தினமலர் 15.03.2010
ஸ்ரீமுஷ்ணத்தில் தீவிர கொசு ஒழிப்பு பணி துவக்கம்
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் தீவிர கொசு ஒழிப்பு திட்டத்தின் கீழ் கொசுவலை கட்டும் பணி துவக்கி வைக்கப் பட்டது.சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா உத்தரவின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தீவிர கொசு ஒழிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் காற்று போக்கிகளில் கொசு வலை கட்டும் பணி துவங்கியது.
இதன் துவக்க விழாவிற்கு ஆயங்குடி மருத்துவ அலுவலர் குலோத்துங்க சோழன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் பன்னீர்செல் வம், ஸ்ரீமுஷ்ணம் பொறுப்பு டாக்டர் ஆண்டனிராஜ் முன்னிலை வகித்தனர். கொசு வலைகளை பேரூராட்சி சார்பில் சேர்மன் செல்வி இலவசமாக வழங்கினார்.
தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்குட்பட்ட வீடுகளில் உள்ள செப்டிக் டேங்குகள் மீது கொசுவலை கட்டப்பட்டது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய் வாளர் கொளஞ்சி, முத்தமிழ்ச்செல்வி, சுதர்சனப்பிரியா, சத்யநாராயணன், மோகன்பாபு, மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.