தினமலர் 07.06.2010
கோவில்பட்டி நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு
கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சியில் தெருக்களில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குப்பைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்காத கழிவுப் பொருட்களான ஒரு டன் எடையுள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பேப்பர் கழிவுகளை தாழையூத்து சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும் நிகழ்ச்சி ஆணையாளர் விஜயராகவன் உத்தரவின் பேரில், நகர் மன்ற தலைவி மல்லிகா தலைமையில், சுகாதார அலுவலர் ராஜசேகரன் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர்கள் சீனிவாசன், சீனிராஜ் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.