Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கோதுமை மாவு தயாரிப்பாளர், விற்பனையாளர் உட்பட 3 பேர் மீது நெல்லை கோர்ட்டில் வழக்கு

Print PDF

தினமலர் 10.03.2010

கோதுமை மாவு தயாரிப்பாளர், விற்பனையாளர் உட்பட 3 பேர் மீது நெல்லை கோர்ட்டில் வழக்கு

திருநெல்வேலி: உணவு கலப்பட தடைச் சட்ட விதிகளுக்கு இணங்க தயாரிக்கப்படாத கோதுமை மாவு பாக்கெட்டுகளை தயாரித்த மற்றும் விற்பனை செய்த 3 பேர் மீது நெல்லை ஜே.எம்.5 கோர்ட்டில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.நெல்லை மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் மாநகர சுகாதார அதிகாரி கலுசிவலிங்கம் ஆலோசனையின் பேரில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் ஏ.ஆர்.சங்கரலிங்கம், மாநகராட்சி பகுதிகளில் விற்பனையாகும் பல்வேறு உணவுப் பொருட்களை உணவு மாதிரியாக எடுத்து சோதனை செய்து வருகிறார். அதன்படி கடந்த 2008ம் ஆண்டு செப்.25ம் தேதி உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம், பேட்டை பலசரக்கு கடையில் செய்யது மக்தும் அமீர் விற்பனை செய்த கோதுமை மாவு பாக்கெட்டுகளை உணவு மாதிரியாக எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பினார். இதில் உணவு கலப்பட தடைச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் குறிப்பிடவேண்டிய தயாரிப்பாளரின் முழு முகவரி குறிப்பிடாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

உணவு கலப்பட தடைச்சட்ட விதிகளை மீறி தயாரிக்கப்ட்ட கோதுமை மாவு பாக்கெட்டுகளை விற்பனை செய்த செய்யது மக்தும் அமீர் மற்றும் தயாரிப்பாளர்கள் விஜயா, சிவக்குமார் மீதும் உணவு கலப்பட தடைச் சட்ட விதிகளின் கீழ் வழக்கு தொடர சென்னை பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி இணை இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில் மேற்கண்ட மூவர் மீதும் நெல்லை ஜே.எம்.5 கோர்ட்டில் உணவு ஆய்வாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Last Updated on Wednesday, 10 March 2010 06:40
 

சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி பறிமுதல்

Print PDF

தினமலர் 09.03.2010

சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி பறிமுதல்

திருவாரூர், : திருவாரூரில் சுகாதாரமற்ற 20 கிலோ ஆட்டு இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.கலெக்டர் சந்திரசேகர் உத்தரவின்படி திருவாரூர் பகுதியில் உள்ள ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிக் கடைகள் தரமாக செயல்படுகிறதா என்று அவ்வப்போது நகராட்சி சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகளை கால்நடை உதவி டாக்டர் பரிசோதனை செய்து அனுமதித்த பின்னரே திருவாரூர் உழவர் சந்தைக்கு பின்புறம் உள்ள நகராட்சி ஆடு அறுக்கும் கூடத்தில் மட்டுமே வெட்டப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் நகராட்சி ஆணையர் சரவணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரது தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, பாலமுருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது திருவாரூர் அண்ணா சதுக்கம் பகுதியில் உள்ள ஒரு ஆட்டிறைச்சி கடையில் நகராட்சி ஆட்டிறைச்சி கூடத்தில் வெட்டப்படாத முத்திரை (சீல்) இல்லாத நோய்வாய்ப்பட்டு இறந்த 20 கிலோ அளவுள்ள இறைச்சியை விற்பனைக்காக ஒரு ஐஸ் பெட்டியில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் பழனியப்பன் ஆலோசனையின் பேரில் அழித்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.5 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து ஆணையாளர் சரவணன் கூறுகையில், முறையான பரிசோதனையினறி வெட்டப்படும் ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்படுவதோடு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் நோய்வாய்ப்பட்ட மற்றும் நகராட்சி சீல் இல்லாத இறைச்சியை பதப்படுத்தவோ, சேமித்து வைக்கவோ ஐஸ் கம்பெனிகள் ஏதேனும் உதவி செய்வதாக தெரியவந்தால் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Last Updated on Tuesday, 09 March 2010 07:07
 

பாதாளச் சாக்கடை இணைப்புத் தொட்டி: குறைந்த செலவில் கட்ட வலியுறுத்தல்

Print PDF

தினமணி 08.03.2010

பாதாளச் சாக்கடை இணைப்புத் தொட்டி: குறைந்த செலவில் கட்ட வலியுறுத்தல்

விருதுநகர், மார்ச் 7: விருதுநகரில நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி ரூ. 23.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிலையில் தெருக்களில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கான இணைப்புத் தொட்டிகள் கட்டும் பணிக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஒரு தெருவில் அனைத்து வீடுகளுக்கும் சாக்கடை இணைப்புத் தொட்டி கட்டும் பணியை குறைந்த செலவில் செய்ய நகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

விருதுநகரில் பாதாளச் சாக்கடை இணைப்புக் கட்டணமாக ரூ. 3,000 முதல் ரூ. 7,000 வரையில் நிர்ணயிகப்பட்டுள்ளது. தற்போது பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முடிந்த தெருக்களில், வீடுகளுக்கு இணைப்புத் தருவதற்கு, அந்தந்த வீடுகளுக்கு இணைப்புத் தொட்டிகள் கட்டுவது அவசியம். இப் பணியை தெருவாரியாக குறிப்பிட்ட ஒப்பந்ததாரரிடம் பொறுப்பை நகராட்சி ஒப்படைத்துள்ளது. வீடு தோறும் இணைப்புத் தொட்டி கட்டுவதற்கு தலா ரூ. 1,000 வசூலிக்கப்படுகிறது. இத் தொகைககு ரசீதும் தருவதில்லை எனக் கூறப்படுகிறது.

மேலுóம் வீடுகளிலிருந்து கழிவு நீர் செல்வதற்கான குழாய் இணைப்புக்குத் தேவையான பி.வி.சி பைப்புகள் உள்ளிட்டவற்றை வீட்டின் உரிமையாளரே வாங்கித் தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைப்புத் தொட்டி கட்டும் பணியை ஒரே ஒப்பந்ததாரர் மேற்கொóள்ளும்போது, இதற்கான செலவு குறைய வாய்ப்புள்ளது. இதற்குரிய மதிப்பீட்டைத் தயாரிக்க நகராட்சி நடவடிக்கை எடுóகக வேண்டும். கூடுதல் செலவை பொதுமக்கள் மீது திணிக்கக் கூடாது என்று விருதுநகர் 9-வது வார்டைச் சேர்ந்த விஜயபாண்டியன், பாஸ்கர் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

ஒவ்வொரு வீட்டுóக்கும் தனிப்பட்ட முறையில் இணைப்புத் தொட்டி கட்டுவதற்கு அனுமதித்தால், அதன் அளவு, அமைப்பில் வித்தியாசம் ஏற்பட்டால் பாதாளச் சாக்கடையில் கழிவு நீர் செல்வதில் சிக்கல் ஏற்படக் கூடும். இதைத் தவிர்க்கும் விதத்தில் இணைப்புத் தொட்டி கட்டுவதற்கு நியாயமான மதிப்பீடு தயாரித்து வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து நகராட்சித் தலைவர் கார்த்திகாவிடம் கேட்டபோது கூறியது:

விருதுநகரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கான இணைப்புத் தொட்டி கட்டுதல், ஏற்கெனவே இப் பணியைச் செய்துள்ள அனுபவம் மிகக் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் சிறிய இணைப்புத் தொட்டி கட்டுவது அவசியம். இதற்கான செலவு அதிகம் எனக் கருதிய ஓரிரு வார்டு பொதுமக்களை நேரில் சந்தித்து விளக்கினேன். பின்னர், அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

அதனால்தான் இணைப்புத் தொட்டிக்கு ரூ. 1,000 எனக் கட்டணம் வசூலிக்கபபடுகிறது. இத் தொகை கூடுதல் எனக் கருதுவோர், இணைப்புத் தொட்டியை அவர்களே கட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றார். இவ்வாறு செய்தால் தொட்டி ஒரே மாதிரியாக அமைவதில் பிரச்னை ஏற்படும். அதனால், தெருவில் இணைப்புத் தொட்டி கட்டும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் பேசி, மதிப்பீட்டைக் குறைக்க நகராட்சி முயற்சிக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Last Updated on Monday, 08 March 2010 10:56
 


Page 324 of 519