் தானிய கிடங்குகளில் எலிகளை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கருத்துரு பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக, வடசென்னை பகுதிகளிலும், ஓட்டேரி நல்லா ஓரத்திலும், ரிப்பன் கட்டடத்திலும் கூட எலிகள் அதிகளவில் உள்ளன. நகரில் அமைக்கப்பட்ட செங்கற்களால் ஆன, மழைநீர் வடிகால் கால் வாய்களை எலிகள் சேதப்படுத்தின.இதையடுத்து, தற்போது கான் கிரீட் சுவரால் கட்டப்படுகிறது. கூவம் ஆற்றை சீரமைக்கும் பணியின் ஒரு கட்டமாக, ஆற்றின் ஓரம் இருந்த மாட்டுகொட்டகைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆற்றோரத்தில் மொத்தம் இருந்த 43 மாட்டு கொட்டகைகளில், கடந்த இரு வாரத்தில் 25 மாட்டு கொட்டகைகள் அகற்றப்பட்டன. இவ்வாறு கமிஷனர் கூறினார்.

Last Updated on Monday, 05 April 2010 06:09
 

குப்பைத் தொட்டியில் மருத்துவக்கழிவு கொட்டினால் அபராதம்:ஆணையர்

Print PDF

தினமணி 01.04.2010

குப்பைத் தொட்டியில் மருத்துவக்கழிவு கொட்டினால் அபராதம்:ஆணையர்

கோவை, மார்ச் 31: மருத்துவக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டினால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்படும் என்று, கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

÷இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

÷கோவை மாநகரப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த அதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள பொதுநிறுவனத்திடம் தான் ஒப்படைக்க வேண்டும்.

÷மாநகராட்சியின் குப்பைத் தொட்டிகளிலோ, சாக்கடையிலோ மருத்துவக் கழிவுகளைக் கொட்டக் கூடாது. அவ்வாறு செய்யும் மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

÷மருத்துவக் கழிவுகளை குப்பைத் தொட்டிகளில் கொட்டுவதால் துப்புரவுப் பணியாளர்களின் கைகளில் ஊசி, கண்ணாடி பாட்டில்கள் கிழித்து சிரமப்படும் சூழல் இருக்கிறது. மேலும் நோய் தாக்கும் அபாயமும் உள்ளது.

÷இதுதொடர்பான விவரங்களுக்கு 93622}55666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று, தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 01 April 2010 09:54
 


Page 304 of 519