Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பண்ருட்டி நகராட்சியை கண்டித்து இறைச்சி வியாபாரிகள் கடையடைப்பு

Print PDF

தினமலர் 25.03.2010

பண்ருட்டி நகராட்சியை கண்டித்து இறைச்சி வியாபாரிகள் கடையடைப்பு

பண்ருட்டி: பண்ருட்டியில் ஆட்டு இறைச்சி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டில் நகராட்சி சார்பில் நவீன ஆடு வதைக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு ஆட்டை பரிசோதித்து அறுத்து முத் திரையிட 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் ஆட்டு இறைச்சி வியாபாரிகள் வதைகூடத்தில் ஆடுகளை அறுக்காமல் தாங்களாகவே அறுத்து வியாபாரம் செய்து வந்தனர்.நகராட்சி ஊழியர்கள் கடந்த வாரம் ஆட்டு இறைச்சி கடைகளில் திடீர் சோதனை நடத்தி நகராட்சி முத்திரை இல்லாத ஆட்டு இறைச்சிகளை பெனாயில் ஊற்றி அழித்தனர்.இதனையடுத்து ஆட்டு இறைச்சி வியாபார சங்க நிர்வாகிகள் ஆடு அறுத்து முத்திரையிட கடலூர், நெல்லிக்குப்பம் உள் ளிட்ட நகராட்சிகளில் குறைந்த கட்டணம் மட் டுமே வசூல் செய்வதாகவும், பண்ருட்டி நகராட்சியில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண் டித்து நேற்று ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி தினமலர் நிருபரிடம் கூறியதாவது:பண்ருட்டி நகராட்சியில் நவீன ஆட்டு இறைச்சி புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு ஆடுகளை அறுப்பதற்கு முன் கால்நடை மருத்துவரால் சோதனை செய்த பின்பே நகராட்சி முத்திரையிடப்படுகிறது. நகர மன்ற தீர்மானத்தின் படி 100 ரூபாயாக இருந்த முத்திரை கட்டணம் தற் போது 40 ரூபாயாக குறைக் கப்பட்டுள்ளது. அதன்படி தான் கட்டணம் வசூலிக் கப்படுகிறது என்றார்.

Last Updated on Thursday, 25 March 2010 08:23
 

செம்மொழி மாநாட்டுக்காக ரூ.1.5 கோடியில் செயல்திட்டம்: சுகாதாரத்துறை துணை இயக்குனர்

Print PDF

தினமலர் 24.03.2010

செம்மொழி மாநாட்டுக்காக ரூ.1.5 கோடியில் செயல்திட்டம்: சுகாதாரத்துறை துணை இயக்குனர்

கோவை: மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு, 1.5 கோடி ரூபாய் மதிப்பில் சுகாதார மேம்பாடு குறித்த செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது; அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது: டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்கும் வழிமுறை அறிந்து அதை செயல்படுத்தினால், நோய்களை தவிர்க்கலாம்.

கொசு உற்பத்தியை தவிர்க்க வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். தண்ணீரை ஒரு வாரத்துக்கு மேல் சேமித்து வைக்கும் போது, போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்; சேமித்து வைக்கும் நீரில் 'டெனிபாஸ்' மருந்தை கலப்பதன் மூலமும், வீடுகளில் அதிகம் நீர் தேங்கும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்வது மற்றும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலமும் கொசு உற்பத்தியை தடுக்கலாம். உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் ஜூன் 27 வரை கோவையில் நடக்கிறது. இதை முன்னிட்டு, மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், சுகாதாரப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 1.5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, கொசு மருந்து தெளிக்கும் பணியாளர்கள் 120 பேரை பணிக்கு எடுத்து, நூறு நாட்களுக்கு அவர்களை இப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுப்புற தூய்மை, சுகாதார சூழ்நிலையை ஏற்படுத்தி கொசு இல்லாத நகராக கோவையை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்துடன், குடிநீர், உணவு பொருட்களின் தரத்மேம்படுத்தவும், ஈக்களை அழிக்கவும், சுகாதாரமான உணவு வகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு, நகரில் உள்ள உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து ஓட்டல்கள், சிற்றுண்டி விடுதிகள், நடைபாதைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்; சுகாதாரமற்ற உணவு விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப் படும் இந்நடவடிக்கைகளால், செம்மொழி மாநாட்டுக்கு வருவோரின் சுகாதாரத்தை பாதுகாக்க முடியும். தனி நபர்களும், தங்கள் இருப்பிடம், சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். மாவட்டத்தில், கடந்த 2006ல் 3,642 பேர் டெங்கு, சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மாவட்ட சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் 2007 மற்றும் 2008ல் இது அடியோடு ஒழிக்கப்பட்டது; 2009ல் 10 பேர் மட்டுமே இந்நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். குடிநீரை பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் திடக்கழிவு மேலாண்மையை முறையாக பின்பற்றினால், கொசு உற்பத்தியை அடியோடு அழிக்க முடியும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 24 March 2010 10:41
 

கெட்டுப்போன ஆட்டு இறைச்சி விற்றால் கடும் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமலர் 24.03.2010

கெட்டுப்போன ஆட்டு இறைச்சி விற்றால் கடும் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை

தஞ்சாவூர்:இறந்து போன ஆடுகளை விற்பனை செய்யும் இறைச்சி கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சை நகராட்சி ஆணையர் நடராஜன் தெரிவித்தார்.தஞ்சை நகர பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான ஆடு அறுப்பு இடத்தில் ஆடுகளை வதை செய்யாமல் தெருவின் பல இடங்களில் ஆடுகள் அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து ஆணையர் நடராஜன் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் அர்ஜீன்குமார் மற்றும் உணவு ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் நகர பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் ஒரு இறைச்சி விற்பனை நிலையத்தில் இறந்து போன ஆடுகள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 60 கிலோ எடை கொண்ட இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப் பட்டது. இவற்றின் மதிப்பு ரூபாய் 17 ஆயிரத்து 200 ஆகும்.தஞ்சை நகராட்சிக்கு சொந்த மான ஆடுகள் அறுப்பு மையத்தில் மட்டுமே ஆடுகள் வதை செய்ய வேண்டும். இதைத் தவிர சாலை ஓரங்களில் ஆடுகள் வதை செய்து பொதுமக்களின் நலனை பாதிக்கும் வகையில் இறைச்சி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் நடராஜன் கூறினார்.

Last Updated on Wednesday, 24 March 2010 09:57
 


Page 310 of 519