தினமலர் 01.06.2010
உடன்குடியில் 20 மூடை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு
உடன்குடி: உடன்குடியில் 20 மூடைகள் கழிவு பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி உடன்குடி டவுன் பஞ்.,பகுதியில் உள்ள தெருக்கள், சாலையோரங்களில் பொதுமக்களால் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பைகள் ஆகியவை டவுன் பஞ்.,பணியாளர்களால் சேகரித்து வைக்கப்பட்டு 20 மூடைகள் திருச்செந்தூர் டவுன் பஞ்.,க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து திருச்செந்தூர், உடன்குடி பஞ்.,செயல் அலுவலர்கள் மூலம் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு பிளாஸ்டிக் மறு சுழற்சி திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என உடன்குடி டவுன் பஞ்.,தலைவர் சாகுல்ஹமீது அறிவித்துள்ளார்.