Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகராட்சி ஊழியர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

Print PDF

தினமணி 27.03.2010

மாநகராட்சி ஊழியர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை, மார்ச் 26: மதுரை மாநகராட்சி ஊழியர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி, வெள்ளையன் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை, வாஸன் கண் மருத்துவமனை மற்றும் டூத்கேர் மையம் சார்பில் இந்த பரிசோதனை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முகாமை மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின், வாஸன் கண் மருத்துவமனை இயக்குநர் அஜித், கிரேஸ் பீட்டர் அறக்கட்டளைத் தலைவர் அமர்ஜோதிராதாபாய் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

மகளிர் மேம்பாட்டு இயக்குநர் (விஇஎம்சி) பா.ஸ்ரீலேகா தலைமை வகித்தார். முகாமில் 600 பேருக்கு கண் சிகிச்சையும், 400 பேருக்கு பல் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டன. டாக்டர்கள் பாலாஜி, சுதா பாலாஜி, சுகன்யா, சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநகராட்சித் தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், உதவி கமிஷனர் (வருவாய்) ரா.பாஸ்கரன், வாஸன் கண் மருத்துவமனை முதுநிலை பொது மேலாளர் சுந்தரமுருகேசன், மேலாளர் பன்னீர்செல்வம், வணிகவரி துணை ஆணையர் கனகவேல் மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 27 March 2010 07:44
 

ப.வேலூர் ஹோட்டலில் 5,000 தரமற்ற முட்டை அழிப்பு

Print PDF

தினமலர் 26.03.2010

.வேலூர் ஹோட்டலில் 5,000 தரமற்ற முட்டை அழிப்பு

.வேலூர்: .வேலூர் சுற்று வட்டாரத்தில் திடீர் ஆய்வு செய்த சுகாதாரத் துறையினர், ஹோட்டல்களில் தரமற்ற முறையில் பயன்படுத்தப்பட்ட 5,000 முட்டைகளை அழித்தனர்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சேகர் உத்தரவின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், தவி ஆய்வாளர் அடங்கிய குழு ப.வேலூர் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள இறைச்சிக் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.விற்பனை செய்யப்படும் இறைச்சி சுகாதார முறையில் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. உடைந்த முட்டைகள் பயன்படுத்தி ஆப்பாயில், ஆம்லேட் போன்றவை விற்பனை செய்வதாகவும் தகவல் கிடைத்தது.அங்கு, 20க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி 5,000 உடைந்த முட்டைகளை அலுவலர்கள் அழித்தனர். 'இதுபோன்ற தரமற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 26 March 2010 05:39
 

மேலப்பளையம் ஆட்டிறைச்சி கடைகளில் சோதனை பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி பறிமுதல் : போலி சீல்கள் கைப்பற்றப்பட்டன

Print PDF

தினமலர் 25.03.2010

மேலப்பளையம் ஆட்டிறைச்சி கடைகளில் சோதனை பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி பறிமுதல் : போலி சீல்கள் கைப்பற்றப்பட்டன

திருநெல்வேலி : மேலப்பாளையம் ஆட்டிறைச்சி கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி பிரிட்ஜில் இருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். அதிகாரிகளை ஏமாற்ற வைக்கப்பட்டிருந்த போலி முத்திரைகளையும் கைப்பற்றினர். நெல்லை மாநகரில் 50க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி கடைகள் உள்ளன. மேலப்பாளையத்தில் மட்டும் 30 கடைகள் உள்ளது. கடைகளில் வைத்து ஆடுகள் வெட்டும் போது அதில் உள்ள கழிவுகள் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதற்காக மாநகராட்சி சார்பில் மேலப்பாளையத்தில் ஆடறுப்பு மனை அமைக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் இங்கு ஆடுகளை கொண்டு வந்து வெட்டி சீல் வைத்து அதன் பிறகு தான் கடைகளுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்யவேண்டும். இங்கு வெட்டப்படும் ஆடுகளுக்கு தலா ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான வியாபாரிகள் ஆடுகளை ஆடறுப்பு மனைக்கு கொண்டு செல்லாமல் கடைகளிலேயே வெட்டி விடுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி கலுசிவலிங்கம், மேலப்பாளையம் உதவிக்கமிஷனர் கருப்பசாமி தலைமையில் உணவு ஆய்வாளர்கள் ஏ.ஆர்.சங்கரலிங்கம், காளிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் சாகுல்ஹமீது, முருகேசன், ஆறுமுகம், வேலாயுதம், இளநிலைப் பொறியாளர்கள் பிரதீப், இளங்கோ மற்றும் ஊழியர்கள் மேலப்பாளையம் ஆட்டிறைச்சி கடைகளில் நேற்றிரவு திடீர் சோதனை நடத்தினர்.

ஆசாத் ரோட்டில் உள்ள காசிராஜன் கடையில் ஆடுகள் அங்கேயே அறுக்கப்பட்டு கழிவுகள் அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்பட்டிருந்தது. மேலும் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியையும், வியாபாரத்திற்காக வைத்திருந்தார். இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போல் சாயன்தரகன் தெருவில் உள்ள அப்துல்லா கடையில் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 20க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனை நடந்தது.

வியாபாரிகள் தங்களது ஆடுகளை ஆடறுப்பு மனைக்கு கொண்டு செல்லும் போது குத்தகைதாரர்கள் அந்த இறைச்சிகளில் சீல் வைப்பர். ஆனால் ஒரு சிலர் ஆடுகளை கொண்டு செல்லாமல் கடைகளிலேயே வெட்டி, அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக தாங்கள் வைத்துள்ள போலி சீல் மூலம் முத்திரை குத்தி விடுகின்றனர். இந்த சோதனையில் காசிராஜன், அப்துல்லா கடைகளில் இருந்து போலி சீல் மற்றும் பேடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மருந்து தெளித்து அழிப்பு : இந்த சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை கிருமி நாசினி மருந்து தெளித்து மாநகராட்சி அதிகாரிகள் லாரியில் ஏற்றிச் சென்றனர்.

Last Updated on Thursday, 25 March 2010 09:54
 


Page 309 of 519