Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பருப்பு வகைகளில் கலப்படமா? நகராட்சி அதிகாரிகள் சோதனை

Print PDF

தினமணி 12.03.2010

பருப்பு வகைகளில் கலப்படமா? நகராட்சி அதிகாரிகள் சோதனை

தென்காசி, மார்ச் 11: தென்காசியில் உள்ள பலசரக்கு கடைகளில் விற்பனைச் செய்யப்படும் பருப்பு வகைகளில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா, என்பது குறித்து வியாழக்கிழமை நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பொதுசுகாதாரத் துறை இயக்குநர் இளங்கோ, உணவு கலப்படத் தடுப்பு இணை இயக்குநர் கண்ணன் ஆகியோரின் உத்தரவை தொடர்ந்து, தென்காசி நகராட்சி ஆணையர் அப்துல்லத்தீப், உணவு ஆய்வாளர் முகம்மது அப்துல்ஹக்கீம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலசரக்கு கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

தென்காசி நகரில் மொத்த விற்பனை செய்யப்படும் பலசரக்கு கிட்டங்கிகளில் நடைபெற்ற சோதனையின் போது, துவரம்பருப்பு, கடலைபருப்பு போன்றவற்றில் கேசரிபருப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளதா, என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, இரண்டு பருப்பு மூட்டைகளிலும் தலா ஒரு மூடை வீதம் ஆய்விற்காக பறிமுதல் செய்தனர்.

கூலக்கடை பஜார் பகுதியில் சோதனையிடும் பணி நடைபெறுவது தெரிந்தவுடன் அனைத்து மொத்த விற்பனை நிலையங்களும் பூட்டப்பட்டு விட்டன.

கேசரிபருப்பு கலந்த பருப்பு வகைகளை உண்ணுவதால் முடக்குவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என உணவு ஆய்வாளர் ஹக்கீம் தெரிவித்தார்.

வள்ளியூர்

வள்ளியூர், பணகுடி, திசையன்விளை பகுதிகளிலுள்ள பலசரக்குக் கடைகளில் துவரம் பருப்பு, கடலைப் பருப்புகளில் கலப்படம் செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சுகாதாரத் துறை துணை இயக்குநரின் தனி உதவியாளர் அருணாச்சலம், வள்ளியூர் வட்டார சுகாதாரத் துறை மேற்பார்வையாளர் சேவியர், சுகாதார ஆய்வாளர்கள் ரகுபதி, சந்திரசேகரன், செந்தில் ஆகியோர் வள்ளியூர், பணகுடி, திசையன்விளை பகுதி பலசரக்குக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

வள்ளியூரில் 13 கடைகளிலும், பணகுடியில் 5 கடைகளிலும், திசையன்விளையில் 3 கடைகளிலும் ஆக மொத்தம் 21 கடைகளில் துவரம் பருப்பு, கடலை பருப்பு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். இவற்றை பகுப்பாய்வுச் செய்து கலப்படம் இருப்பதை உறுதி செய்த பின்னர் சம்பந்தபட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Friday, 12 March 2010 09:11
 

பொள்ளாச்சியில் கலப்பட பருப்பு குடோன் : நகராட்சி அதிகாரிகள் அதிரடி ரெய்டு

Print PDF

தினமலர் 12.03.2010

பொள்ளாச்சியில் கலப்பட பருப்பு குடோன் : நகராட்சி அதிகாரிகள் அதிரடி ரெய்டு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் சுகாதாரத்துறையினர் பருப்பு குடோன்களில் ரெய்டு நடத்தியதில் கலப்பட பருப்பு மாதிரி எடுத்தனர்.

பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் வரதராஜ் தலைமையில், உணவு ஆய்வாளர்கள் சுப்புராஜ், மோகனரங்கம், கோவிந்தராஜ் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் பருப்பு குடோன்களில் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர். மார்க்கெட் ரோடு, தெப்பக் குளம் வீதி, சத்திரம் வீதியில் உள்ள பருப்பு குடோன்களில் ரெய்டு நடத்தினர்.குடோனில் இருந்த பருப்பு வகைகளில் கலப்பட பருப்பு இருப்பதை உறுதி செய்தனர். ஒவ்வொரு மூட் டையில் இருந்தும் பருப்பு மாதிரி எடுத்தனர். மொத்தம் நான்கு இடங்களில் உணவு பொருள் ஆய்வுக்காக மாதிரி எடுத்தனர். மாவு மில்களில் ரெய்டு நடத்தி, கடலைமாவு மாதிரி எடுத்தனர்.நகராட்சி கமிஷனர் வரதராஜ் கூறியதாவது: பருப்பு வகைகளில் கலப்படத்தை தடுக்க பொதுசுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ உத்தரவிட்டுள்ளார். பருப்பு குடோன்களில் உணவு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.பருப்பு வகைகளில் கேசரி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. உணவு மாதிரியின் ஆய்வக அறிக்கை வந்த பிறகு கலப்பட பருப்பை விற்பனைக்காக வைத்திருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.கேசரி பருப்பு கலப்படத்தால் முடக்கு வாத நோய், கேன்சர், வயிறு தொடர்பான பிரச்னைகள், ஜீரண கோளாறு, நரம்பு தொபர்பான பிரச்னைகள் ஏற்படும். அதனால், கேசரி பருப்பு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலிவு விலையில் கிடைக்கும் கேசரி பருப்பை, நல்ல பருப்புடன் கலப்படம் செய்கின்றனர். இதனால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.கடைகளில் பருப்பு வகைகளை வாங்கும் போது, ஒரே நிறத்தில், ஒரே பருமன் உள்ள பருப்பு வகைகளை வாங்கினால் கலப்பட பொருட்களை தவிர்க்க முடியும்.இவ்வாறு, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கோலார்பட்டி, ஜமீன்ஊத்துக்குளி, கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தெற்கு ஒன்றியத்தில் கலப்பட பருப்பு தடுப்பு ரெய்டு நடந்தது. ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் மொத்தம் 12 கடைகளில் விற்பனை க்கு வைத்திருந்த கலப்பட கடலைமாவை அழித்தனர். கடைகளில் மாதிரி எடுக்கப்பட்ட துவரம்பருப் பை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

Last Updated on Friday, 12 March 2010 07:54
 

தேயிலையை தொடர்ந்து பருப்பில் கலப்படம் : சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர் 12.03.2010

தேயிலையை தொடர்ந்து பருப்பில் கலப்படம் : சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகை கடையில் விற்பனை செய்யப்படும் பருப்பில் கலப்படம் உள்ளதா என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் என்று ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் டீ தூள்களில் கலப்படம் சேர்க்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. பால் கட்டண உயர்வை தொடர்ந்து டீயின் கட்டணமும் உயர்த்தப்பட்டது.இருப்பினும் டீ தூளில் கலப்படம் செய்யப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் கிள்ளியூர் ஒன்றிய பகுதியில் அதிகாரிகள் திடீர் என்று ஆய்வு செய்து கலப்பட டீ தூள்களை கைப்பற்றி அழித்தனர். இந்நிலையில் பருப்பிலும் கலப்படம் சேர்க்கப்படுவதாக புகார்கள் சென்றன.இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் உத்தரவின் படி கிள்ளியூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் செல்வன், ரெஞ்சித்குமார், ஜீவகுமார் ஆகியோர் நட்டாலம், பம்மம், இரவிபுதூர்க்கடை, முள்ளங்கினாவிளை, கருங்கல் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படும் பருப்பு வகைகளை ஆய்வு செய்தனர்.கலப்பட பருப்பு வகை உணவுகளால் வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கலப்பட பருப்பு வகைகளின் வியாபார பயன்பாட்டை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

Last Updated on Friday, 12 March 2010 06:56
 


Page 321 of 519