Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

காரியாபட்டி கடைகளில் உணவு ஆய்வாளர்கள் சோதனை

Print PDF

தினமணி 18.03.2010

காரியாபட்டி கடைகளில் உணவு ஆய்வாளர்கள் சோதனை

காரியாபட்டி, மார்ச் 17: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் சில கடைகளில் உணவு ஆய்வாளர்கள் உணவுப் பண்டங்களை பரிசோதனை செய்தனர்.

உணவு ஆய்வாளர்களான போஸ், முகம்மது இஸ்லாம்ஷா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கராஜ் ஆகியோர், உணவு கலப்பட ஆய்வு மற்றும் மாதிரி உணவு சேகரித்தல் பணிகளை மேற்கொண்டனர். அதன்படி, பலசரக்குக் கடை ஒன்றில் கடலைப் பருப்பும், சூப்பர் மார்க்கெட்டில் துவரம் பருப்பும் மாதிரி எடுத்து, சென்னை உணவு ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

மணம் வீசுமா மாநகராட்சி கழிப்பிடம்?

Print PDF

தினமலர் 18.03.2010

மணம் வீசுமா மாநகராட்சி கழிப்பிடம்?

கோவை: கோவை மாநகராட்சி புதிய தொழில் நுட்பத்தால், மாநகராட்சி கழிப்பிடங்கள் மணம் வீசும் என சுகாதார துறை நம்புகிறது.

கோவை மாநகராட்சி நகர்நலத்துறை, நகரை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. பொதுக்கழிப்பிடங்களை நவீனப்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக, காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டில், முதல் டிராக்கில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை நவீனப்படுத்தியுள்ளது.சாதாரண முறையில் இயங்கிய கழிப்பிடம், 'ஓசோனைஸ்டு' தொழில் நுட்பத்தை புகுத்தி மாற்றியுள்ளனர். சிறுநீர், மலம் கழிக்க 18 கழிப்பறைகள் உள்ளன. கழிவுநீர் செல்லும் குழாயின் நுனிப்பகுதியில், நவீன வால்வு பொருத்தப்பட்டுள்ளது.இந்த வால்வு, கழிவுநீர் செல்லும் போது திறக்கும். கழிவு நீர் சென்றவுடன் மூடிக்கொள்ளும். கழிவுநீர் துர்நாற்றம் வெளியேறாது.

கழிப்பிடத்தின் மேற்பகுதியில் 'ஓசோன்' வாயுவை 24 மணி நேரமும் உமிழும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. ஓசோன் இயற்கையான ஆக்சிஜன். இதை சுவாசிப்பதால் பாதிப்பு இல்லை.பிளீச்சிங் பவுடர் தூவினால், அரை மணி நேரத்திற்கு மட்டும் குளோரின் காஸ் இருக்கும்; இது பாதிப்பை ஏற்படுத்தும்.இக்கழிப்பிடத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்து, நவீனப்படுத் தப்பட்டுள்ளது. மாநகராட்சி 19 ஆயிரம் ரூபாயை செலவு செய்துள் ளது. நேற்று முதல் இந்த கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் சுமதி கூறுகையில்,''கோவை மாநகராட்சியில் 250 பொதுக்கழிப்பிடங்கள் கட்டண முறையிலும், இலவசமாகவும் உள்ளது. முதற்கட்டமாக ஓசோன் தொழில் நுட்பத்தை இக்கழிப்பிடத்தில் பயன்படுத்தியுள்ளோம். ''இக்கழிப்பிடத்திலிருந்து துர்நாற்றம் வீச வாய்ப்புகள் இல்லை. சோதனைக்கு பின், அனைத்து கழிப்பிடங்களிலும் இதே தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும்,'' என்றார்.

Last Updated on Thursday, 18 March 2010 07:08
 

திருமயத்தில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினமலர் 18.03.2010

திருமயத்தில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு

திருமயம்:திருமயம் பகுதியில் சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். திருமயம் தாலுகாவில் மளிகை கடைகளில் தரமற்ற பொருட்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பவானி உமாதேவி உத்தரவின்பேரில் நச்சாந்துப்பட்டி வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் நாச்சியப்பன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் திருமயம், நச்சாந்துப்பட்டி, பனையப்பட்டி ஆகிய ஊர்களில் மளிகைக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

மேலும், அங்கு விற்பனைக்காக வைக்கப்படிருந்த மஞ்சள் தூள், சாம்பார் பொடி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, டீத்தூள் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து கிண்டியில் உள்ள உணவுப்பொருள் பகுப்பாய்வு நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் தரமற்ற கேசரி பருப்புகளை துவரம் பருப்புகளுடன் சேர்த்து விற்று வந்ததாகவும், இதனால் முடக்குவாதம் ஏற்படும் என்றும் அதிகாரி கள் கூறினர். ஏற்கனவே, திருமயத்தில் வெளிநாட்டு சாக்லேட், ஐஸ்கிரீம் விற்றதை கண்டறிந்து ஆய்வு நடத்திய அதிகாரி கள் அதன் விற்பனையை கடந்த வாரம் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Thursday, 18 March 2010 07:04
 


Page 314 of 519