Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஆட்டு இறைச்சி வியாபாரிகளுக்கு நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமணி 15.03.2010

ஆட்டு இறைச்சி வியாபாரிகளுக்கு நகராட்சி எச்சரிக்கை

பண்ருட்டி, மார்ச் 14: இறைச்சிக்கான ஆடுகளை கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்து முத்திரையிட்ட பின்னரே இறைச்சியை விற்பனை செய்ய வேண்டும் என பண்ருட்டி நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

÷பண்ருட்டி இரத்தினம்பிள்ளை மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன ஆடு வெட்டும் நிலையம் செயல்பாட்டில் உள்ளது. கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் முத்திரையிடப்பட்ட ஆட்டு இறைச்சிகளையே நகர எல்லைக்குள் விற்பனை செய்ய வேண்டும். பரிசோதனை செய்யப்படாமல் விற்பனை செய்யப்படும் ஆட்டு இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் சம்மந்தப்பட்ட வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Last Updated on Monday, 15 March 2010 10:03
 

மளிகை கடைகளில் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர் 15.03.2010

மளிகை கடைகளில் திடீர் ஆய்வு

முசிறி : முசிறியில் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.தண்டலைப்புத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் சத்தியவதி அறிவுரையின் பேரில் முசிறி பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் உணவு ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவு ஆய்வாளர் கண்ணன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரலிங்கம் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் விஜயக்குமார், இளங்கோவன், சோமசுந்தரம், ஆகியோர் கொண்ட குழுவினர் முசிறி கைகாட்டி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் உணவு விடுதிகளில் விற்க மற்றும் பயன்படுத்தப்படும் துவரம்பருப்பு, கடலைபருப்பு ஆகியவற்றின் தரம் தயாரிப்பு தேதி , காலாவதி தேதி, கடைகளில் மேற்கொள்ளப்படும் சுகாதாரம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சில கடைகளில் உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பாக்கெட் பருப்பு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மளிகை கடை உரிமையாளர்கள் கடை உரிமத்தை 2010 -2011 ஆம் ஆண்டிற்கு புதுப்பிக்கவும், இதுவரை உரிமம் பெறாதவர்கள் உடன் பேரூராட்சி அலுவலகத்தில் தொகை செலுத்தி கடை உரிமம் பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.

Last Updated on Monday, 15 March 2010 07:13
 

மளிகை கடைகளில் ஆய்வு

Print PDF

தினமலர் 15.03.2010

மளிகை கடைகளில் ஆய்வு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பகுதி மளிகை கடை பொருட்களின் தரம் பற்றி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெள்ளையன் தலைமையில் ஆய்வு செய் யப்பட்டது. தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். உணவு ஆய்வாளர் வால்மீகி, சுகாதார ஆய்வாளர்கள் ஹனிபா, கேசவன், ராஜசேகர், �ச்லவராஜ், தட்சணாமூர்த்தி, மற்றொரு ராஜசேகர் மற்றும்முதுகுளத்தூர் பேரூராட்சி ஊழியர்கள் உடன் சென்றனர்.

Last Updated on Monday, 15 March 2010 07:10
 


Page 318 of 519