Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

18 மளிகை கடைகளில் கலப்படம் பற்றி ஆய்வு

Print PDF

தினமலர் 12.03.2010

18 மளிகை கடைகளில் கலப்படம் பற்றி ஆய்வு

ஆத்தூர்: ஆத்தூர், தலைவாசல் சுற்றுவட்டார பகுதியில் 18 மளிகை கடைகளில் கலப்பட உளுந்து, துவரம் பருப்புகளை பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சுகாதார துணை இயக்குனர் நிர்மல்ஸன் உத்தரவுபடி நேற்று தலைவாசல், வீரகனூரில், மருத்துவ அலுவலர் செந்தில் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர். 18 மளிகை கடைகளில் இருந்து சந்தேகத்துக்குரிய உளுந்து, துவரம் பருப்பு பறிமுதல் செய்து உணவு பகுப்பாய்வு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சியில் பகுதியிலுள்ள மளிகை கடை, ஜெனரல் ஸ்டோர்களில் நகராட்சி உணவு, சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி பருப்பு மாதிரிகளை சேகரித்தனர்.

பொது சுகாதார துறையினர் கூறுகையில், ""வடமாநிலத்தில் விளையும் கேசரி பருப்புகளை குறைந்த விலைக்கு வாங்கி துவரம், உளுந்து பருப்புகளில் கலந்து விற்பனை செய்கின்றனர். கூடுதல் விலைக்கு பருப்பு விற்பதால் கலப்படம் இருப்பதாக அரசுக்கு புகார் வந்ததையடுத்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. ""கலப்படமான பருப்புகளை உண்பதால் கால் ஊனம், உடல் செயலிழப்பு, உடல் உபாதை, அஜீரண கோளாறு ஏற்படும். உளுந்து, துவரம் பருப்பு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். கலப்படம் செய்தது உறுதியானால், வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சந்திரசேகர், பாண்டியன், பாபு, உணவு ஆய்வாளர் சுந்தர்ராஜ், முனுசாமி, சுகாதார ஆய்வாளர் சேகர், தங்கராசு, செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 12 March 2010 06:41
 

பலசரக்கு கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் சுகாதார அதிகாரிகள் குழுவினர் திடீர் ரெய்டு: பருப்புகளில் கலப்படம் புகார் எதிரொலி

Print PDF

தினமலர் 12.03.2010

பலசரக்கு கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் சுகாதார அதிகாரிகள் குழுவினர் திடீர் ரெய்டு: பருப்புகளில் கலப்படம் புகார் எதிரொலி

திருநெல்வேலி:பலசரக்கு கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் துவரம்பருப்பு, கடலைப்பருப்புகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நெல்லை சுகாதார அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனை நடத்தி பருப்புகளை உணவு மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.சமையலுக்கு பயன்படுத்தப்படும் துவரம்பருப்பு, கடலைப் பருப்புகளில் கலப்படம் செய்து விற்கப்படுவதாக பல புகார்கள் அரசுக்கு சென்றன. சமையல் பருப்புகளில் கேசரி பருப்புகளை கலந்து விற்பனை செய்வதால் வாத நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பருப்புகளில் ஏற்பட்டுள்ள கலப்படத்தை கண்டு பிடிக்கும் வகையில் நேற்று தமிழகம் முழுவதும் சுகாதார அதிகாரிகள் பலசரக்கு கடை மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் திடீர் சோதனை நடத்தினர். சுகாதாரத்துறை இயக்குனர் இளங்கோ, உணவு கலப்பட தடைச் சட்ட இணை இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.

நெல்லை மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவுப்படி சுகாதார அதிகாரி கலுசிவலிங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர் காளிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சாகுல்ஹமீது, முருகன், சுப்பிரமணியன் அடங்கிய குழுவினர் பலசரக்கு கடைகள், ஓட்டல்கள், சில்லரை விற்பனை கடைகளில் இந்த சோதனையை நடத்தினர். பாளை., திருச்செந்தூர் ரோடு டிபார்ட்மென்டல் ஸ்டோரிலும் பருப்புகளை உணவு மாதிரியாக எடுத்து சோதனை செய்தனர். இதே போல் பாளை., பஸ்ஸ்டாண்டு டிபார்ட் மென்டல் ஸ்டோரிலும் பருப்பு உணவு மாதிரியாக எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டது. சோதனையின் போது கலாவதியான 10 கிலோ கடலைப்பருப்பு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லை மாவட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரான் மைதீன் தலைமையில் நெல்லை சுகாதார மாவட்டத்தில் 4 குழுக்களும், சங்கரன்கோவில் சுகாதார மாவட்டத்தில் 2 குழுக்களும் அமைக்கப்பட்டு சோதனை நடந்தது. சங்கர்நகர், மானூர், முக்கூடல், கல்லிடைக்குறிச்சி, களக்காடு, நான்குநேரி, ஆழ்வார்குறிச்சி, பணகுடி, வள்ளியூர், திசையன்விளை பகுதிகளில் இந்த சோதனை நடந்தது. துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் அருணாச்சலம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் ஜின்னா, பாலையா, அக்பர்அலி, ஜான்சன் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர்.

Last Updated on Friday, 12 March 2010 06:34
 

சேத்துப்பட்டில் 'கலப்பட' பருப்பு விற்பனை?10 மளிகை கடைகளில் 'சாம்பிள்' சேகரிப்பு

Print PDF

தினமலர் 12.03.2010

சேத்துப்பட்டில் 'கலப்பட' பருப்பு விற்பனை?10 மளிகை கடைகளில் 'சாம்பிள்' சேகரிப்பு

சேத்துப்பட்டு:சேத்துப்பட்டு மளிகை கடைகளில் கலப்பட பருப்பு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி 10 கடைகளில் பருப்பு சாம்பிள்களை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர்.சேத்துப்பட்டு நான்கு முனை சந்திப்பில் உள்ள செஞ்சி, வந்தவாசி, ஆரணி, போளூர் ரோட்டில் 40க்கும் அதிகமான மளிகைக் கடைகள் உள்ளன. இதில், பருப்பு வகைகள் உட்பட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விற்கப்படுகின்றன.

இந்நிலையில், சேத்துப்பட்டு மளிகை கடைகள் சிலவற்றில் கலப்பட பருப்புகள் விற்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து சுகாதாரத் துறைக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து, தி.மலை சுகாதாரத்துறை துணை இயக்குனர் சித்ரா உத்தரவின் பேரில், சேத்துப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் கீர்த்தி தலைமையில், வட்டார மேற்பார்வையாளர் சந்திரசேகர், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், அந்தோணிராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் குழுவாக சென்று சேத்துப்பட்டு பஜாரில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும் கலப்பட பருப்பு வகைகள் உள்ளதா என்று சோதனை நடத்தினர்.மேலும், 10 மளிகை கடைகளில் இருந்து பருப்பு வகைகளை சேகரித்து சென்னை கிண்டியில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது கலப்பட பருப்புதான் என்பது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மளிகை கடைக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார துறையினர் தெரிவித்தனர்.மளிகை கடைகளில் நடந்த அதிரடி சோதனையால் சேத்துப்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Friday, 12 March 2010 06:31
 


Page 322 of 519