Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திருச்சி, ‘டெங்கு’ காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் தீவிரதடுப்பு எடுக்க வேண்டும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவு

Print PDF

தினத்தந்தி           23.10.2013

திருச்சி, ‘டெங்கு’ காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் தீவிரதடுப்பு எடுக்க வேண்டும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவு

‘டெங்கு’ காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவிட்டார்.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பொதுமக்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் ஜெயா தலைமை தாங்கினார். கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 68 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பார்வையிட்ட மேயர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிடம் உத்தரவிட்டார்.

டெங்கு காய்ச்சல் அறிகுறி

திருச்சி மாநகராட்சி முழுவதும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. டெங்கு அறிகுறிகள் தெரிய வந்தால் அப்பகுதியில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் தண்ணீரை திறந்த நிலையில் சேமித்து வைக்கக்கூடாது.

தடுப்பு நடவடிக்கைகள்

மாநகரின் எந்த பகுதியிலும் தொடர் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் மாநகராட்சி முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை அந்தந்த கோட்ட உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் தனி கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக், நகர் நல அலுவலர் அல்லி, செயற்பொறியாளர்கள் அருணாச்சலம், நாகேஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு பணி

Print PDF

மாலை மலர்            22.10.2013

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு பணி
 
மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு பணி

சென்னை, அக்.22- சென்னை மாநகரில் 16 சிசு சீரமைக்கும் பிரிவு அமைப்பதற்கு ரூ. 2 கோடியே 40 லட்சம் அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நேற்று வடபழனி 24 மணி நேர அவசர மகப்பேறுகால கவனிப்பு மருத்துவமனையில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சிசு சீரமைப்பு பிரிவினை தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சியில் 24 மணி நேர அவசர பேறுகால மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றிற்கு 18,000 குழந்தைகள் பிறக்கின்றன. குறைந்த எடை, குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் பிறப்பின் போது ஏற்படும் மூச்சுத் திணறல் போன்ற உடல்நலம் குன்றிய சிசுக்களின் உடனடி பராமரிப்புக்கு, சிசு பராமரிப்பு பிரிவு ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். சிசு சீரமைப்பு பிரிவு அமைப்பதன் மூலம் பச்சிளங்குழந்தை இறப்பு விகிதம் கணிசமாக குறையும்.

வடபழனியில் 24 மணி நேர அவசர பேறுகால கவனிப்பு மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட் டுள்ளது. மைய பிராணவாயு அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஆணையாளர் விக்ரம் கபூர், துணை ஆணையர் டிஆனந்த், தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், மண்டலக் குழு தலைவர் எல்.ஐ.சி.எம்.மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

சங்ககிரி பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Print PDF

தினகரன்         22.10.2013

சங்ககிரி பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

சங்ககிரி, :  சங்ககிரி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக ஒருங்கிணைந்த துப்புரவு பணி நடந்தது.

தற்போது நிலவி வரும் மழைக்காலத்தையொட்டி நகர் பகுதிகளில் பயன்பாடில்லாத இடங்களிலும், சாக்கடை நீர் தேங்கும் இடங்களில் புல், பூண்டுகள் அடர்ந்து வளர்ந்து வருகிறது. இதனால் சாக்கடை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. இதனால் மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா, டைபாய்டு பொது மக்களை தாக்குகிறது.

இதனால் தடுப்பு நடவடிக்கையாக சங்ககிரி பேரூராட்சி தலைவர் செல்லப்பன் தலைமையில் ஒருங்கிணைந்த துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி நகர் பகுதிகளில் புல் பூண்டுகள் அகற்றுதல், சாக்கடைகளை சுத்தம் செய்து கொசு மருந்து அடித்தல், குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து புகை அடித்தல் ஆகியன பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

 


Page 32 of 519