Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவில்பட்டி நகராட்சி பகுதி பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்பட்டன

Print PDF

தினகரன் 09.06.2010

கோவில்பட்டி நகராட்சி பகுதி பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்பட்டன

கோவில்பட்டி, ஜூன்.9: கோவில்பட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் தாழையூத்து சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சியில் தெருக்கள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கழிவுகள் தாழையூத்து சிமென்ட் தொழிற்சாலைக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் விஜயராகவன் உத்தரவின்பேரில், நகராட்சி சேர்மன் மல்லிகா தலைமையில் சுகாதார அலுவலர் ராஜசேகரன் முன்னிலையில் தாழையூத்திற்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், சீனிராஜ் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.