தினகரன் 25.05.2010
திருவொற்றியூரில் குப்பையை பணமாக்கும் திட்டம் தொடக்கம்
திருவொற்றியூர், மே 25: திருவொற்றியூர் நகராட்சியில் குப்பையை பணமாக்குவோம் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தொடங்கி வைத்தார்.
திருவொற்றியூர் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், ‘குப்பையை பணமாக்குவோம்‘ என்ற திட்டத்தை, ரெகோபோத் தொண்டு நிறுவனம் மற்றும் ஐடிசி நிறுவனத்துடன் இணைந்து திருவொற்றியூர் நகராட்சி உருவாக்கியுள்ளது.
48 வார்டுகளிலும் சேரும் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை பொதுமக்களிடம் இருந்து மளிர் குழு மூலம் விலை கொடுத்து வாங்கி, அதை தொண்டு நிறுவன பொறுப்பாளர்களிடம் கொடுத்து பணமாக்குவதும், இந்த பணத்துக்கு சலுகை விலையில் ஐடிசி நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை பெற்று, அதை மகளிர் குழு மூலம் விற்பனை செய்து வேலைவாய்ப்பு பெறும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
திட்ட தொடக்க விழா திருவொற்றியூர் பெரியார்நகரில் நடந்தது. ரெகோபோத் தொண்டு நிறுவன இயக்குனர் மரியசூசை தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் வரவேற்றார். மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி திட்டத்தை துவக்கி வைத்தார். அமைச்சர் சாமி பங்கேற்பு