தட்டார்மடம் கடைகளில் சுகாதார துறையினர் சோதனை
Monday, 22 March 2010 10:00
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 22.03.2010 தட்டார்மடம் கடைகளில் சுகாதார துறையினர் சோதனை
பெரியதாழை : தட்டார்மடம் பகுதியில் சுகாதார துறையினரின் தனிப்படையினர் வியாபார கடைகளில் சோதனை நடத்தினர். தட்டார்மடம், இடைச்சிவிளை, பூச்சிக்காடு, நடுவக்குறிச்சி மற்றும் முதலூர் பகுதிகளில் இந்த சோதனை நடந்தது. சுகாதாரதுறை துணை இயக்குநர் உமா உத்திரவின் பேரில், வட்டார சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில், ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், ரெஜீனால்டு, மந்திரதாசன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் இப்பகுதி கடைகளில் சோதனை நடத்தினர். உணவு பொருட்களில் கலப்படம் செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடந்தது. வியாபார கடைகளில் உள்ள கடலைபருப்பு, துவரம்பருப்பு போன்ற உணவு பொருட்களை மாதிரி எடுத்து கலப்படம் உள்ளதா? என்று கண்டறிய பகுப்பாய்வு கூடத்திற்கு சுகாதார துறையினர் அனுப்பிவைத்தனர். மேலும் உணவு பொருட்களில் கலப்படம் உள்ளது என்று தெரிந்தால் கலப்பட தடை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார தனிப்படையினர் எச்சரித்துள்ளனர்.
|
உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் பயனற்றுள்ள நவீன கட்டண கழிவறை
Monday, 22 March 2010 09:46
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 22.03.2010 உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் பயனற்றுள்ள நவீன கட்டண கழிவறை
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் புதிய தாக கட்டி முடிக்கப்பட்ட கட்டண கழிவறை பயனற்றுக் கிடப்பதால் பொதுமக்கள் அவதிடைந்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதி யில் பயணிகள் வசதிக்காக கழிப்பிடம் உள்ளது. இதில் ஆண்கள் பயன்படுத்தும் கழிப் பறைக்கு மேல் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து, அதன்மேல் வைக்கப்படுள்ள தொட் டியி லிருந்து தண்ணீர் மழை போல் கொட் டுகிறது. இதனால் சிறுநீர் கழிக்க செல்பவர்கள் கழிப்பிடத் திற்குள் சென்று வெளியே வரும் போது உடைகள் நனைந் துவிடும் அவல நிலை உள்ளது. மேலும் பஸ் நிலையத் தின் மேற் குபகுதி யில் கேளிக்கை வரி மானிய திட்டம் 2008-2009ம் ஆண்டு நிதியில் 5 லட்சம் ரூபாய் செலவில் நவீன கட்டண கழிவறை கட்டிமுடிக்கப் பட்டது.ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல் அதனை பேரூ ராட்சி நிர்வாகத்தினர் பூட்டி வைத்துள்ளனர். இந்த நவீன கழிவறையை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்துவிட பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Last Updated on Monday, 22 March 2010 09:48
ஓட்டல்களில் ஆய்வு
Friday, 19 March 2010 06:49
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமலர் 19.03.2010 ஓட்டல்களில் ஆய்வு
சாத்தூர்: சுகாதாரதுறை ஆய்வாளர்கள் சாத்தூர் ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர். தொழில் நுட்ப நேர்முக உதவியாளர் அலிபாத் தலைமையில் வட்டார சுகாதார மேற் பார்வையாளர் பரந்தாமன், சங்கிலியாண்டி, ஜெயசந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்களில் உணவு, குடிநீர் தரம் பற்றி ஆய்வுசெய்தனர். டீக்கடைகளில் கலப்பட தேயிலை தூளை கைப்பற்றி அழித்தனர
Last Updated on Friday, 19 March 2010 06:49
|
|
|
|
Page 313 of 519 |