தினமலர் 01.04.2010
பாதாள சாக்கடை திட்ட அதிகாõ‘கள் விளக்கம்
விழுப்புரம் : பாதாள சாக்கடைப் பணிகள் குறித்த புகார்களுக்கு திட்ட அதிகாரிகள் பதிலளித்தனர்.
நகர் மன்ற கூட்டம் முடிந்தவுடன், பாதாள சாக்கடைத் திட்டத்தில் பைப் உடைவது, சிலாப் கள் தரமற்றதாகவும், பைப் சிறிய அளவில் உள் ளது. சாக்கடைப் பள்ளங்களில் வாகனங்கள் சிக்கும் நிலை உள்ளது. வேலை நடப்பதை அதிகாரிகள் பார்ப்பதில்லை என நிருபர்கள் பலர் சேர்மன் ஜனகராஜிடம் கேள்வி எழுப்பினர். புகார்கள் எழுவது குறித்து, அருகிலிருந்த திட்ட அதிகாரிகளிடம் சேர்மன் ஜனகராஜ் விளக் கம் கேட்டார்.
உடனே நிருபர்களிடம் பாதாள சாக்கடைத் திட்ட அதிகாரிகள் அமல்ராஜ், கனகராஜ் கூறியதாவது: திட்டப் பணிகள் 10 இடங்களில் பரவலாக நடக்கிறது. சுழற்சி முறையில் பார்வையிட்டு தரமாக செய்து வருகிறோம். வண்டிமேடுபோன்ற பகுதிகள் தாழ்வாக இருந்ததால் அங்கு சாலை உயரத்திற்கு கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட் டது. சாலை உயர்த்தப் பட்டதால் தாழ்வாக தெரிகிறது. அவைகள் உயர்த்தி சரி செய்யப்படும். நகராட்சி அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கலாம்.
தற்போதைய மக்கள் தொகை பயன்பாட்டிற் கேற்ற வகையில் பாதாள சாக் கடை பைப் லைன் (8 அங்குலம்) அமைக்கப்படுகிறது. 30 ஆண்டுகள் வரை இவை நிலைத்து நிற்கும். எல்லா இடங்களில் சாதாரண நிலையில் கழிவு நீர் தாமாகவே செல் லும் வகையில் பைப் லைன் அமைக்கப் பட்டுள் ளது. ஆறு இடங்களில் பம்ப் அவுஸ் அமைத்து வெளியேற்றப் படும். 86 கிலோ மீட்டர் தொலைவு பைப் லைனில், 69 கிலோ மீட்டர் முடிக்கப்பட் டுள் ளது. 69 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது.
நிர்ணயித்துள்ள காலத் திற்குள் (அக்டோபர் மாதம்) திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு விடும். பைப் லைன் அமைத்த உடனே வாகனங்கள் செல்வதால் சேதம் ஏற்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். ஆஞ்சநேயர் கோவில் விழா வருவதால் அந்த சாலையில் இடையூறின்றி விரைவில் பணிகளை முடித்துவிட வேண்டும் என அதிகாரிகளிடம் சேர்மன் ஜனகராஜ் அறிவுறுத்தினார்.