Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

இறைச்சி கடைகளில் ஆய்வு'

Print PDF

தினமலர் 02.03.2010

இறைச்சி கடைகளில் ஆய்வு'

தூத்துக்குடி : புதுக்கோட்டை இறைச்சி கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.புதுக்கோட்டையில் இறைச்சி விற்பனை மையங்கள், உணவாளர் உரிமம் பெற்றுள்ளாரா? இறந்து போன விலங்கின் இறைச்சி விற்கின்றனரா? சுகாதாரமான முறையில் சேகரிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து பொது சுகாதார சட்ட பிரிவுகளின் படியும், உணவு கலப்பட தடுப்பு சட்ட பிரிவுகளின் படியும் புதுக்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமிராஜா மற்றும் உணவு ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கினர்.

Last Updated on Tuesday, 02 March 2010 06:57
 

பன்றிகள் ஒழிப்பில் அலட்சியம் : நகராட்சி தலைவர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 02.03.2010

பன்றிகள் ஒழிப்பில் அலட்சியம் : நகராட்சி தலைவர் எச்சரிக்கை

தேவகோட்டை: ""பன்றிகளை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விட்டால், நாங்களே அப்பணியை செய்ய வேண்டி வரும்,'' என தேவகோட்டை நகராட்சி தலைவர் வேலுச்சாமி பேசினார். நகராட்சி கூட்டம் அவர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் பாலமுருகன், கமிஷனர் செழியன் முன்னிலை வகித்தனர்.

விவாதங்கள் வருமாறு.

வசந்தகுமாரி (காங்.,): தெருக்களில் கருவேல மரம் மண்டிக்கிடப்பதால், விஷ பூச்சிகள் உள்ளன. பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

அழகிமீனாள் (தி.மு..,): நகராட்சி கூட்டத்திற்கு முதல் நாள் மட்டும் சாக் கடை சுத்தம் செய் கின்றனர். தியாகிகள் ரோட்டில் மணல் குவியலாக உள்ளது.

மஞ்சுளாதேவி (தி.மு..,): கைலாசநாதபுரத்தில் கடந்த மாதமே ஆழ்துளை அமைக்கப்படும் என தெரிவித்தனர். இதுவரை பணிகள் துவங்கவில்லை.

திருநாவுக்கரசு (காங்.,): ஜீவா நகரில் முட்செடிகள் மண்டிக்கிடக்கின்றன.ராபீயா பீவி (.தி.மு..,): அருணாசல பொய்கையை சுற்றி, சுத்தம் செய்வதாக கூறி ஒரு மாதமாகியும் பணி நடக்கவில்லை.

செல்லமுத்து (.தி.மு..,): அதிகாரிகள் கூறும் வாக்குறுதிகளுக்கு தொடர் நடவடிக்கை இல்லை. வரி நிர்ணயம், பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

துணை தலைவர்: உயர் சிகிச்சை காப்பீடு திட்ட அட்டை, எனது வார்டில் ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை. பன்றிகள் தொல்லை பற்றி அதிகாரிகளிடம் கூறி அலுத்து விட்டது.

அன்பரசன் (சுயே.,): அரசு மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது.

தலைவர்: பன்றிகளை சுடுவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் நடவடிக்கை இல்லை. நாங்களே சுட்டு தள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

கமிஷனர்: விலங்குகள் நலவாரியத்தின் ஒப்பதல் கிடைத்த பின் நடவடிக்கை துவங்கும்.

கேசவன் (தி.மு..,): நான்கு கொசு மருந்து கருவியும் பழுதாகிவிட்டன. மின் கம்பங்கள் மோசமாக உள்ளன. அதில் ஏறி பழுது பார்க்க ஊழியர்கள் மறுக்கின்றனர். இவ்வாறு விவாதம் நடந்தது.

Last Updated on Tuesday, 02 March 2010 06:51
 

'உவ்வே' உணவு சப்ளையை தவிர்க்க ஓட்டல் தொழிலாளருக்கு பயிற்சி : சுகாதாரத்துறை ஏற்பாடு

Print PDF

தினமலர் 02.03.2010

'உவ்வே' உணவு சப்ளையை தவிர்க்க ஓட்டல் தொழிலாளருக்கு பயிற்சி : சுகாதாரத்துறை ஏற்பாடு

மதுரை : மதுரையில் ஒட்டல் மற்றும் கையேந்திபவன்களில் சுகாதாரமாக உணவு வழங்குதல் குறித்து தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி மார்ச் 6ம் தேதி துவங்க உள்ளது.
கோடை துவங்கிவிட்டதால், கூடவே குடிநீர் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும். ஓட்டல்கள் உட்பட உணவுவிடுதிகளில் உணவு பரிமாறுவோருக்கும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இதற்காக பொது சுகாதாரத் துறை சார்பில் ஓட்டல் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்காக மதுரையில் உள்ள ஓட்டல்கள், டிபன் சென்டர்கள், சாதாரண உணவு விடுதிகள், சாலையோர விடுதிகள், கையேந்திபவன்கள் போன்றவை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் இளங்கோவன் ஆலோசனையின் பேரில், மதுரையில் மாநகராட்சியின் நகர்நல அலுவலர் வி.சுப்ரமணியன் ஏற்பாடுகளை செய்து வருகிறார். துணைஇயக்குனர் பழனிச்சாமி உட்பட அதிகாரிகள் பயிற்சி அளிக்க உள்ளனர்.
முதற்கட்டமாக ஏ கிரேடு, பி கிரேடு ஓட்டல்களில் சமையல், பரிமாறுவோர், மேற்பார்வையாளர் என பணியாற்றும் தொழிலாளர்கள் 400 பேருக்கு இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது, மாலையில் மோசமான, நல்ல ஓட்டல்களுக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்படுவர். அடுத்த கட்டமாக டிபன்சென்டர்கள், மெஸ்களில் பணியாற்றுவோருக்கும், அடுத்து கையேந்தி பவன்களில் பணியாற்றுவோருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

மாநகராட்சி நகர் நல அலுவலர் கூறுகையில், ""சுகாதாரமற்ற உணவால் வயிற்றுக் கோளாறு, டைபாய்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க ஓட்டல்களில் உணவு பரிமாறும் தொழிலில் உள்ள அனைவருக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மார்ச், ஏப்ரலில் நடைபெறும் பயிற்சியில் தொழிலாளர்களுக்கு, சுகாதாரமான உணவு, தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம், ஸ்டோர் பராமரிப்பு, உணவு கழிவுகளை சுத்தம் செய்வது உட்பட பல தலைப்புகளில் பயிற்சி தரப்படும்'' என்றார்.

Last Updated on Tuesday, 02 March 2010 06:27
 


Page 330 of 519